போகர் சப்தகாண்டம் 2441 - 2445 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2441 - 2445 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2441. ஆமேதான் மருந்துண்ணும் காலந்தன்னில் அப்பனே வாயுவென்ற பதாற்தந்தள்ளு
போமேதான் சீதளமாம் பண்டமாகா பொலிவான காரமுதல் மிகவுமாக
தாமேதானிச்சா பத்தியந்தான் காருசார்பாக மற்றதெல்லா மாகும்பாரு
நாமேதான் சொன்னபடி போகர்நூலு நாட்டிலே பொய்க்காது நளினமாமே

விளக்கவுரை :


2442. நளினமுடன் இன்னமொரு மார்க்கம்பாரு நாதாக்கள் சொன்னதிலை நாட்டிலோர்க்கு
நளினமென்ற வடைக்கலந்தான் ஆனேயாகும் கருவான வான்குருவி கொண்டுவந்து
மளினமுடன் ரோகமுதல் எல்லாம்நீக்கி மாசற்ற குடல்தலைகள் எல்லாம்போக்கி
பளினமுடன் கருங்கோழி ரத்தஞ்சேரில் பாகமுடன் தான்பொரித்து எடுத்திடாயே

விளக்கவுரை :

[ads-post]

2443. எடுத்துமிக பார்க்கையிலே என்னசொல்வேன் எழிலான சோரியது சுண்டியேதான்
தொடுத்ததொரு வடைக்கலமும் ஒன்றாய்ச்சேர்த்து துப்புரவாய் திரண்டுமல்லோ கரிபோலாக்கி
விடுத்ததொரு மாமிசத்தை எடுத்துக்கொண்டு விபரமுடன் சொல்லுகிறேன் மைந்தாகேளு
கொடுத்திடவே லவனவகை யற்பத்துதானும் கூறுவேன் பளிங்குடனே செப்பக்கேளே

விளக்கவுரை :


2444. செப்பவென்றால் இந்துப்பு வராகன்ரண்டு தெளிவான கல்லுப்பு வராகன்ரண்டு
ஒப்பமுடன் வளையலுப்பு வராகன்ரண்டு ஒளியான மதியுப்பு வராகன்ரண்டு
நெப்பமுடன் சாரமது வராகன்ரண்டு bநெரான வங்காரம் வராகன்ரண்டு 
நொப்பமுடன் சவர்க்காரம் வராகன்ரண்டு குமுறவே இத்தனையும் பொடியாய்ச்செய்யே

விளக்கவுரை :


2445. செய்யவென்றால் பொடிதனிலே சேர்க்கக்கேளு செயலான சுக்குடனே மிளகுகூட
பொய்யவே ஓமமுடன் சீரந்தானும் பேரான கரியபோளந்தானப்பா
மெய்யான பூரமென்ற பற்பந்தானும் மேலான ரசமென்ற செந்தூரந்தான்
மையான பொடியாக்கி ஒன்றாய்ச்சேர்த்து மார்க்கமுடன் நெய்தேனும் கூட்டிடாயே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar