461. என்பால் மிடைந்து நரம்பு வரிக்கட்டிச்
செம்பால் இறைச்சி திருந்த மனைசெய்து
இன்பால் உயிர்நிலை செய்த
இறையோங்கும்
நன்பால் ஒருவனை நாடுகின் றேனே
விளக்கவுரை :
462. பதஞ்செய்யும் பால்வண்ணன் மேனிப் பகலோன்
இதஞ்செய்யு மொத்துடல் எங்கும்
புகுந்து
குதஞ்செய்யும் அங்கியின் கோபந்
தணிப்பான்
விதஞ்செய்யு மாறே விதித்தொழிந்
தானே.
விளக்கவுரை :
[ads-post]
463. ஒழிபல செய்யும் வினையுற்ற நாளே
வழிபல நீராடி வைத்தெழு வாங்கிப்
பழிபல செய்கின்ற பாசக் கருவைச்
சுழிபல வாங்கிச் சுடாமல்வைத் தானே.
விளக்கவுரை :
464. சுக்கில நாடியில் தோன்றிய வெள்ளியும்
அக்கிர மத்தே தோன்றுமவ் வியோனியும்
புக்கிடும் எண்விரல் புறப்பட்டு
நால்விரல்
அக்கரம் எட்டும்எண் சாணது வாகுமே.
விளக்கவுரை :
465. போகத்துள் ஆங்கே புகுந்த புனிதனுங்
கோசத்துள் ஆகங்கொணர்ந்த
கொடைத்தொழில்
ஏகத்துள் ஆங்கே இரண்டெட்டு
மூன்றைந்து
மோகத்துள் ஆங்கொரு முட்டைசெய் தானே
விளக்கவுரை :