506. ஈவது யோக இயம நியமங்கள்
சார்வ தறிந்தன்பு தங்கு மவர்க்கன்றி
ஆவ தறிந்தன்பு தங்கா தவர்க்களுக்கு
ஈவ பெரும்பிழை என்றுகொள் ளீரே.
விளக்கவுரை :
507. ஆமாறு அறியான் அதிபஞ்ச பாதகன்
தோமாறும் ஈசற்குந் தூய குரவற்கும்
காமாதி விட்டோர்க்குந் தரல்தந்து
கற்பிப்போன்
போமா நரகில் புகான்போதங் கற்கவே.
விளக்கவுரை :
[ads-post]
508. மண்மலை யத்தனை மாதனம் ஈயினும்
அண்ணல் இவனென்றே அஞ்சலி அத்தனாய்
எண்ணி இறைஞ்சாதார்ககு ஈந்த இருவரும்
நண்ணுவர் ஏழா நரகக் குழியிலே.
விளக்கவுரை :
18. தீர்த்தம்
509. உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்
மெள்ளக் குடைந்துநின் றாடார்
வினைகெடப்
பள்ளமும் மேடும் பரந்து திரிவரே
கள்ள மனமுடைக் கல்வியி லோரே.
விளக்கவுரை :
510. தளியறி வாளர்க்குத் தண்ணிதாய்த் தோன்றும்
குளியறி வாளர்க்குக் கூடவும்
ஒண்ணான்
வளியறி வாளர்க்கு வாய்க்கினும்
வாய்க்கும்
தெளியறி வாளர்தம் சிந்தையு ளானே.
விளக்கவுரை :