586. புறப்பட்ட வாயுப் புகவிடா வண்ணந்
திறப்பட்டு நிச்சயஞ் சேர்ந்துடன்
நின்றால்
உறப்பட்டு நின்றது உள்ளமும் அங்கே
புறப்பட்டுப் போகான் பெருந்தகை யானே
விளக்கவுரை :
587. குறிப்பினின் உள்ளே குவலயந் தோன்றும்
வெறுப்பிருள் நங்கி விகிர்தனை
நாடுங்
சிறப்புறு சிந்தையைச் சிக்கென்
றுணரில்
அறிப்புறு காட்சி அமரரு மாமே
விளக்கவுரை :
[ads-post]
7. தாரணை
588. கோணா மனத்தைக் குறிக்கொண்டு கீழ்க்கட்டி
வீணாத்தண் டூடே வெளியுறத்
தானோக்கிக்
காணாக்கண் கேளாச் செவியென்
றிருப்பார்க்கு
வாணாள் அடைக்கும் வழியது வாமே
விளக்கவுரை :
589. மலையார் சிரத்திடை வானீர் அருவி
நிலையாரப் பாயும் நெடுநாடி யூடே
சிலையார் பொதுவில் திருநட மாடுந்
தொலையாத ஆனந்தச் சோதிகண் டேனே
விளக்கவுரை :
590. மேலை நிலத்தினாள் வேதகப் பெண்பிள்ளை
மூல நிலத்தில் எழுகின்ற மூர்த்தியை
ஏல எழுப்பி இவளுடன் சந்திக்கப்
பாலனும் ஆவான் பராநந்தி ஆணையே
விளக்கவுரை :