போகர் சப்தகாண்டம் 2936 - 2940 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2936 - 2940 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2936. நிறுத்தையிலே சட்டமுனிக்கா யனெகம் நிருதியுடன் தான்செய்தார் வூசியாலே
திருத்தமுடன் நாவதனிலூசிகொண்டு திகழுடனே வுண்ணாக்கில் காட்டாரப்பா
பருத்தமுள்ள வாக்கினைகள் இல்லைகண்டேன் பாழ்நரகமவருக்கு இல்லையப்பா
பொருத்தமுடன் அவர்தனக்கு புத்திசொல்லி பொங்கமுடன் மறுவாசல்கொண்டு சென்றாரே

விளக்கவுரை :


2937. சென்றுமே யவர்தனக்கு பதம்மாத்தி சிறப்புடனே எந்நாளுங் கைலைதன்னில்
குன்றின்மேல் சாவலுடன் ரிஷிகள்பக்கல் கொற்றவனாம் எமதர்மராசன்பக்கல்
வென்றிடவே தவயோக புஷ்பசாங்கம் வேகமுடன் முனிவருக்கு பூசைமார்க்கம்
அன்றலுடன் சதாகாலமங்கிருக்க வவர்தனக்கு கட்டளைகள் விதித்திட்டாரே

விளக்கவுரை :

[ads-post]

2938. விதிக்கையிலே வின்னமொரு வதிசயங்கள் வினவுடனே யாமுரைப்போ மின்னங்கேளு
துதித்தலுடன் மச்சமுனி தன்னையானும் துப்புரவாய் வைகுண்டபதியில்கண்டேன்
மதிக்கவே சாத்திரத்தை மறைவுபேசு மகத்தான நூல்களையே கெடுத்துப்போட்டார்
பதிக்கமுடன் மாந்தர்க்குப் பொய்பொய்யாக பாடிவிட்ட படியாலே கர்மமாச்சே

விளக்கவுரை :


2939. ஆச்சென்ற படியாலே நூல்கள்தம்மை அப்பனே பலபேரும்சொல்லக்கேட்டு
கூச்சலுடன் சித்தர்முனி ரிஷிகள்வாக்கு குறையாமல் பாடிவிட்டார் அனந்தங்கோடி
மேச்சலுடன் முன்பின்னாய்ச் சொன்னதாலே மேதினியில் மாந்தரெல்லாம் சுட்டலைந்து
பாச்சலுடன் மாண்டார்கள் கோடாகோடி பலபலவாம் கெட்டலைந்தோர் கோடியாமே

விளக்கவுரை :


2940. கோடிபேர் சாத்திரங்கள் பார்த்துமென்ன குவலயத்தில் கைமறைப்பு இல்லாமற்றான்
நாடியே சாத்திரங்கள் மிகவாராய்ந்து நாணமுடன் மெய்போலப்பாடிவிட்டார்
ஓடியே கோர்வைதான் மெய்யென்றெண்ணி உத்தமர்கள் கெட்டவர்கள் கணக்கோயில்லை
தேடியே திகைத்துமிக வாடிப்போனார் தேசத்தில் அதிகமுண்டு தெளிவுதாமே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar