Showing posts with label பாம்பாட்டிச் சித்தர். Show all posts



பாம்பாட்டிச் சித்தர் பாடல்கள் 126 - 129 of 129 பாடல்கள்

126. ஆணிக் குடத்திலே பாம்ப டைப்போம்
          அக்கினிக் கோட்டைமே லேறிப் பார்ப்போம்
மாணிக்கத் தூணின் விட்டே யாட்டுவோம்
          மனம்வாக்குக் காயத்தை யிரைகொ டுப்போம்
நாணிக் கயிற்றையும் அறுத்து விடுவோம்
          நமனற்ற நாதன்பதம் நாடியே நிற்போம்
ஏணிப் படிவழிகண் டேறி விடுவோம்
          யாருமிதை அறியாரென் றாடாய் பாம்பே.

விளக்கவுரை :

127. வடக்குங் கிழக்குமாக நூலை யிழைப்போம்
          மற்றுஞ் சுழலிலே பாவு பூட்டுவோம்
நடக்கும் வழியினிலே யுண்டைசேர்ப்போம்
          நடவா வழியினிலே புடவை நெய்வோம்
குடக்குக் கரையினிலே கோலைப் போடுவோம்
          கொய்ததை எங்குமே விற்று விடுவோம்
அடக்கியே யேகத்துளே வைக்கவும் வல்லோம்
          ஆதிபதங் கண்டோமென் றாடாய் பாம்பே.

விளக்கவுரை :

128. சூத்திரக் குடத்திலே பாம்பை யடைப்போம்
          சுழுமுனைக் குள்ளேயோ சுகித்தி ருப்போம்
பாத்திரங் கொண்டுமே பலியி ரப்போம்
          பத்தெட்டு மூன்று படிகட ந்தோம்
ஊத்தைச் சடலத்தினைப் புடமே யிடுவோம்
          உளவ னெமக்குநல் லுறுதி சொல்லப்
பார்த்துரை யிதன்மெய் பலிக்க வெண்ணிப்
          பதனம் பதனமென் றாடாய் பாம்பே.

விளக்கவுரை :

129. மவ்வக் குடத்திலே பாம்ப டைப்போம்
          மணிவட்ட வாசியை வாரி யுண்டோம்
வவ்வக் குடங்களைத் தள்ளி விடுவோம்
          வக்கிர சொர்ப்பனந் தாண்டி விடுவோம்
பவ்வ வெளியிலே விட்டே வாட்டுவோம்
          பஞ்ச கருவியைப் பலிகொ டுப்போம்
சிவ்வுரு வாகியே நின்றோ மென்றே
          சீர்பாதங் கண்டுதெளிந் தாடாய் பாம்பே.

விளக்கவுரை :

பாம்பாட்டிச் சித்தர் பாடல்கள் முற்றும்



பாம்பாட்டிச் சித்தர் பாடல்கள் 121 - 125 of 129 பாடல்கள்

121. குருவென்னும் ஆசானி னுருவெ டுத்துக்
          குறியான ஞானந்துப் பாக்கியாக்கி
அருளென்னும் அருளையே உண்டை யாக்கி
          ஆனந்த மாகவே அதைக்க டந்தே
மருளென்னு மாதர்மன நெறியைத் தொட்டு
          வாங்காம லெரிந்திட நெட்டை யிட்டு
பருவளைக் குள்ளேயே பட்ட தென்றே
          பற்றானைப் பற்றிநின் றாடாய் பாம்பே.

விளக்கவுரை :

122. கன்னான் குகையிலே கான்ம றிப்போம்
          கருமா னுலையிலே தீயை மூட்டுவோம்
சொன்னார் தலையிலே பொன்னை யாக்குவோம்
          கருதி யருகல்வி ஒப்பஞ் செய்வோம்
மின்னார்கள் பாசத்தை விட்டே யெரிப்போம்
          மெய்ப்பொருட் குறிகண்டு விருப்பை யடைவோம்
பன்னாதே பன்னாதே சும்மா விருந்து
          பராபரஞ் சேர்ந்தோமென் றாடாய் பாம்பே.

விளக்கவுரை :

123. சாதிப் பிரிவினிலே தீயை மூட்டுவோம்
          சந்தை வெளியினிலே கோலை நாட்டுவோம்
வீதிப் பிரிவினிலே விளையா டிடுவோம்
          வேண்டாத மனையினி லுறவு செய்வோம்
சோதித் துலாவியே தூங்கி விடுவோம்
          சுகமான பெண்ணையே சுகித்தி ருப்போம்
ஆதிப் பிர்மர்கள் ஐந்து பேரும்
          அறியார்கள் இதையென் றாடாய் பாம்பே.

விளக்கவுரை :

124. நெட்டெழுத் ததனிலே நிலைபி டித்து
          நீங்கா வெழுத்திலே வாலை முறுக்கி
விட்டவ் வெழுத்திலே படம்வி ரித்து
          விண்ணின் வழியிலே மேவி யாடிப்
பட்ட வெழுத்தையும் பதிந்தி ருப்போம்
          பன்னிரண் டாமெழுத்தினிற் பன்னிக் கூடித்
திட்டமுட னெமக்கருள் தேசிக னார்தம்
          சீர்பாதஞ் சேர்ந்தோமென் றாடாய் பாம்பே.

விளக்கவுரை :

125. ஊசித்துளைக் குடத்தினிற் பாம்பை யடைப்போம்
          உலகெலாஞ் சுற்றி யுலாவிவருவோம்
மாசுள்ள பிறவியை மறந்தி ருப்போம்
          மனமொத்த வெளியிலே விட்டே யாட்டுவோம்
மாசுப் புலன்களை இரைகொ டுப்போம்
          மனமுற்ற உச்சியிலேறி யாடுவோம்
பேசு மெழுத்தையும் விழுங்கி விடுவோம்
          பிறப்பிறப் பற்றோமென் றாடாய் பாம்பே.

விளக்கவுரை :
Powered by Blogger.