626. நம்பனை யாதியை நான்மறை ஓதியைச்
செம்பொனின் உள்ளே திகழ்கின்ற சோதியை
அன்பினை யாக்கி யருத்தி
ஒடுக்கிப்போய்க்
கொம்பேறிக் கும்பிட்டுக் கூட்டமிட்
டாரே
விளக்கவுரை :
627. மூலத்து மேலது முச்சது ரத்தது
காலத் திசையிற் கலக்கின்ற சந்தினில்
மேலைப் பிறையினில் நெற்றிநேர் நின்ற
கோலத்தின் கோலங்கள் வெவ்வேறு
கொண்டதே
விளக்கவுரை :
[ads-post]
628. கற்பனை யற்றுக் கனல்வழி யேசென்று
சிற்பனை எல்லாஞ் சிருட்டித்த
பேரொளிப்
பொற்பினை நாடிப் புணர்மதி
யோடுற்றுத்
தற்பர மாகத் தகுந்தண் சமாதியே
விளக்கவுரை :
629. தலைப்பட் டிருந்திடத் தத்துவங் கூடும்
வலைப்பட் டிருந்திடும் மாதுநல்
லாளுங்
குலைப்பட் டிருந்திடுங் கோபம்
அகலுந்
துலைப்பட் டிருந்திடுந் தூங்கவல்
லார்க்கே
விளக்கவுரை :
630. சோதித் தனிச்சுட ராய்நின்ற தேவனும்
ஆதியும் உள்நின்ற சீவனு மாகுமால்
ஆதிப் பிரமன் பெருங்கடல் வண்ணனும்
ஆதி அடிபணிந் தன்புறு வாரே
விளக்கவுரை :