போகர் சப்தகாண்டம் 2931 - 2935 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2931 - 2935 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2931. சரிதையுடன் சித்தர்முனி கோர்வையாவும் தப்பென்று தான்மிகவும் வெகுசாய்க்கூறி
கருதிபொருளாராய்ந்து சூட்சாசூட்சம் சுத்தமுடன் தானறிந்து தன்தன்நூலை
விரிவுடனே பாடிவிட்டார் வனந்தங்கோடி விண்ணுலகும் மண்ணுலகுங் கொள்ளாதப்பா
பரிவுடனே சொன்னதுபோல் தானுஞ்சொல்லி பட்சமுடன் தாமுரைத்தார் மாணாக்கராமே

விளக்கவுரை :


2932. மாணாக்கர் வின்நூலை மெய்யென்றெண்ணி மானிலத்தில் வெகுநாளாய் கண்டாராய்ந்து
வஆணாக சாத்திரத்தின் கோர்வைபார்த்து விருதாவாய் சுட்டலைந்து பொருளுந்தோற்று
கோணாமல் பருந்தினது பாகங்காணார் குவலயத்தில் மெய்பொருளை பொய்ப்பொருளதாக்கி
வாணாளை தான்கழித்து மட்டிமாண்பர் மதிகெட்டு நின்றார்கள் மகிமைபாரே

விளக்கவுரை :

[ads-post]

2933. பாரேதான் முப்பூவைக் கெடுத்துப்போட்டார் பலபலவாம் நூல்தோறும் பாடிப்போட்டார்
நேரேதான் விதிமுறைகள் யாவுங்கூறி விதிமுடிக்கும் முறையனைத்துங்குரைத்துப்போட்டார்
சீரேதான் சாத்திரத்தை மெய்யென்றெண்ணி சிறப்புடனே முப்பூவை முடிக்கவென்று
கூரேதான் சட்டமுனி மெய்யாய்ச்சொல்லி குறிப்புடனே நூலதனை மாத்திட்டாரே

விளக்கவுரை :


2934. மாத்தியே கலவரங்கள் மிகவுண்டாகி மன்னவர்கள் தான்மயங்க மறைத்துச்சொல்லி
நேத்தியுடன் பாடல்களை மெய்போல்சொல்லி நேர்மையுடன் திரவியங்கள் பாழாய்செய்து
தூத்தியே வாதத்தை மெய்போல்சொல்லி முறையோடு பொய்சொல்லி துகளகற்றி
சாத்திரத்தைப் பாடினதால் சட்டையோர்க்கு சாபமுடன் வைகுண்டபதியில் தீதே

விளக்கவுரை :


2935. தீதான சாத்திரத்தைக் கெடுத்ததாலே தீங்கஉமிக நேர்ந்தது வைகுண்டத்தில்
நீதமுடன் வாக்கினைகள் மிகவுண்டாகி நித்தியமும் வைகுண்டச்சார்புதன்னில்
காதமது வான்வாசல் கோட்டைக்குள்ளே கால்நடையாய் தாநடந்துசுத்திவந்து
போதமுடன் விசாரணைக்குத் தீமுன்பாக பொங்கமுடன் கொண்டுவந்து நிறுத்தினாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar