போகர் சப்தகாண்டம் 2476 - 2480 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2476 - 2480 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2476. தாமான சீரகத்தின் தயிலந்தன்னை தயவுடனே மூன்றுமுறை யிப்படியே செய்ய
பாமான வாலுகையால் காரமேறி பரிவுடனே புகையோடு நெடிதானாகும்
காமான தயிலமது என்னசொல்வேன் காசினியில் சித்தர்களுங் காணமாட்டார்
பூமானாம் காலாங்கி நாதர்பாதம் புகழ்ச்சியுடன் பாடினேன் போகர்தானே 

விளக்கவுரை :


2477. தானான வின்னமொரு பாகம்பாரு தயவுடனே சொல்லுகிறேன் மைந்தாகேளு
வேனான ஓமமது சேர்தானப்பா வேகமுடன் கொண்டுவந்து பாண்டமிட்டு
பானான ஜலமதுவும் ரெட்டிப்பிட்டு பாங்குடனே பூநீறுகாலதாக
பானான ஜலமதனை விட்டபின்பு மதிப்புடனே வாலுகையை மேலேவையே

விளக்கவுரை :

[ads-post]

2478. வைக்கவே சீலையது வலுவாய்ச்செய்து வாகுடனே திராவகத்தை வாங்கிமைந்தா
மெய்க்கவே மூன்றுமுறை யிப்படியே செய்து மேன்மையுடன் திராவகத்தை யெடுத்துக்கொண்டு
மொய்க்கவே முன்சொன்ன திராவகமுமப்பா மோசமது வாராமல் செப்பக்கேளு
பொய்க்காமல் சரியெடையாய் எடுத்துக்கொண்டு பொன்னவனே வெள்ளுள்ளி சேர்தான்போடே

விளக்கவுரை :


2479. போடவே திராவகத்திலாட்டு மைந்தா புகழான வெள்ளுள்ளி கைபோலாகும்
நீடவே பூண்டுக்கு காயமேரி நிலையான வெள்ளுள்ளி காரமாச்சு
பாடவே செம்மறியின் தோலாலப்பா பாகமுடன் தான்பொதிந்து தைத்துப்போடு
சாடவே மண்டலஞ் சென்றெடுத்துப்பாரு சரக்கான பெருங்காயம் காரமாச்சே

விளக்கவுரை :


2480. மாயமின்னமொரு மார்க்கம்பாரு கருவான காசியென்ற கட்டியப்பா
நேயமுடன் சொல்லுகிறேன் மைந்தாகேளு நேர்புடனே வகிலத்தின் தூளுகூட்டி
பாயமுடன் பாக்கினிட கிஷாயந்தன்னால் பாகமுடன் மூன்றுநாளாட்டி மைந்தா
தூயமுடன் ரவிதனிலே காயப்போடு துப்புரவாய் காசியென்ற கட்டியாச்சே 

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar