புலிப்பாணி ஜாலத்திரட்டு 96 - 100 of 211 பாடல்கள்

புலிப்பாணி ஜாலத்திரட்டு 96 - 100 of 211 பாடல்கள்

குறளி தியானத்தின் மகிமை

96. தானென்ற குறளியுட தியானங் கேளு
    தயவாக ஓம்...... அவ்வும்......... உவ்வும்........ மவ்வும்
தேனென்ற ஸ்ரீரீம் உடனே இரீம்மூங் கூட்டித்
    தெளிவாக கிலியுடனே வயநமசி யென்று
கோனென்ற குறளியே வருவாய் நீயும்
    குணமாகச் சொன்ன தெல்லாம் செய்வா யென்று
வானென்ற இந்திரஜால மையை யப்பா
    வகையாகத் தானெடுத்துச் சொல்லக் கேளே.

விளக்கவுரை :

குறளி தியானத்தின் மகிமையைக் கூறுகிறேன் கேட்பாடாக. மனத்தெளிவுடன் " ஓம் ..... அவ்வும் .... மவ்வும் ...... ஸ்ரீரீம் ... கிலீம் ... வயநமசி .... ஓம்" என்று உச்சரித்துவிட்டு உடனே குறளியே வருவாய். வந்து நான் சொல்வதையெல்லாம் செய்வாய் என்று சொல்லி இந்திர ஜால மையை எடுத்துப் போடவும். பின்னா் செய்ய வேண்டியதை கூறுகிறேன் கேள்.

தொட்ட இடம் கிழியும் ஜாலம்

97. கேளப்பா குறளியைத்தான் லட்சமோதி
    கெனிதேமாய்ப் பலிபூசை நடத்தி யப்பா
சூளப்பா மையெடுத்து விரலிற் றொட்டுச்
    சுகமாகக் குறளியைத்தான் தியான மோது
வாளப்பா மேலெங்குந் தொட்டா யானால்
    வகையாகத் தொட்டவிடங் கிழிக்கவேண்டும்
ஆளப்பா செய்யென்று நினைத்துக் கொண்டால்
    அப்பனே தொட்டவிடங் கிழிக்கும் பாரே.

விளக்கவுரை :
              
மேற்கண்ட மந்திரத்தை இலட்சம் தடவைகள் செபித்து பலியிட்டு பூசை செய்து அந்த மையை எடுத்து விரலில் தொட்டு குறளியைத் தியானம் செய். பின்னா் நான் தொட்ட இடம் கிழிய வேண்டும் என்று நினைத்து எந்த இடத்தை தொடுகின்றாயோ அந்த இடம் கிழியும்.

 காதுகள் ஆடும் ஜாலம்

98. பாரென்ற கோரகரமாண மதுதானப்பா
    பண்பான கெஜகரணஞ் சொல்லக் கேளு
சேரென்ற மையையெடுத்து விரலிற் றொட்டு
    செம்மையாய்க் குறளியுட தியானஞ் செய்து
வேரென்ற யிருகாதுந் தொட்ட போது
    வதமான விருகாது மாடும் போது
தாரென்ற கெஜகரண மிதுதானப்பா
    தயவான போகருட கடாட்சந்தானே.
         
விளக்கவுரை :

தொட்ட இடம் கிழியும் கோகரண ஜாலம் சொன்னேன். இப்போது இரண்டு காதுகளும் ஆடும். கஜகா்ண ஜாலம் பற்றிச் சொல்லுகிறேன் கேள். முன்னா் கூறிய மையை எடுத்து விரலில் தொட்டு குறளியை முன்னா் போன்று தியானம் செய்து விட்டு உன்னுடைய இரு காதுகளையும் தொட்டால்  உனது இரண்டு காதுகளும் ஆடும். இதுவே கெஜகரண ஜாலம் என்பது. இது போகருடைய கடாட்சத்தினால் சித்தியாகிறது.

ஆற்றல் தரும் காளி தியானம்                                                

99. தானையா காளியுட தியானங் கேளு
    பண்பான கெஜகரணஞ் சொல்லக் கேளு
சேரென்ற மையையெடுத்து விரலிற் றொட்டு
    செம்மையாய்க் குறளியுட தியானஞ் செய்து
வேரென்ற யிருகாதுந் தொட்ட போது
    வதமான விருகாது மாடும் போது
தாரென்ற கெஜகரண மிதுதானப்பா
    தயவான போகருட கடாட்சந்தானே.

விளக்கவுரை :

அன்னை காளிகா தேவியின் தியானத்தின் ஆற்றலை கூறுகிறேன் கேட்பாயாக. " அரிகாளி ... ஆகாச காளி .... ஓடி காளி.... வீரகாளி ..... சூல கபால காளி .....மோடி தேவி ... பூமி காளி ..... ஓங்காளி .... ஓம் பிடாரி ... மாகாளி ..... போடி காளி ..... மந்திர காளி ......

100. எண்ணவே ஓம் ... ஆம் ... கோதண்ட ரூபி
    எளிதான யாளிவா கவனத்திலேறி
வெண்ணவே யரசரோடு சபைகள் மெச்ச
    விருதலகை கொடியுடன் வேதானஞ் சூழ
அண்ணவே யாங்கார சக்தி கொண்டு
    அடைவாக வாவென்று லட்சமோதி
பண்ணவே பூசைசெய்து வெள்ளி தோறும்
    பாங்காகச் செய்தக்கற்  சித்தி யாமே.

விளக்கவுரை :

ஓம் ..... ஆம் ...... கோதண்ட ரூபி ..... ஆளி வாகனத்தில் ஏற சபையோர்கள் மெச்ச இருபக்கமும் விருதலகை கொட்யைப் பிடித்தபடி வேதாளங்கள் சூழ, ஆங்கார சக்தி கொண்டு வா..."என்று இலட்சம் தடவைகள் ஓதி, பூசை செய்யவும். இதனை வெள்ளிக்கிழமைகளில் செய்தால் கடினமான செயல்களெல்லாம் கைகூடி சித்தியாகும்.

புலிப்பாணி ஜாலத்திரட்டு, புலிப்பாணி, Pulipani, Pulipani Jaalathirattu, Pulipani Siththar