போகர் சப்தகாண்டம் 2986 - 2990 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2986 - 2990 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2986. பத்தான ஏழாங்கால் தன்னிலப்பா பாகமுடன் மூவைந்து மூண்டதாக
சித்தான எட்டாங்கால் தன்னில்தானும் சிறப்புடனே பஞ்சதசமாண்டு தானும்
கத்தான சித்தர்களும் தொண்டுசெய்து சூழ்ந்துமே வெகுகோடி காலம்பார்த்து
வத்தான சமாதியிடங்காத்திருந்தார் வாகுடனே கமலமுனி வாக்குகேளே

விளக்கவுரை :


2987. வாக்கான கமலமுனி சித்துதானும் வாகுடனே சமாதிக்குப் போகும்போது
நோக்கமுடன் கமலமுனி சித்துதாமும் நுணுக்கமுடன் தாமறிந்த வித்தையெல்லாம்
பாக்கமுடன் உபதேசம் செய்யவென்று பாண்மையுடன் சித்தர்களை அழைத்துதானும்
சோக்கமுடன் அவர்களிக்க வேண்டுமென்று சுந்தரரை தாமழைத்து கூறினாரே

விளக்கவுரை :

[ads-post]

2988. கூறினார் சீஷர்களே கேளுமெனறார் குவலமுடி மன்னரெல்லாம் என்னைக்காத்தார்
தேரினதோர் சீஷர்களெட்டுபேர்கள் தெளிவுடைய பாலர்களு மாகையாலே 
காரியங்கள் அனனதொருவித்தை மார்க்கம் கருத்துடனே கேளுமென்ன குருவுதாமும்
பாரினிலே இதிகாச வித்தைவிட்டு பாழான வித்தைகளை கேட்டார்தாமே

விளக்கவுரை :


2989. கேட்கையிலே ஒருசீஷன் வசியங்கேட்டான் கேடுள்ள ஒருசீஷன் மோகனமுங்கேட்டான்
நீட்டமுடன் ஒருசீஷன் வாதங்கேட்டான் நினைவான வாதத்தை போதியென்றான்
வாட்டமுடன் ஒருசீஷன் பிரணவத்தைக்கேட்டான் வாகுடனே பிரணவத்தை வுச்சரிக்க
நாட்டமுடன் ஒருசீஷன் ஞானங்கேட்டான் நலமான குளிகையது கேட்டார்தாமே  

விளக்கவுரை :


2990. கேட்டாரே குளிகையது மார்க்கந்தன்னை கெவனமுடன் குளிகையது வேண்டுமென்றான்
பூட்டமுடன் ஒருசீஷன் புன்தங்கேட்டான் புகழான லோகத்தின் வுளவுகேட்டான்
காட்டமென்ற ஒருசீஷன் நிதியுங் கேட்டான் கருவான தயிலத்தின் மறைப்புகேட்டான்
மாட்டிமையாமொரு சீஷன் தவத்தைக்கேட்டான் மார்க்கமுடன் பலபலவாய் கேட்டார்பாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar