481. மாதா உதரம் மலமிகில் மந்தனாம்
மாதா உதரம் சலமிகில் மூங்கையாம்
மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை
மாதா உதரத்தில் வந்த குழவிக்கே.
விளக்கவுரை :
482. குழவியும் ஆணாம் வலத்தது வாகில்
குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில்
குழவியும் இரண்டாம் அபான
னெதிர்க்கில்
குழவி அலியாகுங் கொண்டகால் ஒக்கிலே.
விளக்கவுரை :
[ads-post]
483. கொண்டநல் வாயு இருவர்க்கும் ஒத்தெழில்
கொண்ட குழவியுங் கோமள மாயிடுங்
கொண்டநல் வாயு இருவர்க்குங்
குழறிடில்
கொண்டதும் இல்லையாங் கோள்வளை யாட்கே
விளக்கவுரை :
484. கோள்வளை உந்தியிற் கொண்ட குழவியுந்
தால்வளை யுள்ளே தயங்கிய சோதியாம்
பால்வளர்ந் துள்ளே பகலவன்
பொன்னுருப்
போல்வளர்ந் துள்ளே பொருந்துரு வாமே.
விளக்கவுரை :
485. உருவம் வளர்ந்திடும் ஒண்டிங்கள் பத்திற்
பருவம தாகவே பாரினில் வந்திடும்
மருவி வளர்ந்திடு மாயையி னாலே
அருவம தாவதிங் காரறி வாரே.
விளக்கவுரை :