Showing posts with label அகப்பேய் சித்தர். Show all posts



அகப்பேய் சித்தர் பாடல்கள் 86 - 90 of 90 பாடல்கள்
           
86. நாதாந்த வுண்மையிலே                   அகப்பேய்
          நாடாதே சொன்னேனே
மீதான சூதானம்                                   அகப்பேய்
          மெய்யென்று நம்பாதே.

விளக்கவுரை :
           
87. ஒன்றோ டொன்றுகூடில்                   அகப்பேய்
          ஒன்றுங் கெடுங்காணே
நின்ற பரசிவமும்                                 அகப்பேய்
          நில்லாது கண்டாயே.

விளக்கவுரை :
           
88. தோன்றும் வினைகளெல்லாம்          அகப்பேய்
          சூனியங் கண்டாயே
தோன்றாமற் றோன்றிடும்                      அகப்பேய்
          சுத்த வெளிதனிலே.

விளக்கவுரை :
                   
89. பொய்யென்று சொல்லாதே               அகப்பேய்
          போக்கு வரத்துதானே
மெய்யென்று சொன்னவர்கள்                 அகப்பேய்
          வீடு பெறலாமே.

விளக்கவுரை :
           
90. வேத மோதாதே                              அகப்பேய்
          மெய்கண்டோ மென்னாதே
பாதம் நம்பாதே                                    அகப்பேய்
          பாவித்துப் பாராதே.

விளக்கவுரை :

அகப்பேய் சித்தர் பாடல்கள் முற்றும்



அகப்பேய் சித்தர் பாடல்கள் 81 - 85 of 90 பாடல்கள்
           
81. ஒப்பனை யல்லவடி                        அகப்பேய்
          உன்னாணை சொன்னேனே
அப்புட னுப்பெனவே                             அகப்பேய்
          ஆராய்ந் திருப்பாயே.

விளக்கவுரை :
           
82. மோட்சம் வேண்டார்கள்                   அகப்பேய்
          முத்தியும் வேண்டார்கள்
தீட்சை வேண்டார்கள்                           அகப்பேய்
          சின்மய மானவர்கள்.

விளக்கவுரை :
           
83. பாலன் பிசாசமடி                            அகப்பேய்
          பார்த்தால் பித்தனடி
கால மூன்றுமல்ல                                அகப்பேய்
          காரிய மல்லவடி.

விளக்கவுரை :
           
84. கண்டது மில்லையடி                       அகப்பேய்
          கண்டவ ருண்டானால்
உண்டது வேண்டடியோ                         அகப்பேய்
          உன்னாணை சொன்னேனே.

விளக்கவுரை :
           
85. அஞ்சையு முண்ணாதே                   அகப்பேய்
          ஆசையும் வேண்டாதே
நெஞ்சையும் விட்டுவிடு                       அகப்பேய்
          நிஷ்டையிற் சாராதே.

விளக்கவுரை :
Powered by Blogger.