5. பிரத்தியாகாரம்
636. சேருறு காலந் திசைநின்ற தேவர்கள்
ஆரிவன் என்ன அரனாம் இவனென்ன
ஏருறு தேவர்கள் எல்லாம்
எதிர்கொள்ளக்
காருறு கண்டனை மெய்கண்ட வாறே
விளக்கவுரை :
6. தாரணை
637. நல்வழி நாடி நமன்வழி மாற்றிடுஞ்
சொல்வழி யாளர் சுருங்காப்
பெருங்கொடை
இல்வழி யாளர் இமையவர் எண்டிசைப்
பல்வழி எய்தினும் பார்வழி யாகுமே
விளக்கவுரை :
[ads-post]
7. தியானம்
638. தூங்கவல் லார்க்கும் துணையேழ் புவனமும்
வாங்கவல் லார்க்கும் வலிசெய்து
நின்றிடுந்
தேங்கவல் லார்க்கும் திளைக்கும்
அமுதமுந்
தாங்கவல் லார்க்குந் தன்னிட மாமே
விளக்கவுரை :
8. சமாதி
639. காரிய மான உபாதியைத் தாங்கடந்
தாரிய காரணம் ஏழுந்தன் பாலுற
ஆரிய காரண மாய தவத்திடைத்
தாரியல் தற்பரஞ் சேர்தல் சமாதியே
விளக்கவுரை :
11. அட்டமா சித்தி
1. பரகாயப் பிரவேசம்
640. பணிந்தெண் திசையும் பரமனை நாடித்
துணிந்தெண் திசையுந் தொழுதெம்
பிரானை
அணிந்தெண் திசையினும் அட்டமா சித்தி
தணிந்தெண் திசைசென்று தாபித்த வாறே
விளக்கவுரை :