போகர் சப்தகாண்டம் 2611 - 2615 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2611 - 2615 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2611. சொல்லவே பூரமென்ற கட்டைதானும் சூட்சமுடன் தாமுரைப்போம் மைந்தாகேளு
வெல்லவே பூரமது கொண்டுவந்து வேகமுடன் முலைப்பாலில் ஊறப்போடு
கொல்லவே மூலியது கேளுமைந்தா கொடிதான வாடுதின்னா மூலிதானும்
புல்லவே சுறுக்கதுதான் நாலுசாமம் புகழவே தான்கொடுக்க விபரங்கேளே

விளக்கவுரை :


2612. கேளேதான் மற்றாநாள் பின்னுங்கேளு கெடியான யிண்டிலையும் சாமம்நாலு
தாளேதான் பிரட்டியதை சுறுக்குதாக்கு சாங்கமுடன் கட்டியது இறுகிக்காட்டும்
பாளேதான் போகாமல் தைவேளைச்சார் பாகமுடன் பின்னுமது சாமம்நாலு
வீளேதான் சுருக்கிடவே பின்னுங்கட்டும் வேதாந்தத் தாயினது கடாட்சந்தானே

விளக்கவுரை :

[ads-post]

2613. தானான பூரமது சாற்றக்கேளு தயையுடனே காரமென்ற படிகாரந்தான்
மானான பூரத்துக் கிரட்டிமைந்தா மன்னவனே வாறுவகை செயநீர்தன்னால்
பானான வெண்ணெயது போலேயாக்கி பாலகனே பூரத்துக் கங்கிபூட்டி
கோனான கவசமது வலுவாய்ச்செய்து கொற்றவனே ரவிதனிலே காயப்போடெ

விளக்கவுரை :


2614. போடவே சீலையது காய்ந்தபின்பு பொலிவாகப் பத்தெருவிற் புடத்தைப்போடு
நீடவே புடமதுவும் ஆறிப்பாரு நித்தமுடன் பூரமது பொருமிக்கட்டும்
கூடவே கட்டிதனை எடுத்துக்கொண்டு கோளாறு நேராமல் சட்டிக்குள்ளே
நீடவெ யுப்புதனை சட்டிக்குள்ளே நிறையவே பாதிநடுமையம்வையே 

விளக்கவுரை :


2615. வைக்கவே மேலுமந்த வுப்பைக்கொட்டி மறவாமல் மேற்சட்டிகொண்டுமூடி
துப்புரவாய்ச் சீலையது வலுவாய்ச்செய்து துடியான வாலுகையில் எரிப்பாயப்பா
தப்பாமல் சாமமது எட்டுசாமம் சாங்கமுடன் தானெரிப்பாய் பான்மையாக
துப்புரவாய் ஆறினபின் எடுத்துப்பாரு குணமான பூரமது பற்பமாச்சே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar