661. ஓடிச்சென் றங்கே ஒருபொருள் கண்டவர்
நாடியி னுள்ளாக நாதம் எழுப்புவர்
தேடிச்சென் றங்கே தேனை முகந்துண்டு
பாடியுள் நின்ற பகைவரைக் கட்டுமே
விளக்கவுரை :
662. கட்டிட்ட தாமரை ஞாளத்தில் ஒன்பது
மட்டிட்ட கன்னியர் மாதுடன்
சேர்ந்தனர்
கட்டிட்டு நின்று களங்கனி
யூடுபோய்ப்
பொட்டிட்டு நின்று பூரண மானதே
விளக்கவுரை :
[ads-post]
663. பூரண சத்தி ஏழுமூன் றறையாக
ஏரணி கன்னியர் எழுநூற்றஞ்
சாக்கினார்
நாரணன் நான்முக னாதிய ஐவர்க்குங்
காரண மாகிக் கலந்து விரிந்ததே
விளக்கவுரை :
664. விரிந்து குவிந்து விளைந்தஇம் மங்கை
கரந்துள் எழுந்து கரந்தங்
கிருக்கிற்
பரந்து குவிந்தது பார்முதற் பூதம்
இரைந்தெழு வாயு விடத்தினில் ஒடுங்கே
விளக்கவுரை :
665. இடையொடு பிங்கலை என்னும் இரண்டு
மடைபடு வாயுவு மாறியே நிற்குந்
தடையவை யாறேழுந் தண்சுட ருள்ளே
மிடைவளர் மின்கொடி தன்னில் ஒடுங்கே
விளக்கவுரை :