பட்டினச் சித்தர் அகவல்கள் 121 - 140 of 206 அடிகள்

பட்டினச் சித்தர் அகவல்கள் 121 - 140 of 206 அடிகள்


121. காமக் காற்றெடுத்து அலைப்பக்
கெடுவழிக் கரைசேர் கொடுமரக் கலத்தை
இருவினை விலங்கொடும் இயங்குபுற் கலனைக்
நடுவன்வந் தழைத்திட நடுங்கும் யாக்கையைப்
பிணமெனப் படுத்தியான் புறப்படும் பொழுதுநின்

விளக்கவுரை :

126. அடிமலர்க் கமலத்துக்கு அபயம்நின் அடைக்கலம்;
வெளியிடை உரும்இடி இடித்தென வெறித்தெழுங்
கடுநடை வெள்விடைக் கடவுள்நின் அடைக்கலம்;
இமையா நாட்டத்து இறையே! அடைக்கலம்;
அடியார்க்கு எளியாய்! அடைக்கலம் அடைக்கலம்;

விளக்கவுரை :

131. மறையவர் தில்லை மன்றுள்நின் றாடிக்
கருணை மொண்டு அலையெறி கடலே! அடைக்கலம்,
தேவரும் முனிவரும் சென்றுநின் றேத்தப்
பாசிழைக் கொடியொடு பரிந்து அருள் புரியும்
எம்பெரு மானின் இணையடிக்கு அபயம்

விளக்கவுரை :


136. அம்பலத் தரசே அடைக்கலம் உனக்கே!

விளக்கவுரை :

கச்சித் திரு அகவல்


திருமால் பயந்த திசைமுகன் அமைத்து
வரும் ஏழ் பிறவியும் மானுடத் துதித்து
மலைமகள் கோமான் மலர் அடி இறைஞ்சிக்
குலவிய சிவபதங் குறுகாது அவமே

விளக்கவுரை :

பட்டினச் சித்தர், பட்டினச் சித்தர் அகவல்கள், pattina siththar, pattina siththar agavalkal, siththarkal