596. முன்னம் வந்தனர் எல்லாம் முடிந்தனர்
பின்னை வந்தவர்க் கென்ன பிரமாணம்
முன்னுறு கோடி உறுகதி பேசிடில்
என்ன மாயம் இடிகரை நிற்குமே
விளக்கவுரை :
597. அரித்த வுடலைஐம் பூதத்தில் வைத்துப்
பொருத்தஐம் பூதஞ்சத் தாதியிற்
போந்து
தெரித்த மனாதிசத் தாதியிற் செல்லத்
தரித்தது தாரணை தற்பரத் தோடே
விளக்கவுரை :
[ads-post]
8. தியானம்
598. வருமாதி யீரெட்டுள் வந்த தியானம்
பொருவாத புந்தி புலன்போக மேவல்
உருவாய சத்தி பரத்தியான முன்னுங்
குருவார் சிவத்தியானம் யோகத்தின்
கூறே
விளக்கவுரை :
599. கண்ணாக்கு மூக்குச் செவஞானக் கூட்டத்துட்
பண்ணாக்கி நின்ற பழம்பொருள்
ஒன்றுண்(டு)
அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஔiகாட்டிப்
புண்ணாக்கி நம்மைப் பிழைப்பித்த
வாறே
விளக்கவுரை :
600. ஒண்ணா நயனத்தில் உற்ற ஔiதன்னைக்
கண்ணாரப் பார்த்துக் கலந்தங்
கிருந்திடில்
விண்ணாறு வந்து வெளிகண் டிடவோடிப்
பண்ணாமல் நின்றது பார்க்கலு மாமே
விளக்கவுரை :