பட்டினச் சித்தர் ஞானம் 96 - 101 of 101 பாடல்கள்


96. நெஞ்சே உனக்கு நிலவறமாய்ச் சொன்னவெலாம்
எஞ்சாவென் சொல்லென் றிகழாதே - நெஞ்சே   
கருத்திச்சை தள்ளி கருதென்று செப்பின்
கருத்திச்சை தள்ளு கருத்துள்.

விளக்கவுரை :


97. உள்ளிருந்து நெஞ்சே உலாவுஞ் சிவகுருவை
வெள்ளெருக்கின் பூச்சூடும் வேணியனை - உள்ளே
மனமுருகப் பார்த்தால் மலைசிலையாகச் சென்றால்
உனதறிவால் பார்த்து நீ ஓது.

விளக்கவுரை :

98. ஓதுநீ நெஞ்சேகேள் ஓரெழுத்து மந்திரத்தால்
ஆதியாய் எங்கும் அமர்ந்தானை - ஓதில்
கடிய மிடியும் கடிய பிணியும்
கடிய வணுகாமல் காக்கும்.

விளக்கவுரை :

99. காக்குந் தினமே கடியப் பிறப்பறுத்து
கார்க்கும் பலபிணிநோய் காட்டாமல் - நோக்குமந்தி
வந்து பகல்வெளியில் வாராத மன்மதனை
யுந்து மதையுணர்ந்தில் வாழ்.

விளக்கவுரை :

100. வாழுநீ நெஞ்சே மயங்கித் திரியாதே
ஏழெழுத்துக் கப்பா லிருப்பானை - ஏழை
வருத்தந்தீர்த் தன்பன்மனமதனில் தங்கு
பருத்தரத்தி னத்தைப் பணி.

விளக்கவுரை :

101. பணிந்து துதிமனமே பல்லுயிர்கட் கெல்லாம்
அணுவிலணு வாங்கியிருந் தானை - துணிவாய்ப்
பிறவா திருக்கவும் பேரின்ப வாழ்வைத்
திறமாக நம்பிச் செலுத்து.

விளக்கவுரை :

பட்டினச் சித்தர் ஞானம் 91 - 95 of 101 பாடல்கள்


91. வெளியில் வெளியாகி விண்ணவன் றானாய்
வெளியி லொளியா யிருக்க - வெளியிற்
கரியுரித்துப் போர்த்தவனைக் கார்மதிசென் றானைக்
கருவறுத்துப் பார்த்தலே காண்.

விளக்கவுரை :


92. காணு மனமே கரிகாலனை வதைத்துக்
காணு முலகமெல்லாம் காணுருவாய் - தானு
மனவிரக மானபுலி மன்றுள் நடனப்
பணவரவின் உற்ற பாதம்.

விளக்கவுரை :

93. பாதத்தான் அஞ்செழுத்தான் பரமன் சிங்க
நாதத்தா னென்று நெஞ்சே நன்றாகப் - போதத்தான்
ஆரணத்தி னோடடைந்து அண்டமெல்லாம் சுட்டதிரு
நீறணிந்து கொண்டிரு நித்தம்.

விளக்கவுரை :

94. நித்தனாய் நிர்மலனாய் நின்றுலகம் மூன்றுரைக்கும்
கர்த்தனாய் அஞ்செழுத்தின் காரணமாய்ப் - பெற்ற
குருவினிரு பாதங் குளிர நினைநீ
தருமதுபற் றாமனமே தான்.

விளக்கவுரை :


95. தானவனா காவிட்டால் சண்டாள னிற்றடிவான்
தானவனு மங்கே தரிக்கொட்டான் - மானார்
கலங்கும் கலவிக்கருத்திற்றால் தான் கொடுப்பான்
இலங்கும் அடிதேர் நெஞ்சே.

விளக்கவுரை :

பட்டினச் சித்தர் ஞானம் 86 - 90 of 101 பாடல்கள்


86. நடனமது பார்மனமே நயனத் திடையே
நடனமது நாலாம் பதங்காண் - நடனம்
பதிமதிவித் தாய் மனமே பலகதிவித் தாயெனவே
அதிவிதசித் தாந்த மாடும்.

விளக்கவுரை :

87. ஆடும் பதிமனமே அம்பலத்தைச் சுட்டுநடம்
ஆடும் பரமகுரு ஆனந்தம் - ஆடுகின்ற
கூத்தனை கூற்றிற்ற கூத்தபிரா னையசுத்தம்
நீத்தவனைச் சித்தம்வைத்து நில்.   

விளக்கவுரை :

88. நில்லு நிலவறமாய் நேசமுடனே பதியில்
நில்லு பிறவியற நீநெஞ்சே - நில்லு
கனல்மதியும் கார்மிடறும் கதிரும் மதியும்
புனலொடு செஞ்சடையும் போற்றி.

