போகர் சப்தகாண்டம் 2816 - 2820 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2816 - 2820 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2816. கருதுவார் நாதாக்கள் கணக்குங்காண்பார் கண்டறிந்து பிரணவத்தை யுரைப்பார்தாமும்
சுருதிபொருள் நால்வேத சாஸ்திரத்தின் சூட்சாதி சூட்சமெல்லாம் சுட்டிக்காட்டி
பருதிமதி கேசரத்தின் குளிகைமார்க்கம் பட்சமுடன் காண்பித்து வுளவுஞ்சொல்லி
நிருதியென்னும் திசைநோக்கு வழியுங்காட்டி நீதியுடன் ஞானோபமோதுவாரே

விளக்கவுரை :


2817. ஓதுவார் பொருளறிந்த கள்ளனானால் உத்தமனே யவர்மனதை தேத்திநீதான்
நீதியெனும் சன்மார்க்க வலையிற்சென்று நித்தமுடன் பெரியோர்க்கு தொண்டுபண்ணி
சாதியிலே தாழ்ந்தவரா யிருந்திட்டாலும் தவநிலையில் பெரியவரா மென்றேயெண்ணி
பாதிமதி சடையணிந்த தம்பிரான்போல் பாலித்தா லுந்தனுக்கு பண்பதாமே

விளக்கவுரை :

[ads-post]

2818. பண்பான உந்தனுக்கு விட்டகுறைதானும் பாருலகில் லபிக்குமடா முன்சென்மத்தால்
திண்பான தேகமது கற்றூணாக திறமையுட னெந்நாளு மிருப்பதற்கு
நண்பாக முன்சொன்ன சூதவெண்ணெய் நாதாக்கள் முறைப்படியே சொன்னேன்யானும்
கண்பான யேமரச வெண்ணெய்தன்னை கருவாக செந்தூரஞ் செய்துபாரே

விளக்கவுரை :


2819. பாரப்பா சூதமென்ற செந்தூரத்தை பாலகனே முறையோடு செய்தாயானால்
நேரப்பா யுனைப்போல வுலகிலுண்டோ நீணிலத்தில் நீயுமொரு சித்தனாவாய்
தீரப்பா வெண்ணெயது ஒன்றேகாலாம் திரமான கெந்தியது முக்காலாகும்
கூரப்பா சாரமென்ற செயநீர்தன்னால் கொற்றவனே தானரைப்பாய் சாமம்நாலே

விளக்கவுரை :


2820. நாலான சாமமது வரைத்துமைந்தா நாயகனே ரவிதனிலே காயப்போடு
பாலான மேருவென்ற குப்பிக்கேற்றி பாலகனே தானெரிப்பாய் சாமம்நாலு
நூலான முறைப்படியே எரித்தாயானால் நுணுக்கமுடன் செந்தூர மென்னசொல்வேன்
சேலான செந்தூரம் பதனம்பண்ணு செம்மையுடன் போக்குவகை செப்பக்கேளே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar