போகர் சப்தகாண்டம் 2926 - 2930 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2926 - 2930 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2926. கூறினார் சாத்திரங்கள் சித்தர்பாலில் குறுக்குமுறை நெடுக்குமுறை யனந்தங்கோடி
மீறினார் முன்பின்னாய் பாடிப்போட்டார் மிக்கான சாத்திரத்தின் நேர்மைதானும்
தூறினார் குற்றங்கள் மிகவாய்ச்சொல்லி தூற்றினார் யாக்கோபு நூலைத்தானும்
மாறினார் சித்தர்முனி சாத்திரத்தை மார்க்கமுடன் தான்கெடுத்தார் பான்மையாமே

விளக்கவுரை :


2927. பான்மையுடன் வெகுமாந்தர் கெட்டுப்போயி பாழாகி சாத்திரத்தில் முழுகிப்போனார்
வான்மையுடன் யாக்கோபு செய்தபாவம் வைகுண்ட மவர்தனக்கு கேள்விமெத்த
மேன்மையுடன் சாபமது நேர்ந்ததாலே மேலுக்கு மின்னமொரு பிறவிகாண
மாண்மையுடன் தண்டனைகள் மிகவுமாகி மன்னருக்கு மறுபிறப்பில் குறைவுண்டாச்சே

விளக்கவுரை :

[ads-post]

2928. உண்டான முறைகளை யான்கண்டுவந்தேன் உத்தமனே வுலகுதனிற் சொல்லப்போனால்
சண்டாள மானதொருசிலது மாண்பர்சார்பான பொய்யென்று சாற்றுவார்கள்  
கண்டாலும் பொய்யென்று கதறுவார்கள் சதாகாலங் கருமத்துக்கேதுவாவார்  
திரண்டாம முறைமையிது சொல்லவந்தேன் திறமான போகரிஷி கண்டதாமே

விளக்கவுரை :


2929. கண்டதொரு ஜோதிமுறை யின்னஞ்சொல்வேன் கைலாச வைகுண்டபதியின்சேதி
அண்டமுனி சிசுபாலன் அவனுக்கு சீஷனவன்பேரு சட்டைமுனி யென்பாரப்பா
கொண்டல்வண்ணன் ராவணனார்கிடையே செய்து கோடிமுறை தபசிகட்கு வின்னஞ்செய்து
தண்டவமை தானிருந்து ரிஷிகள்சாபம் சாற்றினார் சாத்திரத்தின் தன்மைதானே

விளக்கவுரை :


2930. தானான சாத்திரத்துக் கிடையேசொல்லி தப்பிதங்களாகவேதான் கெடுத்துப்போட்டு
கோனான எனதையர் காலாங்கிதன்னை கொண்டபடி யவர்பேரில் தோஷஞ்சொல்லி
வேனான கருவெல்லாம் மறைத்துப்போட்டு வேதமுதல் சாத்திரங்கள் பொய்யாச்சொல்லி
பானான பலவிதமாய்ப் பாடிவிட்டார் பாருலகில் சட்டமுனி சரிதையாமே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar