பட்டினச் சித்தர் அகவல்கள் 81 - 100 of 206 அடிகள்

பட்டினச் சித்தர் அகவல்கள் 81 - 100 of 206 அடிகள்


81. அதனினும் அமையும் பிரானே! அமையும்;
இமைய வல்லி வாழிஎன் றேத்த
ஆனந்தத் தாண்டவம் காட்டி
ஆண்டுகொண்டருள்கை நின் அருளினுக்கு அழகே!

விளக்கவுரை :

கோயில் திரு அகவல் - 3


பால்கடல் கடையப் படுங்கடு வெண்ணெயைத்

விளக்கவுரை :

86. திருமிடற்று அடக்கிய சிவனே அடைக்கலம்!
அடங்கலும் அடக்கிடும் கடுங்கொலைக் காலனைக்
கால்எடுத் தடக்கிய கடவுள் நின் அடைக்கலம்
உலகு அடங் கலும்படைத்து உடையவன் தலைபறித்து
இடக்கையில் அடக்கிய இறைவ! நின் அடைக்கலம்!

விளக்கவுரை :

91. செய்யபொன் னம்பலச் செல்வ! நின் அடைக்கலம்;
ஐய! நின் அடைக்கலம்; அடியன் நின் அடைக்கலம்;
மனவழி அலைத்திடும் கனவெனும் வாழ்க்கையும்;
விழுப்பொருள் அறியா வழுக்குமறு மனனும்;
ஆணவ மலத்துதித்து அளைந்ததில் உளைந்திடும்

விளக்கவுரை :

96. நிணவைப் புழுவென நெளிந்திடு சிந்தையும்;
படிறும் பாவமும் பழிப்புறு நினைப்பும்,
தவறும் அழுக்காறும் இவறுபொச் சாப்பும்
கவடும் பொய்யும் சுவடும் பெருஞ்சின
இகலும், கொலையும், இழிப்புறு புன்மையும்,

விளக்கவுரை :

பட்டினச் சித்தர், பட்டினச் சித்தர் அகவல்கள், pattina siththar, pattina siththar agavalkal, siththarkal