2386. கூறுவேன் வெள்ளையென்ற
குக்கில்தானும் குறிப்புடனே பாரமதுவொன்றேயாகும்
நீறுடைய பூநீறு பாரங்கல்தான்
நெடிதான வெடியுப்பு பாரங்கல்தான்
சேறுடைய சீனபதி
கண்ணம்கால்தான் சிறப்பான சீனமது பாரங்கல்தான்
நாறுடையத் தாழையுட
சாறுவிட்டு நலமாகக் காய்ச்சியெடு பதமாய்த்தானே
விளக்கவுரை :
2387. பதமுடனே காய்ச்சுகையில்
கருப்பட்டைக் கருத்துடனே தயிலமதுகூடச்சேரு
நிதமுடனே
கற்பூரந்தயிலந்தானும் நேர்ப்புடனே தாழைமலருப்பு கூட்டி
பேதமில்ல யேலரிசி
தயிலந்தானும் பேரான பன்னீரும் விட்டுக்காய்ச்சி
பாதமுடன் கருப்பட்டி
ஒன்றுசெய்து பாகுடனே காய்ச்சியதை விட்டிடாயே
விளக்கவுரை :
[ads-post]
2388. விட்டவுடன் மற்றாநாள்
எடுத்துப்பாரு வேகமுடன் பளிங்கென்ற கற்பூரந்தான்
சட்டமுடன் பலகைபோல்
கட்டியாகி சார்புடனே தான்திரண்டு இருக்கும்பாரு
அட்டதிசை தான்புகழும்
பூரமாச்சு ஆச்சரியம் நாதாக்கள் செய்வாருண்டோ
மட்டமென்ற கற்பூரம்
செய்வாரப்பா மானிலத்தில் சித்தர்முனி செய்வார்பாரே
விளக்கவுரை :
2389. பாரப்பா கற்பூர மனேகமுண்டு பாங்குடனே செய்குவார் கோடாகோடி
நேரப்பா சீனபதி கற்பூரந்தான்
நீனிலத்தில் செய்பவரு முலகிலுண்டோ
சேரப்பா வெகுகோடி சித்தரப்பா
செய்தார்கள் கற்பூரம் வினோதமாக
ஆரப்பா யெனைப்போலச்
செய்ததில்லை அப்பனே யானுமல்லோ முரைசெய்தேனே
விளக்கவுரை :
2390. செய்தேனே வின்னமொரு
கருமானங்கேள் செயலான பிறாங்குவித்த செப்பக்கேளு
மெய்யான வித்தையது
சூட்சவித்தை மேல்போகும் வித்தையது கூண்டுவித்தை
பொய்யான வித்தையது
சொல்லப்போமோ பூதகத்தில் கருவாளிகண்டுசெய்வான்
வெயில்காணும்
ஆகாஷவித்தையப்பா மேல்போகும் கூண்டினிட வித்தைதானே
விளக்கவுரை :