விளக்கவுரை :

89. போற்றித் தினமனமே பொல்லாக் குலங்கள் விட்டுக்
காற்றுங் கனலுங் கருத்துஒன்றாய்ப் - பார்த்தறிவால்
சுத்தமலப் பித்தையற்றுச் சுற்றஒழி சுற்றிலுற்றுச்
சத்தமறித் துற்றதிலே தங்கு.

விளக்கவுரை :

90. தங்குநீ சென்று சதாசிவத்திலே மனமே
மங்குங் கருக்குழிக்குள் வாராமல் - தங்கும்
கருவும் புனலும் கதியும் கெதியும்
விதியும் திருத்தான வெளி.

விளக்கவுரை :

பட்டினச் சித்தர் ஞானம் 81 - 85 of 101 பாடல்கள்


81. பாரயனும் மாலும் பரவவரு ருத்திரனும்
காரனைய வாரணத்தை தான்கண்டு - சீராய   
நக்கத் திடைநடுவே நற்க்கன பொற்பதியில்
சொற்கனகத் தற்பதியில் தோன்று.

விளக்கவுரை :


82. தோன்றுமே யெல்லாச் சுகமுற்றதில் மனமே
தோன்றுமே ஆனந்தச் சுந்தரர்பின் - தோன்றுமே
அட்சரச் சுருக்கி னொடும் அக்கரப் பெருக்கமுடன்
உச்சரித்து ரைக்கிறவுண்மை.

விளக்கவுரை :

83. உண்மை யிதுகாண் ஒளியிருந்த வீடதுகாண்
உண்மை சிவனிருக்கும் ஊருகாண் - உண்மை
கருமை ஒளியேழ் கதியுள் பதங்கள்
மருவுதங்கி நீ வருந்து மாறு.

விளக்கவுரை :

84. வருந்தும் பொழுதுகாண் மாயையாய் நெஞ்சே
வருந்தும் குணமாக வந்து - வருந்தும்
இருவினை தொடக்கறும் ஏழ்வகைப்பிறப்பாம்
கருமலத் திருக்கறுங் காண்.

விளக்கவுரை :

85. காண்மனமே சத்திசிவம் ஒன்றான காரணத்தை
காண்மனமே மாலயனுங் காணரிதை - காண்மனமே
செம்பொன்னி னம்பலத் துள் சேருஞ்செஞ் சொல்லென்றும்
அம்பலத்தில் ஆடுநட னம்.

விளக்கவுரை :

பட்டினச் சித்தர் ஞானம் 76 - 80 of 101 பாடல்கள்


76. காலங் கழித்துக் கடைவாயில் பாலுறுமுன்
வேலங் கனைய விழிமடவார் - ஏலக்
குழியில்வைத்து மாரடித்து கூப்பிடுமுன் மாய்கைக்
கழியெடுத்துப் போடுமுன் கண்ணால்.

விளக்கவுரை :

77. கண்ணாலே ஞானம் கருதாமல் நெஞ்சேநீ
எண்ணாத மாய்கையெல்லாம் எண்ணுகிறாய் - நண்ணாய் கேள்
பார்க்கவேண் டுந்தனையும் பத்தரை மாற்றுத்தங்கம்
ஆக்கப் போகாதோ உன்னால்.

விளக்கவுரை :

78. உன்னாலே நெஞ்சமே ஊழ்வினை வந்தாலும்
எந்நாளும் பாம்பின்வாய் தேரைபோல் - முன்னால்
அம்பிபட்டுப் போகாதே ஆனந்த மெய்விளக்கு
நம்பி துணைக்கு முற்றும் நம்பு.

விளக்கவுரை :

79. நம்பினான் றன்னை நடுவணையி லேயிருந்து
கும்பிடா தார்க்குங் குறையுண்டோ - நம்பிப்
பளிங்கொளிபோல் நெஞ்சே பரந்திடாலா மெங்கும்
விளங்கனலோ டேசேருமே.

விளக்கவுரை :

80. ஏமன்வரு முன்நெஞ்சே எவ்வினையுமே வென்று
சாம நடுவதனில் சார்ந்ததிலே - சேமமுடன்
காலனையும் வென்று சில காமனையும் வென்றுபின்பு,
பாலிக்க லாமதுநாம் பார்.

விளக்கவுரை :

பட்டினச் சித்தர் ஞானம் 71 - 75 of 101 பாடல்கள்


71. தாய்தந்தை பெண்டுபிள்ளை தானென் றிரங்கிநித்தம்
காய்பறிக்கி றாயே கனியிருக்க - தாய்தந்தை
எத்தனை பேர் பெற்றாரோ என் மனமே நாமுந்தான்
எத்தனை பேரைப்பெற்றோம் இங்கு.

விளக்கவுரை :

72. இங்குஅங்குமாய் மனமே ஈடழிய வேண்டாங்காண்
அங்கம் பொருளா அறிந்துகொண்டு - எங்குமெங்கும்
நாமேசிவமாக நாடினால் ஞானமொழி
தாமே அருளைத் தரும்.

விளக்கவுரை :

73. அருளில்லா தார்க்கும் அருளறிவங் காமோ
அருளறிவு தானே ஆனந்தம் - அருளறிவு
தேடுவதும் கூடுவதும் சிந்தையா னந்தமுடன்
நாவதும் தானறி வினால்.   

விளக்கவுரை :

74. நாடிலெழுத்து ஆறும் நடுவெழுத் தீரைந்தும்
ஓடி னொருபதினா லாகுமோ - ஓடாய்நீ
ஓரெழுத்தைக் கண்டுறங்கி உன்னோடுறங்கி நெஞ்சே
ஓரெழுத்தி லேசென் றுரை.

விளக்கவுரை :
   
75. உறைகலத்தினாய் போல உள்ளமல மெல்லாம்
அறுத்தடைந்து நெஞ்சே அறுதி - நிறைத்துப்
புளியம் பழத்தோடு போலிருக்க வேண்டும்
களியழியுங் காலத்துக் கே.
   
விளக்கவுரை :

பட்டினச் சித்தர் ஞானம் 66 - 70 of 101 பாடல்கள்


66. குணங்கள் பலவிதமாய் கொள்ளாதே நெஞ்சே
வணங்குங் குணமாக வந்து - வணங்கியே   
மண்டல மெலாங் கடந்து மாவீட்டை நீதிறந்து
கண்டெடுத்துக் கொள்வாய் கனம்.

விளக்கவுரை :

67. கன தனத்து மாதர் கழிகாதல் கொண்டே
வினையார் நகைக்குருக வேண்டா - தினமனமே
சோதித்தா னல்லால் சுபகா ரியமாகப்
போதித்தால் கொள்விலையோ புத்தி.

விளக்கவுரை :

68. புத்திதரும் வித்தைதரும் பொல்லாப் பில்லாமல் நெஞ்சே
சித்திமுத்திபேரின்பம் சேர்ந்திடலாம் - நித்தநித்தம்
தானந்த மானதொரு சற்குருவோடே பழகி
ஆனந்த முண்டிருந்தக் கால்.

விளக்கவுரை :

69. கால்வழிச் சென்று கருபைக் குழிக்குக்கீழ்
மூலமற்ற நல்வழியே மூழ்கின்றி - மாலை
இருட்டறுத்துப் போடாமஎன்பாவி நெஞ்சே
திருட்டுவித்தை செய்கிறாய் சென்று.

விளக்கவுரை :

70. சென்று சிவனடியில் சேர்ந்த பெரும்பாம்பு
ஒன்றுமிக வாசியைத்தான் ஓட்டாமல் - நன்றாய்
நிலையாக நில்லா தலைவாய் மனமே
அலைவாயி னில்துரும்ப தாய்.

விளக்கவுரை :

பட்டினச் சித்தர் ஞானம் 61 - 65 of 101 பாடல்கள்


61. வந்ததுவும் நாதாந்த வாதனைக்கண்டே வணங்கித்
தந்திரமாய்ச் சென்று தரியாமல் - அந்தரத்தில்
விட்டபட்டம் போலலைந்து வெவ்வினையி னால்மனமே
தட்டுகெட்டுப் போகாதே தான்.

விளக்கவுரை :

62. தானந் தவமுயற்சி தாளாண்மை யோடுநெஞ்சே
வானம் பிளந்து வழிகூடின் - நானுமதில்
நீயு மொருநிழலில் நின்றங் கிளைப்பாறி
தோயுமதி தானே தொடங்கு.

விளக்கவுரை :

63. தொடங்கு வினையறுத்து சுற்றமெலா நீத்தே
அடங்கு மிடத்தில் அடங்காமல் - கிடந்து
பறந்தெடுத்த குஞ்சாய் பதைத்தாய் மனமே
அருஞ்சரத் தம்மத னடி.

விளக்கவுரை :

64. மதனசரத் தால்மனமே வையம் மயங்கி
விதனத் துறலால் வேறில்லை - மதனாலே
தத்துச் சுகத்தை நத்தி தானலைய வேண்டாங்காண்
மெத்த சுகத்தை வெறுத்து.   

விளக்கவுரை :

65. வெறுத்துவெருக் கொண்டதுபோல் வீணிலே நெஞ்சே
பொறுத்த மயக்கிற் போகாதே - குறித்தெடுத்து
தேடியே வாசிதனை சேர்ந்து கலந்தபொருள்
கூடினா லாமே குணம்.

விளக்கவுரை :

பட்டினச் சித்தர் ஞானம் 56 - 60 of 101 பாடல்கள்


56. எண்ணரிய நெஞ்சே இனியநற் பாலதனை
அன்னந்தண் ணீர்நீக்கி யேயிருந்து - தன்மைபோல்
துன்பங் களைந்து தூயவெளி யூடுருவாய்
இன்பங் களைச்சேர்ந் திரு.   

விளக்கவுரை :

57. சேர்ந்திருவோ ரும்பாலும் தேனும் போலே கலந்து
வார்ந்ததிலே யுள்ளுரிசி வாங்காமல் - போங்காலம்
வைத்தமறக் காலன் வருவானே வந்தக்கால்
ஏய்த்திடுவா னெஞ்சே எவன்.

விளக்கவுரை :

58. எவனிருந்து நெஞ்சே எதிர்ப்பாரு முண்டோ
கவனமற நின்று கருதின் - புவனமெல்லாம்
வித்துயிரெல் லாங் கழண்டு விண்ணுடைந்த தேமனமே
மற்றுடலைஉண்கிறதே மண்.

விளக்கவுரை :

59. மண்ணெழுந்தும் நீரெழுந்தும் வாய்வெழுந்தும் தீயெழுந்தும்
விண்ணெழுந்துங் கூடி ஒரு வீடாகி - நண்ணரிய
மாயமெல்லா முண்டாக்கி வைத்தான் காண்நெஞ்சேஇக்
காயமெல்லாம் நானாக் கரு?

விளக்கவுரை :

60. கருவழிந்தால் வித்தையில்லாக் காரணம் போல் நெஞ்சே
கருவழிந்த தெல்லாம் கண்டதெல்லாம் - கருதித்
திரியாதே நெஞ்சே சிவன் செயலே யல்லால்
மரியாரில் லாதக்கால் வந்து.

விளக்கவுரை :

பட்டினச் சித்தர் ஞானம் 51 - 55 of 101 பாடல்கள்


51. வாராது நெஞ்சே மயக்கம் வருமுன்னே
வேரா னதைப்பிடித்து மேலேறிப் - பாராமல்   
பொய்யிலே நில்லாதே புத்திகெடா தேயிருந்தால்
மெய்யிலே நின்றறிவோம் மெய்.

விளக்கவுரை :

52. மெய்யாறு வீடுகளாய் மேலாம் படைவீடாய்
ஐயாறு மாதம் அறுபதாய் - மெய்யாகக்
கண்டதெல்லாம் நான்காண் காணா ததைத்தேடிக்
கண்டுருகி நெஞ்சே கனி.

விளக்கவுரை :

53. கனியருந்த மாட்டாமல் காயருந்து கின்றாய்
கனிருசிபோ லாகுமோ காய்தான் - இனியதுகேள்
நானும் நீயும் கனிகாண் நடுவிருந்த தேருசிகாண்
தேனும் பாலும் போல் சிவன்.

விளக்கவுரை :

54. சிவதலங்க ளைத்தேடி சீயெழுத்த றுத்துச்
சிவதலங்க ளைத்தேடி சேரா - தவ தவங்கள்
பண்ணாதே நெஞ்சேகேள் பாரவினை வந்தக்கால்
எண்ணாதே அஞ்சியேங்கா தே.

விளக்கவுரை :

55. ஏங்காதே நெஞ்சேகேள் எவ்வினைகள் வந்தாலும்
ஏங்காதே சற்றும் இளைக்காதே - தாங்காமல்
கொண்ட வனும் செத்தவனும் கூட்டத்தானும் வந்தான்
இன்றுகுறித் துண்மையிதென் றெண்.

விளக்கவுரை :

பட்டினச் சித்தர் ஞானம் 46 - 50 of 101 பாடல்கள்


46. பேசாத ஞானப் பெருமைக் கிடப்பதுதான்
ஆசாபா சங்களில்லா தார்க்கல்லோ - சுசாமல்
தேசமெல்லாம் ஓடித் திரிகின்றாயே மனமே
ஆசாபா சங்களும் நீ யாய்.

விளக்கவுரை :

47. பாசங் களைந்து பதியி லிருந்துகொண்டு
பேசரிய காலைப் பிடித்திருக்க - நேசமுடன்
நாமிருவ ருங்கூடி நாதாந்த ஞானத்தை
தாமொருவ னாயிருக்கத் தங்கு.

விளக்கவுரை :

48. தங்கு நெடுவளையில் சகலங் களுங்கடந்து
எங்குநான் றானா யிருக்காமல் - மங்கு
கருவானாய் நெஞ்சே கரிக்கால தூதன்
வருவானே யென்ன வகை.

விளக்கவுரை :

49. என்னவகை செய்வோம் எமதூதன் வந்தக்கால்
பின்னையென ஒட்டானே பேய்நெஞ்சே - சொன்ன
படியேகேள் தூதன் பரிந்துவரு முன்னே
அடிதேடிக் கொண்டே அமர்.

விளக்கவுரை :

50. அமரும் மனம்புத்தி யாங்கார மேசித்
தமரும் பொழுது வேறானோர் - அமரும்
கோவென் றுரைத்தநமன் கொண்டுபோம் போதறிவு
வாவென்றால் நெஞ்சே வாராது.

விளக்கவுரை :

பட்டினச் சித்தர் ஞானம் 41 - 45 of 101 பாடல்கள்


41. கணக்கறியா மாயக் கருவீகர ணாதிப்
பிணக்கறியா மற்பேதை நெஞ்சே - இணக்கம்
அறிந்திணங்க வேணும் அருள்வெளியி னுள்ளே
செறிந்தவிந்து நாதத்தைச் சேர்.

விளக்கவுரை :

42. சேராதே மாய்கைதனை சேர்ந்து கருக்குழியை
பாராதே நெஞ்சே பதையாதே - சீரான
சித்திரத்தைப் பார்த்து தினமே சித்திரத்தில்
உத்திரத்தைக் கொள்ளா உகந்து.

விளக்கவுரை :

43. உகந்து உகந்து நெஞ்சமே ஓரெழுத்தி னாலே
அகந்தனையே சுத்தி பண்ணி பாய்ந்து - முகந்து
குடியாம லாமோ குலவுமல மான
மிடியா னதுதீர வேண்டி.

விளக்கவுரை :

44. வேண்டுந் திரவியமும் மேலுயர்ந்து பள்ளியெல்லாம்
ஆண்ட திரைநாடு மம்பலமும் - மாண்டுபெருங்
காடுயர்ந்தா ரேமனமே கண்டாயோ மாயனயன்
தேடரிய ஈசன் செயல்.

விளக்கவுரை :
   
45. செயமகா நெஞ்சே திருட்டுமலக் கோட்டை
பயமறவே வெட்டிப் பரப்பி - நயமான
வாசியினால் சுட்டு மதிமயங்கக் கண்டிருப்போம்
பேசிய நாம் பேசாம லே.

விளக்கவுரை :

பட்டினச் சித்தர் ஞானம் 36 - 40 of 101 பாடல்கள்


36. போட்டுவிக்கும் பொல்லாப் புழுச்சொரியும் நாய்விடக்கே
கூட்டங் குலைந்து குலைந்திடுமுன் - காட்டிடில்   
தாழ்வுறாய் நெஞ்சே தராதா மாயெங்கும்
மூழ்வா னதையுயிர்போம் முன்.

விளக்கவுரை :

37. முன்னே யயனெழுதும் மூன்றுவினை கண்டுழன்று
பின்னும் தெரியலையோ பேய்மனமே - தன்னை
அறியா திருந்தால் அவனறிவானோ
குறியான புத்தியென்றே கொள்.

விளக்கவுரை :

38. கொள்ளைக்குட் பட்டுக் குடிகேட ரோடிருந்து
கள்ளக் கருத்தால் கருதாதே - மெள்ளமெள்ள
அய்ந்தாய்ந்து பார்த்துநீ ஆறாறுக் கப்பாலே
தேர்ந்ததாய்ந்து பார்த்துத் தெளி.

விளக்கவுரை :

39. தெளிந்தநீர் பட்டமுதம் சேர்ந்தால் தெளியா
தெளிந்தநீர் காட்டா தவைபோல் - தெளிந்தால்
சகலப் பொருள் தோற்றும் தாழ்வுறா தொன்றும்
பகலிர வில்லாத பதி.

விளக்கவுரை :

40. பதிபசுபா சங்களையும் பற்றி யுருவப்
பதிதனிலே தங்கிப் பலரும் - கதிபெறவே
வீணாமோ நெஞ்சேகேள் வேதாந்தத் துட்பொருளை
காணா மலாமோ கணக்கு.

விளக்கவுரை :

பட்டினச் சித்தர் ஞானம் 31 - 35 of 101 பாடல்கள்


31. காணா ததைக்கண்டால் கண்டதெல்லாங்காணாது
வீணாவல் கொண்டுள் மெலியாதே - நாணாதே
இந்திரியத் தோடு பிணங்காதே பாவிநெஞ்சே
செஞ்சொல்மறை அக்கரத்தை தேடு.

விளக்கவுரை :

32. தேடினா லைந்துதிரு வக்கரத்தைச் சென்றுவெளி
நாடினால் நெஞ்சே நலம்பெறலாம் - வாடியே
பொல்லாப் புவிகாணப் போகமதை நம்பாதே
எல்லாம் வெயில் மஞ்சளே.

விளக்கவுரை :


33. மஞ்சனைய கூந்தல் மடவாரைக் கண்டுருகும்
பஞ்சமல நெஞ்சே பகரக்கேள் - மஞ்சள்
மயங்காணும் இந்தவுடல் மாயவாழ் வெல்லாம்
அயன் காணழி சூத்திரம்.

விளக்கவுரை :

34. சூத்திரத்தா லாடும் சுழுமுனையைத் தான்திறந்து
பார்த்திருந்தால் வாராது பாவமெல்லாம் - சூத்திரத்தைப்
பாராமலேயிருந்து பாவிமன மேபிறக்க
வாராம லேயிருக்க வா.

விளக்கவுரை :


35. வாசி தனைப்பிடித்து வண்கனலோ டேசேர்த்துச்
சீசீ யெனவே திரியாமல் - மாசி
இருளா னதைச் சேர்த்து இருந்தாயே நெஞ்சே
பொருளா னதைமறந்து போட்டு.

விளக்கவுரை :

பட்டினச் சித்தர் ஞானம் 26 - 30 of 101 பாடல்கள்


26. அச்சத்தால் ஐம்புலனும் ஆங்காரத் தால்மேய்ந்த
கச்சத்தா னியச்சயமாய்க் கள்ளதோ - மெச்சத்தான்
அண்டமெல்லாம் ஊடுருவ ஆகாச முங்கடந்து
நின்ற நிலைதான் நிலை.

விளக்கவுரை :

27. நிலையறிந்து நில்லாமல் நீபாவி நெஞ்சே
அலைமதி போலே தினமும் ஆனாய் - கலையறிந்து
மாரனையுங் கூற்றினையும் மாபுரத்தை யும்புகைத்த
வீரனையும் தேட விரும்பு.

விளக்கவுரை :

28. விரும்பித் தனித்தனியே மெய்யுணரா தேமா
இரும்புண்ட நீர்போல வேகும் - கரும்பதனைத்
தின்றாலல்லோ தெரியும் நெஞ்சே நின் ஐம்புலனை
வென்றாலல்லோ வெளிச்ச மாம்.

விளக்கவுரை :

29. வெளிச்சமில்லா வீடே விளக்கேற் றினதாக்
களிசிறந்து நின்றதைக்கா நெஞ்சே - வெளிச்சமற
தொண்ணூற் றறுதத் துவமொன்றாய்த் தோன்றுங்காண்
எண்ணிலிவை காணா திருட்டு.

விளக்கவுரை :

30. இருட்டனைய மாய்கையா லெவ்வுலகுந் தாய
பொருட்டனையே மூடு ஐம்புலனால் - திருட்டுமன
வண்டருடன் கூடாதே வாழ்மனமே நாமிருவோர்
கண்டுகொள்வோம் காணா தது.

விளக்கவுரை :

பட்டினச் சித்தர் ஞானம் 21 - 25 of 101 பாடல்கள்


21. பாலிக்கும் தோல் தனத்தை பாராதே மங்கையர்கள்
காலிடுக்கை நத்திக் கரையாதே - கோலெடுத்து   
வீர மறலி இவருமுன் வினையறுக்கும்
பார வழிஇன்னருளைப்பார்.

விளக்கவுரை :


22. பார்த்த இடமெல்லாம் பரமென் றிருமனமே
காற்றனல் மண்நீர் வெளியாம் கண்டவெல்லாம் - மாத்திரண்ட
ஐம்புலனு நில்லா ஆசைகளும் நில்லாவே
என்புடலும் நில்லாது இனி.

விளக்கவுரை :

23. இனியசுகம் ஐம்புலனென்று எண்ணாதே நெஞ்சே
இனிய சுகமற வாதே - இனியசுகம்
கண்டதெல்லா மெவ்வுலகு காணாத இவ்வுலகில்
நின்றதோ நில்லாததா.

விளக்கவுரை :


24. நில்லாமல் ஓடுகின்ற நெஞ்சே நிலையில்லா
எல்லாம் பகையா யிருக்குங்காண் - பொல்லாக்
கருக்குழியிலே பிறந்த கன்மவினை யானால்
திருக்கறுக்க வேணும் தினம்.

விளக்கவுரை :


25. தினந்தினைப் போதாகிலுந்தான் தீதறநில் லாமல்
இனம்பிரிந்த மான்போல் இருந்தாய் - தினந்தினமும்
ஓங்காரத் துள்ளொளியை உற்றுணர்ந்த நீமனமே
ஆங்கார அச்சம் அறு.

