புலிப்பாணி ஜாலத்திரட்டு 171 - 175 of 211 பாடல்கள்

புலிப்பாணி ஜாலத்திரட்டு 171 - 175 of 211 பாடல்கள்


171. நீதியாய்  குருபாதந்  தலை  வணங்கி
    நினைவாகப்  பெரியோர்கள்  பதமும்  போற்றி
மோதியே  சித்தர்  முத்தர்  முனிகருப்பன்
    முதலான  ராட்சதையும்  ஏவல்  வைப்பும்
தீதான  சத்துருக்கள்  மிருக  ஜாதி
    தீயகொடு   விஷமுதலா  யெதிர்  நில்லாது
மீதுநீ  நினைத்தபடி  யெல்லாஞ்  சித்தி
    மிதமான  வாளுஞ்  செக்குலக்கை  நாட்டே.

விளக்கவுரை :

குருவின்  பாதம்  வணங்கி , மனதில்  பெரியோர்களின்  பாதம்  போற்றி , சித்தர் , முத்தர் , முனி , கருப்பன்  இவர்களின்  அருளினால்  , ராட்சதன் , ஏவல் ,வைப்பு , எதிரிகள் , மிருகங்கள் , விஷமுள்ள  ஐந்துகள்  எதுவும்  உனது  முன்னால்  நில்லாது.  நீ  நினைத்தக்  காரியங்கள்  கைகூடும்.  ஆதலின்  உடனே  ஒரு  வாள் , செக்குலக்கையை  நிற்க  வைக்கவும்.

172. நாட்டியே  யுலக்கை  முன்பு  தேங்காயொன்று
    நலமான  தேங்காய்முன்  குறடா  வொன்று
           கூட்டியே  யதின்பின்பு  பாதரட்சை
    குறியாக  வதின்முன்பு  தேய்ந்த  மாறுந்
           தேட்டியே  யதின்முன்பு  வாழை  நாட்டித்
    தெளிவாக  பந்தலிற்  பூமாலை  சூட்டி
           ஆட்டியே  மாவிலைத்  தோரண  முங்கூட்டி
    அப்பனே  பூஜைபலி  பெலக்கச்  செய்யே.

விளக்கவுரை :

நிற்கவைத்த  உலக்கையின்  முன்பு  ஒரு  தேங்காயும் , தேங்காயின்  முன்னே  ஒரு  குறடா  ஒன்றும் , பின்னர்  பாதரட்சையும் , (செருப்பு)  அதன்முன்பு  தேய்ந்த  விளக்குமாறும் , அதன்முன்பு  வாழையும்  நாட்டி , அதன்மேல்  பந்தலிட்டு  பூமாலை , மாவிலைத்  தோரணமும்  கட்டி , பூசைசெய்து  பலியிடவும்.

173. பெலக்கவே  யெட்டிமுளைக்  கருவும்  பூசி
    பேதமில்லை  அஷ்டதிக்கி  லடித்துப்  போடு
அயக்கவே  கோடேழு  கீறிப்  போடு
    அப்பனே  காளியுட  தியான  மோது
சிலக்கவே  திரையைநீ  யெடுக்கச்  சொல்லு
    செயலாக  யவன்வந்து  சார்வானாகில்
கலக்கவே  கக்கு  கக்கு  காளிதுர்க்கி
    கருத்தான  அரி ... உம் ... ஆம் ... ஒம் ... மென்றோதே.

விளக்கவுரை :

நன்றாகப்  பூசைபலி  செய்து  முடித்ததும்  எட்டி  முளைகள்  சீவி  அதில்  கருவும்  பூசி  எட்டு  திக்குகளிலும்  அடித்து  ஏழு  கோடுகள்  தரையில்  கீறிவிட்டு  காளிகா  தேவியை  தியானம்  செய்யவும்.  பின்னர்  திரையை  எடுக்கச்  சொல்லவும்.  அவன்  வந்து  எடுக்கும்போது  " கக்கு ... கக்கு ... காளி ... துர்கா . ..அரி ...உம் ... ஆம் ... ஒம் ... "  என்று  ஒதவும்.

174. ஒதியே  கண்கட்டு  மையை  வாங்கி
    உத்தமனே  கைதன்னிற்  றடவிக்  கொண்டு
வாதியே  வேப்பிலையை  யுருவிப்  போடு
    வளமான  தேள்கொட்டி  மயங்குவான்  பார்
ஆதியே  றங் ... றங் ... சூலி  யென்றால்
    அப்பனே  விழுந்தோடி  யெரிய  வீழ்வான்
சோதியே  வறி ... வறி ... மறி ... சண்டாளி
    சுகமான  அம் ... அம் ... அம் ... என்றெண்ணே.

விளக்கவுரை :

ஒதியதும்  கண்கட்டு  மையை  எடுத்து  கைகளில்  தடவிக்  கொண்டு  வேப்பிலையை  உருவிப்  போடு.  அப்போது  அவன்  தேள்  கொட்டி  மயக்கமடைவது  போலாவான்.  பின்னர் , "றங் ... றங் ... சூலியென்றால்  அவன்  விழுந்து  உருண்டு  அப்பால்  போய்  விழுவான்.  பின்னர் , " அம் ... அம் ... அம் ... "  என்று  ஒதவும்.

175. எண்ணியே  விபூதியைத்தான்  தியான  மோதி
    எதிர்போட  யவன்விழுவான்  கண்டு  பாரு
நண்ணவே  ஒடு ... படு ... சுவாஹா ... வென்று
    நலமான  விபூதியள்ளி  யோதிப்  போடு
கண்ணவே  யவன்விழுவான்  கோபிப்பான்  பார்
    கனிவான  அம் ... அம் ... நிம் ... ஒம் ... என்றேதான்
உத்தமனே  வேப்பிலை  மண்ணுளுந்துடனே  யரிசி
    உத்தமனே  விபூதிமுத  லோதிப்  போடே.

விளக்கவுரை :

ஒதியதும்  விபூதியை  எடுத்து  தியானம்  செய்து  எதிரில்  போட்டால்  மீண்டும்  கீழே  விழுவான்.  பின்னர் , " ஒடு ... படு ... சுவாஹா ..."  என்று  சொல்லி  விபூதியை  எடுத்து  ஒதி  போட்டால்  மீண்டும்  விழுவான்.  கோபப்படுவான்.  அதன்பின்னர்  அனபுடன் , "அம் ... அம் ... நிம் ... ஒம் ... "  என்று  கூறியபடி  வேப்பிலை , மண் , உளுந்து , அரிசி இவைகளுடன்  விபூதியைச்  சேர்த்து  ஒதிப்  போடவும்.
   

புலிப்பாணி ஜாலத்திரட்டு, புலிப்பாணி, Pulipani, Pulipani Jaalathirattu, Pulipani Siththar