521. அண்டமொடு எண்டிசை தாங்கும் அதோமுகம்
கண்டங் கறுத்த கருத்தறி வாரில்லை
உண்டது நஞ்சென்று உரைப்பர்
உணர்விலோர்
வெண்டலை மாலை விரிசடை யோற்கே.
விளக்கவுரை :
522. செய்தான் அறியுஞ் செழுங்கடல் வட்டத்துப்
பொய்யே யுரைத்துப் புகழும்
மனிதர்கள்
மெய்யே உரைக்கில் விண்ணோர்
தொழச்செய்வன்
மைதாழ்ந்து இலங்கும் மிடறுடை யோனே.
விளக்கவுரை :
[ads-post]
523. நந்தி எழுந்து நடுவுற ஓங்கிய
செந்தீக் கலந்துள் சிவனென நிற்கும்
முந்திக் கலந்தங்கு உலகம் வலம்வரும்
அந்தி இறைவன் அதோமுகம் ஆமே.
விளக்கவுரை :
524. அதோமுகம் கீழண்ட மான புராணன்
அதோமுகம் தன்னொடும் எங்கும் முயலும்
சதோமுகத் து ஒண்மலர்க் கண்ணிப்
பிரானும்
அதோமுகன் ஊழித் தலைவனு மாமே.
விளக்கவுரை :
525. அதோமுகம் மாமல ராயது கேளும்
அதோமுகத் தால் ஒரு நூறாய் விரிந்து
அதோமுகம் ஆகிய அந்தமில் சத்தி
அதோமுகம் ஆகி அமர்ந்திருந் தானே.
விளக்கவுரை :