பட்டினச் சித்தர் அகவல்கள் 161 - 180 of 206 அடிகள்

பட்டினச் சித்தர் அகவல்கள் 161 - 180 of 206 அடிகள்


161. ஊட்டவும் பிசையவும் உதவி இங் கியற்றும்
அலங்கையைப் பார்த்துக் காந்தள் என்றுரைத்தும்,
வேர்வையும் அழுக்கும் மேவிய கழுத்தைப்
பாரினில் இனிய கமுகெனப் பகர்ந்தும்,
வெப்பும் ஊத்தையும் மேவிய வாயைத்

விளக்கவுரை :


166. துப்பு முருக்கின் தூய்மலர் என்றும்,
அன்ன முங் கறியும் அசைவிட்டிறக்கும்
முன்னிய பல்லை முத்தென மொழிந்தும்
நீரும் சளியும் நின்று நின்று ஒழுகும்
கூறிய மூக்கைக் குமிழ் எனக் கூறியும்

விளக்கவுரை :


171. தண்ணீர் பீளை தவிராது ஒழுகும்
கண்ணைப் பார்த்துக் கழுநீர் என்றும்
உள்ளுங் குறும்பி ஒழுகுங் காதை
வள்ளைத் தண்டின் வளம் என வாழ்த்தியும்
கையும் எண்ணெயும் கலவாது ஒழியில்

விளக்கவுரை :


176. வெய்ய அதரும் பேனும் விளையத்
தக்க தலை யோட்டில் முளைத்து எழுந்த
சிக்கின் மயிரைத் திரள் முகி லென்றும்
சொற்பல பேசித் துதித்து நீங்கள்
நச்சிச் செல்லும் நரக வாயில்

விளக்கவுரை :

பட்டினச் சித்தர், பட்டினச் சித்தர் அகவல்கள், pattina siththar, pattina siththar agavalkal, siththarkal