போகர் சப்தகாண்டம் 2381 - 2385 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2381 - 2385 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2381. ஆச்சென்று விடுகாமல் கண்ணாடிக்கு அப்பனே காரமென்ற யீயந்தன்னால்
பூச்சென்ற கட்டிக்கு ரசச்தைதாக்கிப் புரட்டினேன் கண்ணாடிக்குள்ளேயப்பா
பேச்சென்ற திருமுகம் காணலாச்சு பேறான சுடரொளிபோல் முகமுங்கண்டேன்
மாச்சலுடன் வட்டொளிதன்னை யானும் மயங்காமல் கண்டறிந்தேன் புனிதவானே

விளக்கவுரை :


2382. புனிதமுடன் கண்ணடி முடித்தபோது புகழான சித்தர்முனி ராசரெல்லாம்
கனிவுடனே கண்ணடிப் பார்த்தபோது கட்டழகா யெந்தனையும் வரவழைத்து
நனியுடனே எந்தனுக்கு உபசாரங்கள் நாட்டமுடன் செய்துவித்து ஆசிர்மித்து
முனிபோன்ற ரிஷிசித்தர் எல்லாந்தானும் முயற்சியுடன் புத்திமான் என்றிட்டாரே

விளக்கவுரை :

[ads-post]

2383. புத்திமான் என்றுமே சந்தோஷித்து புகழ்ச்சியுடன் காலாங்கி சீஷனல்லோ
சத்தியமா யுன்னொருவன் செய்வான்மூனே தாரணியிலஃ செய்வதற்கு புத்தியுண்டோ
வெற்றியுள்ள குருவுகந்த சீஷன் உலகத்திலுனைப்போல ஒருவருண்டோ
பத்தியுடன் எந்தனுக்கு உபசரங்கள் பலகாலும் பாவித்தார் பான்மையாமே

விளக்கவுரை :


2384. பான்மையாம் உபசாரம்பெற்று யானும்பலபலவா மாச்சரிய வித்தையெல்லாம்
மேன்மையுடன் சீனபதி யுலகத்தோர்க்கு மகிழ்ச்சியுடன் செய்துவைத்தேன் கோடிவித்தை
மாண்மையுடன் பூநீரை காண்பார்சித்தர் மார்க்கமுடன் துறைவழியுங் காணார்தாமும்
காண்மையுடன் காலாங்கி கடாட்சத்தாலே கண்டறிந்தேன் கண்ணடிகாய்ச்சத்தானே

விளக்கவுரை :


2385. தானான கற்பூர வைப்புசொல்வேன் தாரணியில் சித்தர்முனி செய்ததில்லை
பானான பழுப்புநிற கற்பூரந்தான் பாலித்தார் கோடிமுறைபாலித்தார்கள்
மானான கற்பூரம் பளிங்குதானும் மார்க்கமுடன் செய்வதற்கு மன்னாகேளு
கோனான குருவருளால் காலாங்கிதம்மை குறிப்புடனே யான்வணங்கி கூறுவேனே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar