541. ஞானம் விளைந்தவர் நம்மிடம் மன்னவர்
சேனை வளைந்து திசைதொரும் கைதொழ
ஊனை விளைத்திடும் உம்பர்தம் ஆதியை
ஏனை விளைந்தருள் எட்டலு மாமே.
விளக்கவுரை :
542. வல்வகை யானும் மனையிலும் மன்றிலும்
பல்வகை யானும் பயிற்றி பதஞ்செய்யும்
கொல்லையி னின்று குதிகொள்ளும்
கூத்தனுக்கு
எல்லையி லாத இலயம்உண் டாமே.
விளக்கவுரை :
[ads-post]
25. பெரியாரைத் துணைகோடல்
543. ஓடவல் லார்தம ரோடு நடாவுவன்
பாடவல் லாரொளி பார்மிசை வாழ்குவன்
தேடவல் லார்க்கருள் தேவர்
பிரானொடும்
கூடவல் லாரடி கூடுவன் யானே.
விளக்கவுரை :
544. தாமிடர்ப் பட்டுத் தளிர்போல் தயங்கினும்
மாமனதது அங்குஅன்பு வைத்தது
இலையாகும்
நீஇடர்ப் பட்டிருநது என்செய்வாய்
நெஞ்சமே
போமிடத் து என்னொடும் போதுகண் டாயே.
விளக்கவுரை :
545. அறிவார் அமரர் தலைவனை நாடிச்
செறிவார் பெறுவர் சிலர்தத் துவத்தை
நெறிதான் மிகமிக நின்றருள் செய்யும்
பெரியார் உடன்கூடல் பேரின்ப மாமே.
விளக்கவுரை :