போகர் சப்தகாண்டம் 2871 - 2875 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2871 - 2875 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2871. கேளப்பா வமராபுரி சென்றேன்யானும் கொடியான கோட்டைமுதல் வுளவுகண்டேன்
தாளப்பா தங்கமதில் கோட்டையப்பா தாக்கான மாளிகையுங் கோபுரந்தான்
வானப்பா வீதிகளின் தேர்களப்பா வகுப்பான சோலைமுதல் தோப்புமுண்டு
நீளப்பா மல்லைகைப்பூ சாலையுண்டு நீடாழி கோட்டைக்கு வலங்கமுண்டே

விளக்கவுரை :


2872. உண்டான வசுவங்கள் கூட்டமுண்டு உத்தமனே வெள்ளானைக்கூட்டமுண்டு
திட்டான கோட்டைக்குள் அனேகமாதர் சிறப்புடனே நாட்டியங்கள் செய்துநிற்பார்
பண்டான கனிவகைகள் அனேகமுண்டு பாங்கான தேவதா கனியென்பார்கள்
வண்டான கூட்டங்கள் கீதம்பாடும் மகத்தான தொனியோசை யனேகம்பாரே

விளக்கவுரை :

[ads-post]

2873. பாரேதான் நவரத்தின மலையுமுண்டு பாலகனே வெகுகோடி ரிஷிகள் கண்டேன்
மேரேதான் மேருவுமிதற்கீடல்ல மெத்தவுண்டு வதிசயங்கள் சொல்லப்போமோ 
நேராதான் வாக்கினையின் பக்கல்சென்றேன் நெடிதான வடக்குபுரம் கொண்டுசென்றார்
சீரேதான் ஆக்கினைகள் மெத்தவுண்டு சிறப்புடனே கண்டுமல்லோ திடுக்கிட்டேன்

விளக்கவுரை :


2874. திடுக்கிட்டு பார்த்தளவில் கிங்கிலியரப்பா சிறள்கூட்டமாயிரம்பேர் ஓடிவந்து
ஒருக்கமுடன் தூதுவர்களாயிரம்பேர் வுத்தமர்களானவர்கள் ஒன்றாய்க்கூடி
நடுக்கமுடன் நரகமதிலிழுத்துக்கொண்டு நாட்டமுடன் தள்ளுகின்ற வளமைகண்டேன்
ஒடுக்கமுடன் மாந்தர்களைத்தான் குறித்து வுத்தமரே செய்பாஞ் சொல்லென்றாரே

விளக்கவுரை :


2875. சொல்லென்று கேட்கையிலே தூதர்தாமும் செப்பலுற்றார் அவர்செய்தபாவந்தன்னை
வெல்லவே பூசைமுக மிடர்செய்தோர்கள் வேகமுடன் உடைமைதனை கொள்ளை கொண்டோர்
புல்லவே மிருகமென்ற சீவன்தன்னை பொங்கமுடன் வகைசெய்து கொன்றுபோட்டோர்
அல்லலுடன் சையோகஞ் செய்தபேரை அகடழித்து நாணம்வரச் செய்தார்தாமே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar