புலிப்பாணி ஜாலத்திரட்டு 126 - 130 of 211 பாடல்கள்

புலிப்பாணி ஜாலத்திரட்டு 126 - 130 of 211 பாடல்கள்

 

126. செய்யப்பா மையெடுத்துப் பார்க்கும்போது
    செயலான களவுமுத லேவலப்பா
வையப்பா தொழில் முறையும் தெய்வபூதம்
    வளமான பிசாசு ராட்சத கணங்கள்
பையப்பா மோடிதர னொருவன் செய்தால்
    பாங்காக யவன் செய்கை  தோற்றாகும்
கையப்பா  யிதுபார்வை மைதானப்பா
    கனிவாகச் சொல்லுமடா கருத்தாய்த் தானே.

விளக்கவுரை :

அதன்பின்னா் சிமிழிலிருந்து மையை எடுத்து தடவி பார்க்கும் போது, தம்மிடம் திருடியவா்வன், ஏவல் செய்தவன், தொழில் முறையில் எதிரி, ஆகியவைகளுடன் பிசாசு, ராட்சதன், கணங்கள், மோடி செய்தவன் போன்றவா்களின் உருவம் தெளிவாக அந்த மையில் தெரியும். இதனை பார்வை மை என்றும் சொல்லுவார்கள்.

கவச  மந்திரம்

127. தானேதான்  கவசமொன்று  சொல்லக்  கேளு
    தயவான  ரீங்காரம்  வெள்ளி  தகட்டில்
மானேதான்  இம் ... உம் ... கம் ... ராங் ... சிங் ... கென்று
    மைந்தனே  யாயி ... டாகினி ... மாங்காளி ...
ஊனேதான்  விஷ்ணு  சகோதரி  சர்வாணி
    உமைதேவி  பராசக்தி  ந-வ-சி  யென்று
கோனேதான்  லட்சமுரு  செபித்துப்  போடு
    கொற்றவனே  சத்திசிவ  பூசையாச்சே.

விளக்கவுரை :

கெட்ட  காரியங்களைத்  தடுத்து  நன்மை  யளிக்கும்  கவச  மந்திரம்  ஒன்றைக்  கூறுகிறேன்  கேட்பாயாக  சுத்தவெள்ளி  தகட்டில்,  "இம் ... உம் ... கம் ... ராங் ... சிங்"  என்றும்,  "ஆயி ... டாகினி  மாங்காளி  விஷ்ணு  சகோதரி  சர்வாணி ... உமாதேவி ... பராசக்தி ... ந-வ-சி"  என்றும்  எழுதவும்.  இதனை  வைத்து  இலட்சம்  தடவைகள்  ஜெபித்துவிட்டு  சக்தி  - சிவ  பூஜை  செய்யவும்.

128. செய்யடா  தியானமிட்டு  விபூதி  பூசக்
    செகதலத்தில்  ஏவல்  முதல்  பிசாசுபூதம்
பையவே  புதையிலே  வேர்  பிடுங்கிப் 
    பகர்ந்த  கருத்தடவிச்  சக்கரங்களாட்டில்
கையவே  பார்வையுடன்  குரளிகூட்டி 
    நலமாக  மற்றுமுள்ள  சூனியங்கள்
கையவே  கல்லெறிக்கு  நீக்குமப்பா
    கனிவான  மந்திரத்தை  எழுதிக்  கட்டே.  

விளக்கவுரை :

பூசை  செய்துவிட்டு  விபூதி  பூசி  உலகத்தில்  ஏவல்  முதல்  பிசாசு  பூதம்  இவைகளின்  பாதிப்பை  தடுத்திட,  வேர்  பிடுங்கி,   கருவைத்  தடவி  எழுதி  வைத்த  சக்கரத்தில்  வைத்து  அதனை  உற்று  நோக்கியபடி  பார்த்தாயானால்  மற்றுமுள்ள  சூனியங்கள்,  கல்லெறி  இவைகள்  ஏற்படாது.  இந்த  மந்திரத்தை  தகட்டில்  எழுதி  கட்டிக்  கொள்ளவும்.  இதனால்  எந்த  கெட்ட  காரியமும்  உங்களைப்  பாதிக்காது.

காரியம்  சித்தியாக  அஞ்சனம்

129. பாடினே  றூசியென்ற  காந்தம்  நீலம்
    பண்பான  லூமைகையில்  மஞ்சளப்பா
ஆடியே  வேகை  வெத்திலையுங்  கூட
    அடைவான  செங்களழுநீர்  வேரு  மையா
நாடியே  தலைமஞ்சள்  மாவுங்  கூட்டு
    நலமான  கோரோசனை  குங்குமப்பூ
கூடியே  வகைவகைக்கு  விராக  னொன்று
    குழியம்மி  தனிலரைக்க  வகையைக்  கேளே.  

விளக்கவுரை :

இன்னொரு  ஜாலவித்தைப்  பற்றிச்  சொல்லுகிறேன்.  ஊசி  காந்தம்,  நீலம்,  ஊமைகை  மஞ்சள்,  முற்றிய  வெற்றிலை,  செங்களுநீர்  வேர்,  தலைமஞ்சள்  மாவு  இவைகளுடன்  கோரோசனை,  குங்குமப் பூ  ஆகிய  இவைகளி லெல்லாம்  வகைக்கு  ஒரு  விராகன்  எடைவீதம்  எடுத்துச்  சேர்த்து  கல்லத்திலிட்டு  அரைக்கவும்.  அரைப்பதற்க்கு  முன்னர்  மேலும்  சேர்க்க  வேண்டியவற்றையும்  கூறுகிறேன்  கேள்.

130. கேளடா  மாடனென்ற  புறாவின்  ரத்தம்
    கெணிதமாய்  யொன்றறுத்துக்  கடவாரு
சூளடா  சிவந்தபசு  வெண்ணெ  யப்பா
    சுகமாக  விராகனது  பணிரென்  டாகும்
நாளடா  மூன்றுநா  ளரைத்  தெடுத்து
    நாயகனே  சிமிழில்  வைத்து  காளிமுன்னில்
வாளடா  புதைத்தெடுப்பாய்  நாளெட்டாகும்
    வளமான  புனுகுடன்  சவ்வாது  சேரே.    

விளக்கவுரை :

மாடப்  புறாவினை  அறுத்து  அதன்  இரத்தத்தை  அதில்  வார்த்து  சிவப்பு  நிறமுடைய  பசுவின்  வெண்ணெய்  பனிரெண்டு  விராகன்  எடை  சேர்த்து  மூன்று  நாட்கள்  அரைத்து  அதனை  எடுத்து  சிமிழில்  வைத்து  காளி  முன்னால்  புதைத்து  எட்டு  நாட்கள்  கழித்து  எடுத்து  அதில்  புனுகு,  சவ்வாது  சேர்க்கவும்.

புலிப்பாணி ஜாலத்திரட்டு, புலிப்பாணி, Pulipani, Pulipani Jaalathirattu, Pulipani Siththar