531. ஓரெழுத்து ஒருபொருள் உணரக் கூறிய
சீரெழுத் தாளரைச் சிதையச்
செப்பினோர்
ஊரிடைச் சுணங்கனாய்ப் பிறந்தங் கு
ஓர்உகம்
வாரிடைக் கிருமியாய் மாய்வர்
மண்ணிலே.
விளக்கவுரை :
532. பத்தினி பத்தர்கள் தத்துவ ஞானிகள்
சித்தங் கலங்கச் சிதைவுகள் செய்தவர்
அத்தமும் ஆவியும் ஆண்டொன்றில்
மாண்டிடும்
சத்தியம் ஈது சதாநந்தி ஆணையே.
விளக்கவுரை :
[ads-post]
533. மந்திரம் ஓரெழுத்து உரைத்த மாதவர்
சிந்தையில் நொந்திடத் தீமைகள்
செய்தவர்
நுந்திய சுணங்கனாய்ப் பிறந்து
நூறுரு
வந்திடும் புலையராய் மாய்வர் மண்ணிலே.
விளக்கவுரை :
534. ஈசன் அடியார் இதயம் கலங்கிடத்
தேசமும் நாடும் சிறப்பும்
அழிந்திடும்
வாசவன் பீடமும் மாமன்னர் பீடமும்
நாசமது ஆகுமே நம்நந்தி ஆணையே.
விளக்கவுரை :
535. சன்மார்க்க சற்குருச் சந்நிதி பொய்வரின்
நன்மார்க்க மும்குன்றி ஞானமும்
தங்காது
தொன்மார்க்க மாய துறையும்
மறந்திட்டுப்
பன்மார்க்க மும்கெட்டுப் பஞ்சமும்
ஆமே.
விளக்கவுரை :