வர்மக் கலை

வர்மக் கலை

சித்த மருத்துவ முறையொன்று நாள்போக்கில் தற்காப்பு கலையாகி, பின்னர் எதிரிகளை கொல்லும் போர்க் கலையாக மாறியது என்றால் அது வர்மம் என்ப்படும் வர்மக் கலைதான். வல்லமை, வன்மை என்கிற தமிழ் பதத்தில் மருவுதான் வர்மம். தமிழர்களின் கலையான வர்மக் கலை அகத்தியரால் உருவாக்கப் பட்டது.

அகத்தியர் அருளிய வர்மக் கலை நூல்கள்

ஒடிவு முறிவு சாரி

வர்மக் கலையை அகத்தியர் நான்கு பெரும் பிரிவுகளாய் பிரித்திருக்கிறார்.உடலில் உள்ள வர்ம புள்ளிகள் மற்றும், அவற்றை கையாளும் விதத்தினால் இவற்றை வேறு படுத்துகிறார். இவை “படு வர்மம்”,”தொடு வர்மம்”,”தட்டு வர்மம்”,”நோக்கு வர்மம்” உடம்பிலுள்ள முக்கியமான வர்மப் புள்ளிகள்,

1. தலைப் பகுதியில் 37 முக்கியமான வர்மப் புள்ளிக்களும்,
2. நெஞ்சுப் பகுதியில் 13 வர்மப் புள்ளிகளும்,
3. உடலின் முன் பகுதியில் 15 வர்மப் புள்ளிகளும்,
4. முதுகுப் பகுதியில் 10 வர்மப் புள்ளிகளும்,
5. கைகளின் முன் பக்கத்தில் 9 வர்மப் புள்ளிகளும்,
6. கைகளின் பின் பக்கத்தில் 8 வர்மப் புள்ளிகளும்,
7. கால்களின் முன்பக்கம் 19 வர்மப் புள்ளிகளும்,
8. கால்களின் பின்பக்கம் 13வர்மப் புள்ளிகளும்,
9. கீழ்முதுகுப் பகுதியில் 8 வர்மப் புள்ளிகளும்

சித்தர்கள் வளர்த்த வர்மம் எனும் அறிவியல்


உடலில் உள்ள பல சத்திகளை – அவற்றின் இயக்க நுட்பங்களை மக்களுக்கு எளிய முறையில் விள்க்கிச் சென்றவர்கள் நம் முன்னோர்கள். அந்த நுட்பங்களின் அடிப்படையில் உருவானது தான் அழுத்தும் முறை சிகிச்சைகள்.

1. மூளை
2. மூளை நரம்புகள்
3. பிட்யூட்டரி
4. பீனியல்
5. தலை
6. தொண்டை
7. கழுத்துப் பகுதி
8. தைராய்டு சுரப்பிகள்
9. முதுகெலும்பு
10. மூலம்
11. புரஸ்த கோளங்கள்
12. ஆண் பிறப்புறுப்புகள்
13. பெண் பிறப்புறுப்ப
14. கர்ப்ப பை
15. விதைப் பை, சிணை
16. நிண நீர் சுரப்பிகள்
17. இடுப்பு, முழங்கால்கள்
18. சிறுநீர் பை
19. சிறு குடல்
20. பெருங்குடல்
21. குடல் வால்
22. பித்தப் பை
23. கல்லீரல்
24. தோள் பகுதி
25. கணையம்
26. சிறு நீரகங்கள்
27. வயிறு
28. அட்ரீனல் சுரப்பி
29. உதர விதாணம்
30. நுரையீரல்
31. காதுகள்
32. சக்தி தூண்டல்
33. காது நரம்புகள்    
34. குளிர்ச்சி
35. கண்கள்
36. இதயம்
37. மண்ணீரல்
38. தைமஸ் சுரப்பிகள்.

இப்புள்ளிகளை மிக மென்மையாக அழுத்தித் தொடும் போது அவ்விடத்தில் வலி தோன்றுவது அந்த குறிப்பிட்ட பகுதியில் - உறுப்பில் உள்ள நலக் குறைவை காட்டுகிறது. இந்த உறுப்புகளில் ஏதேனும் ஒன்றில் எந்தவிதமான துன்பங்கள் - நலக் குறைபாடுகள் இருப்பினும் அதற்கான சத்திப் புள்ளியை மிக மென்மையாகச் சில வினாடிகள் தொடுவதன் மூலம் அத் துன்பத்தை நீக்கிக் கொள்ள முடியும். குறைபாட்டின் தன்மையைப் பொறுத்து உடனடியாகவோ, சில நாட்களிலோ உடல் நலம் முழுமையாக கிடைக்கும்.

18 சித்தர்கள், சித்தர் பாடல்கள், siththar, siththarkal, siththar books