போகர் சப்தகாண்டம் 2921 - 2925 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2921 - 2925 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2921. மெய்யான யின்னமொரு மார்க்கம்பாரு மேதினியில் இராமதேவர் செய்தகூத்து
பொய்யான சாத்திரத்தை மெய்யதாகப் புகட்டினார் லோகத்துமாந்தர்க்கப்பா
துப்பமுடன் சாத்திரத்தைப் பார்த்துப்பார்த்துப் துறைகெட்டு முறைகெட்டு துன்பப்பட்டு
பையவே வெகுபேர்கள் சுட்டலைந்து பாடுபட்டு மாண்டார்கள் கோடிதாமே

விளக்கவுரை :


2922. கோடியா மிராமதேவர் சாத்திரத்தைக் குறிப்புடனே மெய்யென்று விருதாவாக
தேடியே கோர்வைகள்தான் கிடைக்குமானால் தேசத்தில் சுத்தனாயிருக்க வேண்டி
நாடியே ராமரென்றும் யாக்கோபாரை நாட்டமுடன் செய்துவைத்த நூல்கள்பார்க்க
பாடியே பயித்தியங்க ளதிகமாகிப் பாருலகில் கெட்டலைந்தார் மாண்பர்தாமே

விளக்கவுரை :

[ads-post]

2923. மாண்பான யாக்கோபு மக்கதேசம் நளினமுடன் சென்றதொரு வன்மைதன்னை
காண்பான பல்லரிடம் சென்றுதானும் கருவான வுளவுதனைக் கண்டாராய்ந்து
தாண்பான தத்துவத்தில் கடந்தோனென்றும் தகமையுடன் சாத்திரத்தின் பெருமைசொல்லி
வீண்பாக மற்றதோர் சாத்தரங்கள் வீணாகப்பாடி வைத்தார் வீணதாமே

விளக்கவுரை :


2924. வஆணான சாத்திரத்தை மாறாட்டமாக விருதாவில் மாண்பர்களும் கெட்டுப்போக
காணாத நூல்கள் எல்லாம்கண்டோமென்று காசினியில் கடைமுதலும் சாத்துமேதான்
தோணாமல் வெகுபேர்கள் மாண்டுபோனார் தோற்றாமல் இன்னுமவர் நூலைத்தேடி
சாணான்தான் கண்டபொருள் போலேவாக்கும் சாட்டமுடன் சாத்திரத்தி னுண்மைதானே

விளக்கவுரை :


2925. உண்மையாம் சாத்திரத்தை மெய்போல்பாடி உத்தமர்கள் தான்மயங்க திடுக்கிட்டேங்க
நண்மையுடன் வாதத்தை மெய்போலாக நாதாக்கள் சாத்திரங்கள் பொய்போலாக
நன்மையுடன் பாடிவைத்தேன் கருவாகத்தான் காசினியில் யாருந்தான் சொல்லவில்லை
திண்மைபெற வின்னம்வெகுகோடி கோர்வைகொட்டினேன் என்றுசொல்லி கூறினாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar