போகர் சப்தகாண்டம் 2956 - 2960 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2956 - 2960 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2956. தானான யின்னம்வெகு வதிசயங்கள் தன்மையுடன் சொல்லுகிறேன் தரணியோர்க்கு
வேனான விலாடரிஷி தன்னைக்கண்டேன் வியாசமுனி சூதமுனி தன்னைக்கண்டேன்
கோனான குருமுனி தன்னைக்கண்டேன் கொற்றவனார் போகரிஷி தன்னைக்கண்டேன்
தேனான திருமூலக் கூட்டத்தார்கள் தெய்வபுற பதிதனிலே கண்டேன்பாரே

விளக்கவுரை :


2957. பார்த்தேனே சிவாக்கியர் தன்னைக்கண்டேன் பாலகனாம் இடைக்காட்டார் தன்னைக்கண்டேன்
மூர்த்தவனாம் அகப்பேய்சித்துதம்மை முடியோடுஞ் சடையோடும் யானுங்கண்டேன்
தீர்த்தகிரி தனிலிருந்த காசிநாதர் திறமுடன் கொண்டுவரர்கண்டேன்யானும்
ஏர்த்திடவே வரரிஷிதன்னைக்கண்டேன் எழிலான சுந்தரரைக் கண்டேன்தானே

விளக்கவுரை :

[ads-post]

2958. கண்டேனே யின்னம்வெகு சித்துதம்மை கைலாயபர்வதமாம் வைகுண்டத்தில்
அண்டமுனி ராட்சதர்கள் கோடாகோடி அவனியிலே இருந்துவந்தோர் சொல்லொணாது
கொண்டல்வண்ணன் மைத்துனனாம் தருமராசன் கொற்றவனாம் தம்பிமுதல் யாவுங்கண்டேன்
பண்டுலவமாலையணி சத்துருசங்காரன் பாவையெனும் சீதைதனைக் கண்டேன்தானே

விளக்கவுரை :


2959. கண்டேனே ராவணனார் சூர்ப்பனகைதானும் கைலங்கிரி வைகுண்டப்பதியிலோரம்
தொண்டரெனும் அறுபத்து மூன்றுபேர்கள் தோராத பரவநாச்சியாருங்கண்டேன்
விண்டேனே விண்ணுலகில் சேதியெல்லாம் விருப்பமுடன் நானறிந்தேன் சிலதுகாலம்
கொண்டல்வண்ண னச்சுதனுமங்கிருக்க கோபாலன் தாயாரும் கண்டிட்டேனே 

விளக்கவுரை :


2960. கண்டிட்டேன் வைகுண்டப்பதியில்தானும் கரியமால் சேனையது கூட்டந்தன்னை
தொண்டிட்ட ஆழ்வார்கள் கூட்டந்தன்னில் தொடர்ந்துமே யவரிடமாய் பக்கஞ்சென்றேன்
விண்டிட்ட ஆழ்வாதி சாத்திரங்கள் வெகுமோசம் திகுவனுடன் பின்பின்னாக  
துண்டிட்ட சாத்திரத்தில் தோஷமுண்டு தூராதி சிவன்தனை தோஷித்தாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar