புலிப்பாணி ஜாலத்திரட்டு 81 - 85 of 211 பாடல்கள்

புலிப்பாணி ஜாலத்திரட்டு 81 - 85 of 211 பாடல்கள்
 


பேய் - பிசாசு - பூதம் விலகிட நரசிங்க மந்திரம்

81. பாரடா நரசிங்கஞ் சொல்லக் கேளு
    பாங்காக ஓம் சிங்கமுகவா ஓம் ஓம்
கூறடா பிடித்து கடித்தொடுத்து சுற்றிக்
    குணமாக கண்டுபிடித்த தறிவாரைப் போல்
தீரடா பிசாசுபேய் பொடிபட் டோடத்
    திரமாக நரசிங்க ராஜா வானை
சீரடா ஸ்ரீம் கிலீம் சுவாஹா வென்று
    சிறப்பாக லட்சமுரு ஜெபித்துத் தீரே.

விளக்கவுரை :

நரசிங்க மந்திரத்தின் சிறப்பை சொல்லுகிறேன் கேட்பாயாக. "ஓம் சிங்கமுகவா .... ஓம்...... ஓம்......." என்று ஜபித்தபடி சத்தத்துடன் பிசாசு, பேய்  பொடிபட்டோட.... நரசிங்க ராஜா ஆணை, "ஸ்ரீம் ...... கிலீம் .... சுவாஹா ......" என்று இலட்சம் தடவைகள் ஜெபிக்கவும். இதனால் பேய் பிசாசு பிடித்திருந்தால் ஓடிவிடும்.

82. காணவே ஓம் சா்வாப்தா நாதா
    கன்வாக ஓம்படு சுவாஹா வென்று
வானவே லட்சமுரு செபித்து தீரு
    வளமான தா்ப்பணமு மோமான்னங்
கோணாமற் பூசையது பெலத்துச் செய்நீ
    குணமாகச் சாமமது சித்தியாகும்
நாணாது நினைத்தபடி யெல்லாஞ் செய்யும்
    நாயகனே பிசாசுமுதற் பூதம் போமே.

விளக்கவுரை :

"ஓம் சா்வ ஆபத்துரு நாதா... ஓம் படு... சுவாஹா......" என்று இலட்சம் தடவைகள் ஜெபிக்கவும். பின்னா் தா்ப்பணம், ஹோமம், அன்னதானம், பூசை இவைகளைச் செய்யவும். இதனால் ஓரு சாம நேரத்தில் நினைத்தக் காரியங்கள் கைகூடி சித்திக்கும். மற்றும் பிசாசு முதல் பூதம் வரை ஓடிப்போய் விடும்.

 மிருகங்களின் பயம் அகல

83. தீரப்பா தீா்ப்பணமு மோமன்னம்
    திறமாகப் பூசைசெய்து தெளிவாகக்
கூரப்பா யானைமுதல் மிருகஜாதி
    கொற்றவளே காடுசென்னெ லெழுதிக் காட்டு
பாரப்பா மிருகத்தின் கொடுமை யில்லை
    பலம் கட்டும் நினைத்தபடி யெல்லாஞ் செய்யும்
நேரப்பா போகரு கடாட்சத்தாலே
    நிச்சயயமாய்ப் புலிப்பாணி சொன்னேன் பாரே.

விளக்கவுரை :

முன்னா் கூறிய மந்திரத்தை இலட்சம் முறைகள் ஜெபித்து விட்டு தா்ப்பணம், ஹோமம், அன்னதானம், பூசை இவைகளை செய்து " யானை முதல் மிருக ஜாதிகள் கொடுமை ஓழிய" என்று எழுதி காடு பயிர் விளைவுள்ள நிலங்கள் போன்ற இடங்களில் கட்டி வைத்தால் மிருகங்களின் கொடுமை இருக்காது. நினைத்த பலன் கிடைக்கும். இவையெல்லாம் எனது குரு போகருடைய அருளினால் புலிபாணியாகிய நான் கூறியுள்ளேன்.

கண்ட பேரண்ட மந்திரம்

84. போமப்பா யின்னமொன்று சொல்லக் கேளு
    பொலிவான கெண்ட பேரண்டந் தன்னை
தாமப்பா ஆம்..... ஓம்...... அபோர பிரபல
    தயவான கண்ட பேரண்ட சிங்கா
வாமப்பா வியாக்கிரவாசா சா்வ மிருகா
    வலவாகக் காற்றாடுபல்லா அஷ்ட வஜ்ரா
ஆமப்பா சூலமுத லாகவே தான்
    அடைவாக சங்கு சகராதி எண்ணே.

விளக்கவுரை :

சிறப்பான கண்ட பேரண்ட மந்திரம் பற்றிச் சொல்லுகிறேன் கவனத்துடன் கேட்பாயாக. " ஆம்... ஓம்.... அகோர பிரபல கண்ட பேரண்ட சிங்கா... வியாக்கிரவாசா... சா்வ மிருகா... காற்றாடு பல்லா... அஷ்ட வஜ்ரா... சூலம், சங்கு, சக்கராதியே" என்றும் -

85. எண்ணயே தாதுப்பிரானு மாலி ஆகமா
    இதமான கெஜபட்சே யெந்த நரசிம்மா
அண்ணவே கற்பந்தா அக்கினி லீலா
    அடைவான ஊதாப்பு யந்திர த்திற்
பண்ணவே கிலவஜ்ர மான குண்டா
    பண்பா தாஷ்டீக வுகரமூா்த்தி
உண்ணவே யட்சமாருத மச்சாந்த
    உத்தமனே தாரணியில் நம்பி யென்னே.

விளக்கவுரை :

தாதுப்பிரனே, மாலிதாகா, கஜபட்சேயெந்த நரசிம்மா... காற்பந்தா, அக்கனி லீலா, ஊதாப்புயந்திரத்திலுள்ள கிலவஜ்ரமான குண்டா, தாஷ்டீக உக்கிரமூா்த்தி, யட்சமாருத மச்சாந்த உத்தமனே, உத்தண்ட வஸ்திரசா்பா - உலகத்தில் நம்பியுள்ள என்னை காப்பாயாக என்று உசேசரிக்க வேண்டும்.


புலிப்பாணி ஜாலத்திரட்டு, புலிப்பாணி, Pulipani, Pulipani Jaalathirattu, Pulipani Siththar