2381. ஆச்சென்று விடுகாமல் கண்ணாடிக்கு அப்பனே காரமென்ற யீயந்தன்னால்
பூச்சென்ற கட்டிக்கு
ரசச்தைதாக்கிப் புரட்டினேன் கண்ணாடிக்குள்ளேயப்பா
பேச்சென்ற திருமுகம்
காணலாச்சு பேறான சுடரொளிபோல் முகமுங்கண்டேன்
மாச்சலுடன் வட்டொளிதன்னை
யானும் மயங்காமல் கண்டறிந்தேன் புனிதவானே
விளக்கவுரை :
2382. புனிதமுடன் கண்ணடி
முடித்தபோது புகழான சித்தர்முனி ராசரெல்லாம்
கனிவுடனே கண்ணடிப்
பார்த்தபோது கட்டழகா யெந்தனையும் வரவழைத்து
நனியுடனே எந்தனுக்கு
உபசாரங்கள் நாட்டமுடன் செய்துவித்து ஆசிர்மித்து
முனிபோன்ற ரிஷிசித்தர்
எல்லாந்தானும் முயற்சியுடன் புத்திமான் என்றிட்டாரே
விளக்கவுரை :
[ads-post]
2383. புத்திமான் என்றுமே
சந்தோஷித்து புகழ்ச்சியுடன் காலாங்கி சீஷனல்லோ
சத்தியமா யுன்னொருவன்
செய்வான்மூனே தாரணியிலஃ செய்வதற்கு புத்தியுண்டோ
வெற்றியுள்ள குருவுகந்த
சீஷன் உலகத்திலுனைப்போல ஒருவருண்டோ
பத்தியுடன் எந்தனுக்கு
உபசரங்கள் பலகாலும் பாவித்தார் பான்மையாமே
விளக்கவுரை :
2384. பான்மையாம் உபசாரம்பெற்று
யானும்பலபலவா மாச்சரிய வித்தையெல்லாம்
மேன்மையுடன் சீனபதி
யுலகத்தோர்க்கு மகிழ்ச்சியுடன் செய்துவைத்தேன் கோடிவித்தை
மாண்மையுடன் பூநீரை
காண்பார்சித்தர் மார்க்கமுடன் துறைவழியுங் காணார்தாமும்
காண்மையுடன் காலாங்கி
கடாட்சத்தாலே கண்டறிந்தேன் கண்ணடிகாய்ச்சத்தானே
விளக்கவுரை :
2385. தானான கற்பூர வைப்புசொல்வேன்
தாரணியில் சித்தர்முனி செய்ததில்லை
பானான பழுப்புநிற
கற்பூரந்தான் பாலித்தார் கோடிமுறைபாலித்தார்கள்
மானான கற்பூரம்
பளிங்குதானும் மார்க்கமுடன் செய்வதற்கு மன்னாகேளு
கோனான குருவருளால்
காலாங்கிதம்மை குறிப்புடனே யான்வணங்கி கூறுவேனே
விளக்கவுரை :