போகர் சப்தகாண்டம் 2891 - 2895 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2891 - 2895 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2891. பொய்யென்பார் பூதலத்தார் சொல்லுவார்கள் பொங்கமுடன் யான்கண்ட வரையிற் சொன்னேன்
மெய்யுடனே புலிப்பாணி தன்னைக்கண்டேன் மேதினியில் அனேகமதாய் பாபஞ்செய்தார்
கைதவமாய் அவர்செய்தபாவந்தன்னை கண்டுமல்லோ எமதர்மராசர்தானும்
பையவே வாக்கினைகள் செய்யக்கண்டேன் பாழ்நரகிலிழுத்து போகங்கண்டேன்தானே

விளக்கவுரை :


2892. தானான புண்ணாக்கர் தன்னைக்கண்டேன் தாக்கான அவர்செய்தகொடுமைமெத்த
தேனான எனதையர் காலாங்கிநாதர் தேர்வேந்தரானவரும் சொன்னதுண்டு
பானான புண்ணாக்கர் தன்னையானும் பரமனிட கைலைதனில் கண்டேனப்பா
கோனான புண்ணாக்கர் செய்தபாபம் கோடியுண்டு லக்கோயில்லை என்பார்காணே

விளக்கவுரை :

[ads-post]

2893. காணவே யவருக்கு வாக்கினைகள் கண்கொள்ளமுடியாது வைகுண்டத்தில்
தோணவே மாடுகட்டி புண்ணாக்கீயார் தொடர்வழக்கு மெத்தவதிகாரத்தாரம்
வேணவே வட்டிக்கு வட்டிவாங்கி மேதினியிலிருந்து பலமோசஞ்செய்து
நாணவே நாணயங்க ளதிகஞ்சொல்லி நயமுடனே வஞ்சகமும் செய்தார்தாமே

விளக்கவுரை :


2894. செய்ததினால் தர்மராஜனானோர் சீருலகில் செய்ததொரு பாபத்தாலே
நையவே வாக்கினைகள் செய்யவென்று நாட்டமுடன் விசாரணையில் கொண்டுசென்றார்
பையவே குளிகைகொண்டு பக்கல்சென்றேன் பார்த்தேனே யவருக்கு நடக்குந்தீமை
பொய்யல்ல வுலகுதனில் சொல்லப்போனால் பொங்கமுடன் நம்பார்கள் சண்டிமாண்பே

விளக்கவுரை :


2895. சண்டியான் சட்டமுனி தன்னைக்கண்டேன் தகைமையுடன் அவர்செய்த பாவங்கேளு
அண்டிவந்த சீஷருக்கு உபதஞ்சொல்லி அநியாயமாக வல்லோ நூல்மறைத்தார்
கண்டிதமாய் பாடல்களை சொன்னார்போல கருமறைவு காரணத்தை மறைத்துப்போட்டார்
பண்டிதங்க ளில்லாமல் செய்ததாலே பாவம்வந்து சேர்ந்ததென தண்டித்தாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar