536. கைப்பட்ட மாமணி தானிடை கைவிட்டு
மெய்ப்பட்ட கல்லைச் சுமப்போன்
விதிபோன்றும்
கைப்பட்ட நெய்பால் தயிர்நிற்கத் தானறக்
கைப்பிட்டுண் பான்போன்றுங்
கன்மிஞானிக் கொப்பே.
விளக்கவுரை :
23. மயேசுர நிந்தை
537. ஆண்டான் அடியவர் ஆர்க்கும் விரோதிகள்
ஆண்டான் அடியவர் ஐயமேற் றுண்பவர்
ஆண்டான் அடியரை வேண்டாது பேசினோர்
தாம்தாம் விழுவது தாழ்நர காமே.
விளக்கவுரை :
[ads-post]
538. ஞானியை நிந்திப் பவனும் நலன் என்றே
ஞானியை வந்திப் பவனுமே நல்வினை
யான கொடுவினை தீர்வார் அவன்வயம்
போன பொழுதே புகுஞ்சிவ போகமே.
விளக்கவுரை :
24. பொறையுடைமை
539. பற்றிநின் றார்நெஞ்சில் பல்லிதான் ஒன்றுண்டு
முற்றிக் கிடந்தது மூக்கையும்
நாவையும்
தெற்றிக் கிடந்து சிதைக்கின்ற
சிந்தையுள்
வற்றா தொழிவது மாகமை யாமே.
விளக்கவுரை :
540. ஓலக்கம் சூழ்ந்த உலப்பிலி தேவர்கள்
பாலொத்த மேனியன் பாதம் பணிந்துய்ய
மாலுக்கும் ஆதி பிரமற்கும் மன்னவன்.
ஞாலத் திவன்மிக நல்லன்என் றாரே.
விளக்கவுரை :