விளக்கவுரை :

பட்டினச் சித்தர் ஞானம் 16 - 20 of 101 பாடல்கள்


16. பாக்கியத்தைக் கண்டு பரிந்து மகிழாதே
தாக்குமிடி வந்தால் சலியாதே - நோக்குமே
ஒருவத்தன் திருவிளையாட் டென்று உணரு நெஞ்சே
கருத்தாலே நின்று கருது.

விளக்கவுரை :

17. கருதாதே மங்கையர் காமவலைக் கேங்கி
உருகாதே நெஞ்சே ஒருவன் - இருகாலைக்
காத்தயர்ந்து சேர்த்துக் கனலைக்கண் காட்டினகண்
போற்றிப்பார், ஒத்தநல் பொன்.

விளக்கவுரை :

18. பொன்னாசை மண்ணாசை பூங்குழலா ராசையெனச்
சொன்னாசை யென்றறிந்து சோராதே - எந்நாளும்
ஈசன் அமைத்தாங் கிருக்குங்கா ணிம்மூன்றும்
பாசமது நெஞ்சே பரிந்து.

விளக்கவுரை :

19. பரிந்து திரியாதே பார்வினைக்கும் அஞ்சாதே
அறிந்துருகிச் சிந்தித் தலையேல் - வருந்தி
நடந்துசித்ர நாடியிலே நாதமறி நெஞ்சே
உடைந்திடு முன்னே உடம்பு.

விளக்கவுரை :

20. உடம்பழிந்த பின்மனமே ஒன்றுங் கிடையாது
உடம்பழியு முன்கண் டுணராதே - உடம்பிற்
கருநிறத்தைச் சேர்ந்து கருமலச் சிற்றற்றுப்
பருகு கலைமதியப் பால்.

விளக்கவுரை :

பட்டினச் சித்தர் ஞானம் 11 - 15 of 101 பாடல்கள்


11. கருத்து வேறாகாதே கண்டிடத்து ஓடாதே
விரித்துப் பலவேடம் மேவாய் - பெருத்ததொரு
சஞ்சலத்தை விட்டுச் சலமறிந்து காண்மனமே
அஞ்செழுத் தாலொன் பது.

விளக்கவுரை :

12. ஒன்பது வாய்க்கூட்டை உறுதிஎன்று நம்பாதே
ஐம்புல னேயென் றணுகாதே - இன்பமுடன்
சிற்பரத்தி னுள்ளே தெளிந்தபர மானந்தத்
துட்பொருளே மெய்யென் றுணர்..

விளக்கவுரை :

13. மெய்யுணர்ந்து பாராமல் விரிந்தகன்று போகாதே
அய்யன் திருவிளையாட்டா நெஞ்சே - செய்யதோர்
ஆணெழுத்தும் பெண்ணெழுத்துமாகி நடுநின்ற
காணும் பொருளுரைக்குங் கல்.

விளக்கவுரை :

14. கல்லான நெஞ்சே கவலைக் கருத்தாகிப்
பொல்லாப் பவக்கடலில் போகாதே - எல்லாம்
செலக்குமிழி யென்று நினை செம்பொன்னம்ப லத்தை
கலக்கமறப் பார்த்தே கரை.

விளக்கவுரை :


15. கரைதெரியா இன்பக் கடலில் மூழ்காதே
வரைகடந்த வாழ்வைநத் தாதே - உரையிறந்த
ஓசைவிந்து வேமனமே உற்றசபை யாலறிந்து
நேசமுள்ள பாக்கியத்தில் நில்.

விளக்கவுரை :

பட்டினச் சித்தர் ஞானம் 6 - 10 of 101 பாடல்கள்


6. இருவினைக்கு உளாகாதே என்னுடமைஎண்ணாதே
பெருகுசினங்கொண்டு பினத்தாதே - மருவுமலக்   
கள்ளமெலாம் விட்டுக் கரைந்து கரைந்துருகி
உள்ளுணர்ந்து நெஞ்சேபார் ஒன்று.

விளக்கவுரை :
    
7. ஒன்றும் அறியாதே ஓடி அலையாதே
சென்று மயங்கித் திரியாதே - நின்ற
நிலை பிரியா தேநெடிய னெஞ்சே கொடிய
புலைவினையும் மாற்றும் பொருள்.

விளக்கவுரை :

8. பொருளுடைமை நம்பாதே பொய்வாழ்வை நத்தாதே
இருளுறவை நம்பி இராதே - பொருளுறவு
கொண்டறிவி னாலே குறித்து வெளியதனைக்
கண்டுபிடித் தேறுநெஞ்சே காற்று.

