போகர் சப்தகாண்டம் 1261 - 1265 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1261 - 1265 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1261. புதைத்துமே ரிஷிகோடி முனிவர்தாமும் பஊதலத்தி லிந்திரனாம்சித்தனுக்கு
பதைத்துமே சாபமது கொடுத்திட்டார்கள் பாருலகில் பத்தனாய்த் திரியவென்றார்
சிதைத்துமே இந்திரனாஞ் சித்தராஜன் சிறையிட்டு முறையிட்டுத் திரிந்தான்பாரில்
வதைத்துமே தானிறுந்ர யிந்திரசித்தை வாகுடனே சாபமதை தீர்த்தார்பாரே   

விளக்கவுரை :


1262. தீர்க்கவே ஜனகமுனி பெரியோர்தாமும் திறமுடனே கானகத்தில் கொண்டுசென்று
பார்க்கவே யெல்லோரும் புகழவென்று பாவித்தார் ஞானோபதேசவுண்மை
தேர்க்கவே சித்தருட மகத்துவத்தை தெளிவுறவே ஜனகமுனி யெடுத்துக்கூற
மார்க்கவே மனோலயத்தி லகித்துநின்று மதிப்புடனே யோகசமாதியில் நின்றாரே

விளக்கவுரை :

[ads-post]

1263. நின்றாரே லங்கைபதியோரந்தன்னில் நெடுந்தூரம் சுனையொன்று தடாகமுண்டு
குன்றான மலைபோலப்பூஷணங்கள் கோடானகோடி செம்பொன் கிடாரந்தன்னை
வன்றான பூமியிலேவைத்தார் வாகான வேதாளங்காவலுண்டு
தன்றான பூஷணமாஞ் சாடிவைப்பை தரணியிலே போகரிஷிகண்டிட்டாரே

விளக்கவுரை :


1264. கண்டிட்டே னிலங்கைக்கு மேற்புரத்தில் கருவான சுரங்கமுண்டு கிடாரந்தன்னில்
குண்டிட்ட காவடியாங் கோட்டைவாசல் கொடிதான கிங்கிலியர் அனுமார்கூட்டம்
தாண்டிட்ட காவற்கார ணேகருண்டு சதகோடி ரிஷிகளெல்லாம் வருவார்போவார்
கொண்டிட்ட சீதையாபரணந்தன்னைக் கோடித்துத்தான்வருவார் முனிவர்தாமே

விளக்கவுரை :


1265. முனியான லங்கைக்கு வடபாகத்தில் முனையான மலையோரம் பாரையண்டு
தனியான மண்டபமாங் கோட்டையுண்டு தாக்கான கடலோரங் குத்துக்கல்லாம்
கனியான தேவதாமாவிருட்சம் கடலருகே ராட்சதாள் கூட்டங்காவல் 
பணியான சூரியசந்திரனுங்காணார் பாருலகில் யெவராலும் பார்க்கப்போமோ

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar