போகர் சப்தகாண்டம் 2896 - 2900 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2896 - 2900 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2896. தெண்டமுடன் சட்டமுனி தன்னைக்கண்டு தேர்வேந்தர் எமதர்மராசரண்டை
கொண்டுபோய் விட்டார்கள் கோடிதூதர் கொற்றவனார் எமதர்மராசரங்கே
அண்டையிலே தாருக்குமடியார்தம்மை அங்ஙனமே சாத்தரத்தை பார்ககச்சொன்னார்
தொண்டுசெய்யும் முனிக்கூட்டம் ரிஷிகள்தாமும் சுருதியெனும் சாத்திரத்தை பார்த்தார்தாமே

விளக்கவுரை :


2897. பார்க்கையிலே சாத்திரங்கள் மறைப்புமெத்த பாழாகிமாந்தரெல்லாம் சுட்டுமாண்டார்
தீர்க்கமுடன் மறைபொருளை ஒளித்துச்சொல்லி திடங்குலைந்து போவதற்கு திறவுசொல்லி
சேர்க்கவே ஒன்றுவிட்டு முன்பின்னாக செழிப்புடனே வுட்பொருளை யறியாமற்றான்
கார்க்கவே நூலதனைக் கண்ணாற்காட்டி கருவாகத் தான்மறைத்தார் சித்தர்தாமே

விளக்கவுரை :

[ads-post]

2898. சித்தராஞ் சாத்திரத்தை மறைத்ததாலே சீருடனே யவர்தனக்குத் தீர்ப்புசொன்னார்
மெத்தனவே தீவட்டிகொண்டுதம்மை மேன்மையுடன் நாவுதனை சுடவுங்கண்டேன்
கத்தனே யான்செய்ததப்பிதத்தை காத்துயென்னை ரட்சிக்கவேண்டுமென்று
சுத்தமுடன் கைகட்டி வாய்புதைத்து சுந்திரனும் நின்றிருக்கப் பார்த்தேன்தானே

விளக்கவுரை :


2899. தானான யிவ்வார்த்தை சாற்றப்போனால் தாரணியில் பொய்யென்று சொல்வார்மாண்பர்
கோனான எனதையர் காலாங்கிநாதர் கொற்றவனாராசிர்மத்தாலே யானும்
தேனான குளிகையது பூண்டுகொண்டு தெளிவுடனே பரலோகங்கண்டுவந்தேன்
மானான மஹேஸ்பரி பாதந்தொட்டு மானிலத்தை கண்டொழித்து வந்திட்டேனே

விளக்கவுரை :


2900. வந்தேனே வைகுண்டம் யானும்சென்றேன் வாகுடனே சித்தரகளைக் கண்டேன்யானும்
அந்தமுடன் தெண்டனைக்கு வாளுமானார் அப்பனே யான்கண்டதனேகமுண்டு
சொந்தமுடன் எந்நாளும் வைகுண்டத்தில் சந்தரனே இருக்கமனுதான்கொடுத்து
விந்தையுடன் வாக்கினைகள் நேர்ந்துதங்கே வேகமுடன் காண்பேனே போகர்தாமே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar