2371. கேட்கவென்றால்
பூநீருசுண்ணாம்புதன்னை கெணிதமுடன் சக்கரமாமாலைதன்னில்
தீட்கமுடன் தானரைப்பாய்
மைபோலாக திறமுடனே களிப்புபதமாகுமட்டும்
வேட்கமல வாலையுட கற்றோரங்கள்
வெளிப்படையில் பொங்குகின்ற களிப்புதன்னால்
பூட்கமல வெள்ளையென்ற
பீங்கானாச்சு புகழான வடிவண்டல் மாட்டியாச்சே
விளக்கவுரை :
2372. ஆச்சென்று விடுகாதே
மைந்தாகேளு அன்புடனே பின்னுமந்த வாலைதன்னில்
மாய்ச்சலுடன் வதற்கடியில்
நிற்கும்மண்ணு மகத்தான மட்டியென்ற பீங்கானாகும்
பாய்ச்சலுடன் வதற்கடியில்
நிற்கும்மண்ணு பாங்கான மட்டியென்ற பீங்கானாமே
விளக்கவுரை :
[ads-post]
2373. ஆமேதா னிந்தவண்ண மாலைக்குள்ளே அப்பனே பிரிவினைகளாகும்பாரு
நாமேதான் சொன்னபடி
பீங்கான்மார்க்கம் நாட்டிலே செய்வார்கள் கோடிபாதை
வேமேதான் செய்தாலும்
நாட்டுள்வேதை வேகவைத்தால் மண்ணதுவும் வெடியுண்டாகும்
கோமானாம் சாலியன்றன்
வேதையென்பார் கொற்றவனே சீனபதிக் கொப்பதாமே
விளக்கவுரை :
2374. ஒப்பான வேதையிது மனந்தமுண்டு
ஓகோகோ நாதாக்கள் கண்டதில்லை
செப்பான வகலதனைப்போல்
பாண்டங்கண்டார் செயலான சாலியன்றன் பாண்டங்கண்டார்
மெப்பான பாண்டமது
மண்பாண்டங்கள் மேவலுடன் செய்குவார் வதீதமார்க்கம்
துப்பான பாண்டங்கள்
மிகவுஞ்செய்வார் துறைமுகமுங் காணார்கள் சித்தர்பாரே
விளக்கவுரை :
2375. பாரேதான் ராசாக்கள்
கண்டதில்லை பாரினிலே வெகுகோடி ராஜரப்பா
சீரேதான் பாக்கியங்கள்
பெற்றுமென்ன தப்புடனே பலபணிகள் பூண்டுமென்ன
நேரேதான் திருமுகமுங்
கண்டதில்லை நீணிலத்தில் வசீகரத்தைப் பார்த்தோரில்லை
சேரான செம்பதனை தகடதாக்கி
சிறப்புடனே தான்துலக்கி முகம்பார்த்தாரே
விளக்கவுரை :