புலிப்பாணி ஜாலத்திரட்டு 156 - 160 of 211 பாடல்கள்

புலிப்பாணி ஜாலத்திரட்டு 156 - 160 of 211 பாடல்கள்


156. வாங்கியே  சக்கரத்தை  லட்ட  மோதி
    வளமாகத்தான்  புதைப்பாய்  தேவர்  முன்பில்
பாங்கியே  வஸ்துவுட  னஸ்தி  தானும்
    பாங்காத்  தேவர்முன்பு  வைத்துப்  போடு
தாங்கியே  பலிபூசை  செய்தாலப்பா
    தயவாகத்  திருநடன  மாடும்  பாரு
ஒங்கியே  கேட்டவரங்  கொடுக்கச்  செய்யும்
    உத்தமனே  ஜனக்கூட்ட  மாகும்  பாரே.

விளக்கவுரை :

பின்னர்  சக்கரத்திற்க்கு  இலட்சம்  தடவைகள்  ஜெபித்து  விட்டு  அதனைப்  புதைத்து  விடவும்.  தேவர்  முன்பு  வஸ்துவுடன்  கூடிய  எலும்பை  வைத்து  பலி  பூசை  செய்தால்  திருநடனமாடும்.  கேட்ட  வரத்தினைக்  கொடுக்கும்.  இதனால்  ஜனங்கள்  கூடி  உன்னைப்  பாராட்டி  புகழ்வார்கள்.

தேள்கடி  விஷம்  இறங்க

157. பாரடா  வின்னமொரு  வித்தை  கேளு
    பாங்கான  செம்போத்து  நாக்கு  மைந்தா
சேரடா  உடும்புடைய  நாக்குங்  கூட்டிச்
    செயலான  கீழ்காயின்  மூலம்  வாங்கிக்
கூறடா  காமப்பால்  வராக  னொன்று
    கொற்றவனே  யாண்கழற்சிக்  காயினுள்ளே
தீரடா  கிராணமது  தீண்டும்  போது
    திறமாக  வெடுத்து  கொசு  மெழுகால்  மூடே.

விளக்கவுரை :

மற்றொரு  ஜாலவித்தையைச்  சொல்லுகிறேன்  கேட்பாயாக.  செம்போத்து  என்னும்  கள்ளிக்காக  கையினுடைய  நாக்கும்  உடும்பின்  நாக்கும்  எடுத்துச்  சேர்த்து  அத்துடன்  கீழாநெல்லி  வேர் , முலைப்பால்  ஆகிய  இவைகளில்  வகைக்கு  ஒரு  விராகன்  எடையும் , ஆண்கெச்சக்  காயினுள்  உள்ள  பருப்பை  நீக்கிவிட்டு  இவைகளை  யெல்லாம்  அந்த  காயில்  அடைத்து  எடுத்து  கிராணம்  பிடிக்கும்போது  கொசு  மெழுகால்  மூடிவிடவும்.

158. மூடியே  தேள்கடித்து  வந்த  பேர்க்கு
    முன்னாகக்  கழற்சியதை  கையில்  யீந்து
ஆடியே  யின்னொருவர்  கையி  விய்ந்தால் 
    அப்பனே  யவனைவிட்  டிவன்மேற்  போகும்
நாடியே  தேளின்  விஷமென்ன  சொல்வேன்
    நடுநடுங்கி  யழுதிடுவா  னெறியுங்  கட்டுங்
கூடியே  காயைநீ  போடென்  றாக்காற்
    குணமாகப்  போட்டவுட  னிறங்கிப்  போமே.

விளக்கவுரை :

தேள்  கடித்து  வருவோரிடம்  முன்னர்  தயாரித்துள்ள  கெச்சக்  காயைக்  கையில்  கொடுத்து  இன்னொரு  காயை  மற்றொருவர்  கையில்  கொடுத்தால்  தேள்  கடித்து  விஷம்  ஏறியவரின்  விஷம்  ஏறியவரின்  விஷம்  அவரை  விட்டு  மற்றொருவர்  கையில்  காயை  கொடுத்திருந்தவருக்கு  அந்த  விஷம்  ஏறும்.  அவர்  நடுங்கி  அழுவர்.  அவருக்கு  நெறியும்  கட்டும்.  பயந்துபோன  அவரை  காயை  கீழே  போடவும்  என்று  கூறியதும்  அவர்  காயைப்  போட்டதும்  தேளின்  விஷம்  உடனே  இறங்கி  விடவும்.

கழுப்பின்  வீரம்

159. போமென்ற  கருநாயின்  விலாவின்  வில்லும்
    பொங்கமுடன்  காகத்தி  நரம்பு  தானும்
ஆமென்ற  சுடலையின்  கருவுங்  கூட்டி
    அப்பனே  யைங்கோலத்  தயிலஞ்  சேர்த்து
நாமென்ற  நாணத்திற்  பூசியப்பா
    நாயகனே  கழுப்பினுட  தியானங்  கேளு
தாமென்ற  ஒம்  ...றீம் ... கங் ... சங் ... ஐயுங்
    தயவாக  றீம் ... றங் ... லா ... லீ ... லூ ... வென்ன.

விளக்கவுரை :

கழுப்பினுடைய  வித்தையைச்  செய்வதற்கான  முறையைக்  கூறுகிறேன்.  கருநாயின்  விலாவின்  வில்லெழும்பு , காகத்தினுடைய  நரம்பு , சுடலையின்  கரு , ஆகியவைகளை  ஒன்றாகச்  சேர்த்து  ஐங்கோலத்  தயிலம்  சேர்த்து  நாணத்திற்  பூசிக்  கொள்ளவும்.  இப்போது  கழுப்பினுட  தியானம்  செய்கின்ற  முறையைக்  கூறுகிறேன்  கேள்.  "ஒம் ... றீம் ... கங் ... சங் ... ஐயுங் ... றீம் ... றங் ... லா ... லீ ... லூ ..."  என்றும் , மேலும் -

160. என்னவே  மங் .. சிங் ... சிவய ...நம ... வென்று
    என்ன  சொல்வேன்  மந்திரத்தை  லட்சமோது
          பன்னவே  பூசைபலி  பலக்கச்  செய்து
    பாங்கான  வெதிரியின்பேர்  தன்னை  சொல்லி
          நன்னவே  நாணற்ற  வியாதி  கொண்டு
    நடுநடுங்கி  மரணமாய்ப்  போவான்  பாரு
         அன்னவே  கழுப்பினுட  வீர  மெத்த
    ஆரறியப்  போகிறா  ரருமை  தானே.

விளக்கவுரை :

"மங் ... சிங் ... சிவய ... நம ..."  என்னும்  இந்த  மந்திரத்தை  இலட்சம்  தடவைகள்  ஒதிவிட்டு  பூசைசெய்து  பலி  கொடுத்து  விட்டு  உன்  எதிரியின்  பெயரைச்  சொல்லினால் , அவனுக்கு  கடுமையான  வியாதி  உண்டாகி  நடுநடுங்கி  மரணமடைவான்.  கழுப்பின்  வீரம்  அதிகமாகும்.இதன்  பெருமையை  யார்  அறியப்போகிறார்கள்.

புலிப்பாணி ஜாலத்திரட்டு, புலிப்பாணி, Pulipani, Pulipani Jaalathirattu, Pulipani Siththar