16. பாத்திரம்
501. திலமத் தனைபொன் சிவஞானிக்கு ஈந்தால்
பலமுத்தி சித்தி பரபோக மும்
தரும்நிலமத் தனைபொன்னை
நின்மூடர்க்கு ஈந்தால்
பலமும்அற் றெபர போகமும் குன்றுமே.
விளக்கவுரை :
502. கண்டிருந் தாருயிர் உண்டிடுங் காலனைக்
கொண்டிருந் தாருயிர் கொள்ளும்
குணத்தனை
நன்றுணர்ந் தார்க்கருள் செய்திடு
நாதனைச்
சென்றுணர்ந் தார்சிலர் தேவரு மாமே.
விளக்கவுரை :
[ads-post]
503. கைவிட்டி லேன்கரு வாகிய காலத்து
மெய்விட்டி லேன்விகிர் தன்அடி
தேடுவன்
பொய்விட்டு நானே புரிசடை யானடி
நெய்விட் டிலாத விடிஞ்சிலு மாமே.
விளக்கவுரை :
504. ஆவன ஆவ அழிவ அழிவன
போவன போவ புகுவ புகுவன
காவலன் பேர்நந்தி காட்டித்துக்
கண்டவன்
ஏவன செய்யும் இளங்கிளை யோனே.
விளக்கவுரை :
17. அபாத்திரம்
505. கோல வறட்டைக் குனிந்து குளகிட்டுப்
பாலைக் கறந்து பருகுவதே ஒக்கும்
சீலமும் நோன்பும் இலாதவர்க்கு
ஈந்தது
காலங் கழிந்த பயிரது ஆகுமே.
விளக்கவுரை :