போகர் சப்தகாண்டம் 2971 - 2975 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2971 - 2975 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2971. வாழ்வுதான் வையகத்தில் பொய்யேவாழ்வு வாழ்நாளும் வீழ்நாளும் பாழ்நாளாகும்
தாழ்வுடனே சாத்திரத்தை மிகவாராய்ந்து சாங்கமுடன் ஞானோபமிகவுஞ்சொல்வார்
கேழ்மையுடன் மாசானவைராக்கியம்சொல்வார் கேடுவரும் பாவவினை யறியார்தாமும்
ஊழ்வினைகள் தாமறிந்து நடந்துகொள்வார் உத்தமனே லோகத்துமாந்தராமே

விளக்கவுரை :


2972. மாந்தராம் சடலத்தை மெய்யென்றெண்ணி மானிலத்தில் வெகுகோடி பாடுபட்டு
சாந்தமுடன் தேகமதை நிறுத்தவென்று சதாகாலம் வையகத்திலிருப்பதாக
போந்தமுடன் காயாதி கற்பந்தன்னை பொங்கமுடன் உண்டுமல்லோ கற்பங்கொண்டு
வேந்தர்களும் இதிகாசவித்தை எல்லாம்வேண்டியே விருப்பமுடன் படித்திட்டாரே

விளக்கவுரை :

[ads-post]

2973. படிக்கவே வஷ்டாங்கம் காணவென்றும் பாருலகில் வசியனாயாகவென்றும்
துடிக்கவே வாதமதை யறியவென்றும் துப்புறவாய் முப்பூவைமுடிக்கவென்றும்
மடிக்கவே சரக்குக்கு சத்ருதானும் மார்க்கமுடன் கண்டறிந்த சித்தனென்றும்
வெடிக்கவே சமாதிக்கு ளிருப்பேனென்றும் வேதாந்தம் பேசியல்லோ விழலாய்ப்போச்சே

விளக்கவுரை :


2974. போச்சென்று விடுகாதே யின்னங்கேளு புதுமையுடன் கண்டவரை யாமுஞ்சொல்வோம்
மாச்சலுடன் மோகனங்களறியவேண்டும் மாறாட்டமானதொரு வெழுத்தைப்பாரு
கூச்சலின்றி சமாதிதனிலிருந்துமென்ன கோடான கோடியுகங்கண்டுமென்ன
மூச்சடங்கி போனபின்பு ஒன்றுமில்லை முனிகோடி தவசிகளு மாண்டார்தாமே

விளக்கவுரை :


2975. தாமான கோடியுக மதுவேயாகும் தாக்கான சித்துகளுமிப்படியேயுண்டு
நாமான படியாலே சத்தலோகம் நாதாக்கள் போக்குமுதல் யாவயஞ்கண்டோம்  
நேமமுடன் சித்ரெல்லாம் இப்படியே தானும் நேர்மையுடன் நிஷ்டையிலே இருந்துமாண்டார்
வாமமுடன் பூலோக வதிசயங்கள் வகுத்துரைத்தார் வண்மைகளு மனேகந்தானே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar