Showing posts with label அகத்தியர் ஞானம். Show all posts



அகத்தியர் ஞானம் 46 - 49 of 49 பாடல்கள்

agathiyar-gnanam

46. மூவெழுத்தும் ஈரெழுத்தும் மாகி நின்ற
          மூலமதை யறிந்துரைப் போன் குருவுமாகும்;
ஊவெழுத்துக் குள்ளேதா னிருக்கு தப்பா
          உணர்வதுவே கண்டறிந்தோன் அவனே ஆசான்;
யாவருக்குந் தெரியாதே அறிந்தோ மென்றே
          அவரவர்கள் சொல்வார்க ளறியா மூடர்;
தேவரோடு மாலயனுந் தேடிக் காணார்
          திருநடனங் காணமுத்தி சித்தியாமே.

விளக்கவுரை :

47. ஈரெழுத்து மோரெழுத்து மாகி யாங்கே
          இயங்கிநிற்கும் அசபையப்பா மூலத்துள்ளே
வேரெழுத்தும் வித்தெழுத்தும் இரண்டுங் கொண்டு
          வித்திலே முளைத்தெழுந்து விளங்கி நிற்கும்
சீரெழுத்தை யூணிநல்ல வாசி யேறித்
          தெரு வீதி கடந்தமணி மண்டபத்துச்
சாரெழுத்தி னுட்பொருளாம் பரத்தை நோக்கிச்
          சார்ந்தவர்க்குச் சித்திமுத்தி தருமே தானே.

விளக்கவுரை :

[ads-post]

48. ஏகமெனு மோரெழுத்தின் பயனைப் பார்த்தே
          எடுத்துரைத்து மிவ்வுலகி லெவரு மில்லை.
ஆகமங்கள் நூல்கள்பல கற்றுக் கொண்டே
          அறிந்தமென்பார் மவுனத்தை அவனை நீயும்
வேகாச்சா காத்தலைகால் விரைந்து கேளாய்;
          விடுத்ததனை யுரைப்பவனே ஆசா னாகும்;
தேகமதி லொரெழுத்தைக் காண்போன் ஞானி;
          திருநடனங் காணமுத்தி சித்தி யாமே.

விளக்கவுரை :

49. குருவாக உமைபாக னெனக்குத் தந்த
          கூறரிய ஞானமது பத்தின் மூன்று
பொருளாகச் சொல்லி விட்டேனப்பா நீதான்
          பொருளறிந்தாற் பூரணமும் பொருந்திக் காணே
அருளாகா திந்நூலைப் பழித்த பேர்கள்
          அருநரகிற் பிசாசெனவே அடைந்து வாழ்வார்
அருளாக ஆராய்ந்து பார்க்கும் பேர்கள்
          ஆகாயம் நின்றநிலை அறியலாமே.

விளக்கவுரை :



அகத்தியர் ஞானம் 41 - 45 of 49 பாடல்கள்

agathiyar-gnanam

41. ஊணியதோர் ஓங்காரம் மேலு முண்டே
          உத்தமனே சீருண்டே வூணிப்பாரே;
ஆணியாம் நடுநாடி நடுவே மூட்டும்
          ஆச்சரிய வெழுத்தெல்லாம் அடங்கி நிற்கும்
ஏணியா யிருக்குமடா அஞ்சு வீடே
          ஏகாந்த மாகியவவ் வெழுத்தைப் பாரு;
தோணிபோற் காணுமடா அந்த வீடு;
          சொல்லாதே ஒருவருக்குந் துறந்திட்டேனே.

விளக்கவுரை :

42. துறந்திட்டேனே முலங் கீழ்மூ லம்பார்;
          துயரமாய் நடுநிலையை யூணிப் பாராய்;
அறைந்திட்டேன் நடுமூலம் நடுநா டிப்பார்;
          அப்பவல்லோ வரைதாக்கும் தாரை காணும்;
உறைந்திட்ட ஐவருந்தான் நடனங் காணும்
          ஒளிவெளியும் சிலம்பொலியு மொன்றாய்க் காணும்
நிறைந்திட்ட பூரணமு மிதுதா னப்பா!
          நிசமான பேரொளிதான் நிலைத்துப் பாரே.

விளக்கவுரை :

[ads-post]

43. சும்மா நீ பார்க்கையிலே மனத்தை யப்பா
          சுழுமுனையி லோட்டியங்கே காலைப் பாராய்;
அம்மாநீ தேவியென்று அடங்கிப் பாராய்;
          அப்பவல்லோ காயசித்தி யோகசித்தி;
உம்மாவும் அம்மாவும் அதிலே காணும்;
          ஒருமனமாய்ச் சுழுமுனையில் மனத்தை யூன்று;
நம்மாலே ஆனதெல்லாஞ் சொன்னோ மப்பா!
          நாதர்களி லிதையாரும் பாடார் காணே!

விளக்கவுரை :

44. காணுகின்ற ஓங்கார வட்டஞ் சற்றுக்
          கனலெழும்பிக் கண்ணினிலே கடுப்புத் தோன்றும்;
பூணுகின்ற இடைகலையில் பரம்போ லாடும்
          பொல்லாத தேகமென்றால் உருகிப் போகும்
ஆணவங்களான வெல்லா மழிந்து போகும்
          அத்துவிதத் துரியாட்ட மாடி நிற்கும்;
ஊணியதோ ரெழுத் தெல்லாந் தேவி யாகும்;
          ஓங்காரக் கம்பமென்ற உணர்வு தானே.

விளக்கவுரை :

45. உணர்வென்றாற் சந்திரனி லேறிப் பாவி
          ஓடியங்கே தலையென்ற எழுத்தில் நில்லே;
அணுவென்றால் மனையாகுஞ் சிவனே யுச்சி
          அகாரமென்ன பதியுமென்ன சூட்ச மாகும்;
கணுவென்ன விற்புருவ மகண்ட வீதி;
          கயிலாய மென்றதென்ன பரத்தின் வீடு;
துணுவென்ற சூரியன்றன் நெருப்பைக் கண்டு
          தூணென்ற பிடரிலே தூங்கு தூங்கே.

விளக்கவுரை :
Powered by Blogger.