பட்டினச் சித்தர் அகவல்கள் 141 - 160 of 206 அடிகள்

பட்டினச் சித்தர் அகவல்கள் 141 - 160 of 206 அடிகள்


141. மாதரை மகிழ்ந்து காதல் கொண்டாடும்
மானிடர்க் கெல்லாம் யானெடுத் துரைப்பேன்
விழிவெளி மாக்கள் தெளிவுறக் கேண்மின்;
முள்ளும் கல்லும் முயன்று நடக்கும்
உள்ளங் காலைப் பஞ்சென உரைத்தும்,

விளக்கவுரை :


146. வெள்ளெலும் பாலே மேவிய கணைக்கால்
துள்ளும் வரால் எனச் சொல்லித் துதித்தும்,
தசையும் எலும்புந் தக்கபுன் குறங்கை
இசையுங் கதலித் தண்டென இயம்பியும்
நெடும் உடல் தாங்கி நின்றிடும் இடையைத்

விளக்கவுரை :

151. துடிபிடி யென்று சொல்லித் துதித்தும்,
மலமும் சலமும் வழும்புந் திரையும்
அலையும் வயிற்றை ஆலிலை யென்றும்,
சிலந்தி போலக் கிளைத்துமுன் னெழுந்து
திரண்டு விம்மிச் சீப்பாய்ந்து ஏறி

விளக்கவுரை :

156. உகிரால் கீறல் உலர்ந்து உள் உருகி
நகுவார்க்கு இடமாய் நான்று வற்றும்
முலையைப் பார்த்து முளரிமொட் டென்றும்,
குலையும் காமக் குருடர்க்கு உரைப்பேன்;
நீட்டவும் முடக்கவும் நெடும் பொருள் வாங்கவும்

விளக்கவுரை :

பட்டினச் சித்தர், பட்டினச் சித்தர் அகவல்கள், pattina siththar, pattina siththar agavalkal, siththarkal