போகர் சப்தகாண்டம் 2991 - 2995 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2991 - 2995 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2991. பாரேதான் சீஷவர்க்கம் கேட்கும்போது பலபலவாம் துறையோடு முறைமையெல்லாம்
நேரேதான் குருவான கமலர்தாமும் நேர்மையுடன் சமாதிக்குள் செல்லுமுன்னே
கூரேதான் அவரவர்க்கு தக்கபாகம் குறிப்புடனே தாம்கொடுத்தார் கமலர்தாமும்
ஆரேதான் சீஷவர்க்கமான போக்கு உகமையுடன் ஞானோப மோதிட்டாரே

விளக்கவுரை :


2992. ஓதவே யுகங்கோடி காலந்தானும் வுத்தமனும் சமாதிதனில் இருந்தாரங்கே
நீதமுடன் சமாதிக்கு பூசைமார்க்கம் நேர்மையுடன் நாள்தோறும் செய்திருந்தார்
காதமெனும் சீனபதிமூன்று காதம் கமலமுனிதன்னை யவர்மாந்தரெல்லாம்
வேதமுடன் சிவபூசை மார்க்கத்தோடு வேள்விகளு மனேகமதாய் நடத்துவாரே

விளக்கவுரை :

[ads-post]

2993. நடத்துகையில் சீனபதி சென்றபோது நாதாந்த காலாங்கி நாதர்தம்மை
திடத்துடனே குருதனையே காணவென்று தீரமுடன் சமாதிக்கு சென்றேன்யானும்
மடபதியா மாயிரம்பேர் சீஷவர்க்கம் மகத்தான குருதனையே காணவென்று
வடகோடி கானகத்தில் மாந்தரெல்லாம் வளமுடனே சமாதிபக்க லிருந்தார்காணே

விளக்கவுரை :


2994. காணவென்றால் அவர்பெருமை யாருக்குண்டு காசினியில் இவரல்லால் ஒருவர்க்குண்டோ
வேணபடி மகிமையது யாருக்குண்டு வேதாந்த காலாங்கிநாதர்க்குண்டு
நீணமுடன் சமாதிதனைக் காணவென்று நேர்மையுடன் அங்கிருந்தேன் சிலதுகாலம்
தோணவே எனதையர் காலாங்கிக்கு சோடசமாம் உபசாரம் சொல்லொணாதே

விளக்கவுரை :


2995. சொல்லவென்றால் ராஜாதிராசர்கில்லை சூரியாதி சந்திராதி யவருக்கில்லை
வெல்லவென்றால் இவர்போலும் சித்துமுண்டோ மேதினியில் கண்டதில்லை சமாதிசித்து
புல்லவே திரியாமல் பூசைமார்க்கம் போற்றவார் காலாங்கி தம்மைத்தானும்
அல்லவே யவர்கிருபை வேண்டுமென்று வனேகமாம் கோடிப்பேர் வருணிப்பாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar