போகர் சப்தகாண்டம் 2961 - 2965 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2961 - 2965 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2961. தோஷித்து சிவன்தன்மேல் தோஷஞ்சொல்லி தோராயமாகவல்லோ நூலைமாற்றி
பாஷியங்கள் தோருமல்லோ பரமன்தன்மேல் பாடிவைத்தார் தூஷனைகள் மெத்தவுண்டு
காசினியி லாயிரத்தெட்டு சிவாலயங்கள் கட்டினார் வெகுகோடி மாந்தரப்பா
பூசிதமாம் திருப்பதி நூற்றேயெட்டு பொங்கமுடன் கட்டினார் சூட்சந்தானே

விளக்கவுரை :


2962. தானான சூட்சாதி தேவஸ்தானம் தாரிணியில் சொற்பதாய் கண்டதுண்டு
பானான பரமசிவன் சிவாலயங்கள் பார்க்கவென்றால் கணக்கில்லை லக்கோயில்லை
தேனான வாதிசேடந்தன்னாலும் தெளியாது நாவில்லை பாவுமில்லை
மானான பரமபதி மெத்தவுண்டு மானிலத்தில் வாழாது மாந்தர்கேளே

விளக்கவுரை :

[ads-post]

2963. கேளேதான் சிவன்தனையே பழித்தாலும் கீர்த்தியுடன் சாத்திரத்தைக் கூறலானும்
நீளேதான் வைகுண்ட பதியிலப்பா நேர்ந்துதே வெகுகோடி தெண்டந்தானும்
மீளவே சொற்பனமாம் வாக்கினையும் மீண்டுதே துள்வார்கை சீஷவர்க்கம்
சூளவே யவர்பக்கல் யானிருந்து சுந்தரனே யதிசயங்கள் பார்த்திட்டேனே

விளக்கவுரை :


2964. பார்த்திட்டேன் வைகுண்டபதியில்தானும் பாங்குடனே வதிசயத்தை சொல்லப்போனால்
பூர்த்திட்ட பாரினிலே பொய்யென்பார்கள் பொய்யென்பார் மெய்யென்பார் ஆருமில்லை
சாத்திட்ட வைகுண்ட சரிதைதானும் தேர்ந்தவரை யானுரைத்தேன் தெளிவதாக
மார்த்திட்ட மாகவேதான் கைலைதன்னில் மகாகோடி வாக்கினைகள் மெத்தவுண்டே

விளக்கவுரை :


2965. உண்டான வதிசயங்க ளின்னஞ்சொல்வேன் உம்பர்பிரான் பதியினது காவையாவும்
திண்டான கிருஷ்ணாவதாரந்தானும் திகழுடனே வெகுகோடி மாதர்தம்மை
பாண்டான வையகத்தில் கற்பழிந்து பாவையரை லீலையது செய்ததாலும்
கண்டேனே வைகுண்ட பதியில்தம்மை கரியமால் ஆக்கினைகள் சொற்பமாமே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar