Showing posts with label காகபுசுண்டர் குறள். Show all posts

காகபுசுண்டர் குறள் 11 - 16 of 16 பாடல்கள்

    
11. உலகி லறிந்தோ ரொருநாளும் மாளார்
பல நினைவை விட்டுநீ பார்.   

விளக்கவுரை :
   
12. கண்டோருஞ் சொல்லார் கருத்தாற் பெரியோரைத்
தொண்டுசெய்து பெற்ற சுகம்.   

விளக்கவுரை :
   
13. ஆதியிற் சொன்னவிய ரண்ட மதையெடுத்து
மாதுசிவன் பூசைசெய்து வை.   

விளக்கவுரை :   
14. முப்பொருளைச் சுட்டு முழுதழுது நீறாக்கித்
தப்பாம லுண்டுநிலை சார்.   

விளக்கவுரை :
   
15. யோகமுடன் கற்ப முரைத்தேனீ ரெட்டினில்
வேகமுடன் கண்டுணரு வீர்.   

விளக்கவுரை :
   
16. வாசிமுனி மைந்தா மருவு பிரமத்தில்
மோசம்வா ராகுறள்முற் றும்.   

விளக்கவுரை :

காகபுசுண்டர் குறள் 6 - 10 of 16 பாடல்கள்

    
6. சித்தர் பதினெண்மர் செய்கையிற் றோன்றாத
அத்தனரு ளும்புசுண்டன் யான்.   

விளக்கவுரை :

   
7. சொன்னே னறிந்து சுகமா யுலகோருக்
கெந்நாளும் வாழ்கவென்றே யான்.   

விளக்கவுரை :
   
8. கண்ணுள் மணியாகிக் காரணமாய் நின்றான்
மண் முதிர்பதயு மாறு.   

விளக்கவுரை :

   
9. விண்டனே ஞானம் வெளியாக முப்பத்தி
ரண்டி லறிவீர் நலம்.   

விளக்கவுரை :
   
10. நேத்திரத்தைக் காகம்போல் நிச்சய மாய்நிற்க
ஆத்துமத்தி லானந்த மாம்.   

விளக்கவுரை :

காகபுசுண்டர் குறள் 1 - 5 of 16 பாடல்கள்


குறள் வெண்பா

1. சின்மயத்தைப் போற்றிச் சிவராச யோகத்தில்
நன்மை பராபரத்தை நாடு

விளக்கவுரை :


2. அண்ட முடிமீதி லங்கிர விமதியைக்
கண்டுதரி சித்தல் கதி.   

விளக்கவுரை :

   
3. வலமிடமாய் நின்ற மதிரவியை மாறி
விலகா தடியினிற்பின் வீடு.   

விளக்கவுரை :
   
4. அறுபத்து நால்யோக மவ்வளவுந் தள்ளி
ஒருபொழுது முண்டுநிலை யோர்.   

விளக்கவுரை :
   
5. உலகமே மாயமென வுன்மனதிற் கண்டு
நலமாக நாதனடி நம்பு   

விளக்கவுரை :
Powered by Blogger.