பட்டினச் சித்தர் பாடல்கள் 146 - 150 of 196 பாடல்கள்

பட்டினச் சித்தர் பாடல்கள் 146 - 150 of 196 பாடல்கள்


146. கல்லால் எறியுண்டும் காலால் உதையுண்டும் காளைகையில்
வில்லால் அடியுண்டு முன்னால் விடமுண்டு மேலளித்துப்
பல்லால் புரமெரிஏ கம்பவாணர் பாதாம்புயத்தின்
சொல்லால் செவியினில் கேளாதிருந்ததென தொல்வினையே.

விளக்கவுரை :

147. ஒரு நான்குசாதிக்கு மூவகைத் தேவர்க்கும் உம்பருக்கும்
திருநாளும் தீர்த்தமும் வேறுளதோவத் திசை முகனால்
வருநாளில் வந்திடும் அந்தக் கண்ணாளன் வகுப்பொழியக்
குருநாதனாணைக் கண்டீர் பின்னைஏதுக் குவலயத்தே?

விளக்கவுரை :

148. பாரோ நீரோ தீயோ வளியோ படர்வானோ
ஆரோ நானென்று ஆய்வுறுகின்றேன் அறிவில்லேன்
பாரோ நீரோ தீயோ வெளியோ படர்வானோ
ஆரோ நானென்று ஆய்வுறுகின்றஅது நீயே !

விளக்கவுரை :


149. நாப்பிளக்கப் பொய்உரைத்து நன்னிதியந் தேடி
நாம்ஒன்றும் அறியாத நறியரைக் கூடிப்
பூப்பிளக்க வருகின்ற புற்றீசல் போலப்
புலபுலெனக் கலகலெனப் புதல்வர்களைப் பெறுவீர்
காப்பதற்கும் வகையறியீர் கைவிடவும் மாட்டீர்
கவர்பிளந்த மரத்தொளையிற்கால் நுழைத்துக்கொண்டே
ஆப்புஅதனை அசைத்துவிட்ட குரங்கனைப் போல
அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே.

விளக்கவுரை :

அறுசீர் விருத்தம்


150. மத்தளை தயிர்உண் டானும் மலர்மிசை மன்னி னானும்
நித்தமும் தேடிக் காரை நிமலனே நீஇன் றேகிச்
செய்த்தளைக் கயல்பாய் நாங்கூர் சேந்தனை வேந்தனிட்ட
சைத்தளை நீக்கி என்முன் காட்டுவெண் காட்டு ளானே.

விளக்கவுரை :

பட்டினச் சித்தர், பட்டினச் சித்தர் பாடல்கள், pattina siththar, pattina siththar paadalkal, siththarkal