விளக்கவுரை :
    
9. காற்றுடனே சேர்ந்து கனலுருவைக் கண்டவழி
மாற்றி இனிப்பிறக்க வாராதே - ஏற்றபடி
ஓடி அலையாதே ஓங்காரத் துள்ளொளியை
நாடியிருப் போம்மனமே நாம்.

விளக்கவுரை :

10. நானென தென்றுவினை நாடி அலையாதே
தானவனே யென்று தரியாய்நீ - ஏன்மனமே
வீணாவல் கொள்ளாதே மேலாம் பழம்பொருளைக்
காணாவல் கொள்ளாய் கருத்து.

விளக்கவுரை :

பட்டினச் சித்தர் ஞானம் 1 - 5 of 101 பாடல்கள்


காப்பு

நேரிசை வெண்பா

   
1. நண்பான நெஞ்சுக்கே ஞானத்தால் நல்லபுத்தி
வெண்பாவாய் நூறும் விளம்பவே - பண்பாக்
ககனப் பதமுறவக் கன்ம மருகக்
ககனகதிர் வேல்முருகன் காப்பு.

விளக்கவுரை :
    
2. நெஞ்சுட னே தான்புலம்பி நீலநிறத்தாளீன்ற
குஞ்சரத்தை ஆதரித்துக் கும்பிட்டால் - கஞ்சமுடன்
காமமுதல் மும்மலத்தின் கட்டறுத்து ஞானமுடன்
பூமிதனில் வாழ்வ ரெப்போதும்.

விளக்கவுரை :
    
3. எப்போதிறைவன் எழுத்தைவிட்டுத் தப்புவோம்
எப்போது எழுத்திரெண்டை ஏத்துவோம் - எப்போது
காமன்வலையறுப்போம் காரொளியைக் கண்டுநெஞ்சே
ஏமன்வலை அறுப்ப தென்று.

விளக்கவுரை :
    
4. என்றும் பயமறவே ஈரெழுத்தும் ஓரெழுத்தாய்
நின்றசிவ லிங்கத்தை நெஞ்சேகள் - உண்டுறங்கித்
தேசமெல்லாம் நின்றசைந்த தீயெழுத்தே லிங்கங்காண்
ஆசைவிந்தே ஆவுடையாள்.

விளக்கவுரை :    
5. ஆவுடையா ளோடிருந்தேன் அருளானந் தம்பெறவே
கோவுடையாள் நின்றதினம் கூடிய - பூவுடையாள்
கட்டழகி யைத்தான் கடந்து பெருவெளியில்
இட்டமுடன் நெஞ்சேஇரு.

விளக்கவுரை :

காகபுசுண்டர் குறள் 11 - 16 of 16 பாடல்கள்

    
11. உலகி லறிந்தோ ரொருநாளும் மாளார்
பல நினைவை விட்டுநீ பார்.   

விளக்கவுரை :
   
12. கண்டோருஞ் சொல்லார் கருத்தாற் பெரியோரைத்
தொண்டுசெய்து பெற்ற சுகம்.   

விளக்கவுரை :
   
13. ஆதியிற் சொன்னவிய ரண்ட மதையெடுத்து
மாதுசிவன் பூசைசெய்து வை.   

விளக்கவுரை :   
14. முப்பொருளைச் சுட்டு முழுதழுது நீறாக்கித்
தப்பாம லுண்டுநிலை சார்.   

விளக்கவுரை :
   
15. யோகமுடன் கற்ப முரைத்தேனீ ரெட்டினில்
வேகமுடன் கண்டுணரு வீர்.   

விளக்கவுரை :
   
16. வாசிமுனி மைந்தா மருவு பிரமத்தில்
மோசம்வா ராகுறள்முற் றும்.   

விளக்கவுரை :

காகபுசுண்டர் குறள் 6 - 10 of 16 பாடல்கள்

    
6. சித்தர் பதினெண்மர் செய்கையிற் றோன்றாத
அத்தனரு ளும்புசுண்டன் யான்.   

விளக்கவுரை :

   
7. சொன்னே னறிந்து சுகமா யுலகோருக்
கெந்நாளும் வாழ்கவென்றே யான்.   

விளக்கவுரை :
   
8. கண்ணுள் மணியாகிக் காரணமாய் நின்றான்
மண் முதிர்பதயு மாறு.   

விளக்கவுரை :

   
9. விண்டனே ஞானம் வெளியாக முப்பத்தி
ரண்டி லறிவீர் நலம்.   

விளக்கவுரை :
   
10. நேத்திரத்தைக் காகம்போல் நிச்சய மாய்நிற்க
ஆத்துமத்தி லானந்த மாம்.   

விளக்கவுரை :

காகபுசுண்டர் குறள் 1 - 5 of 16 பாடல்கள்


குறள் வெண்பா

1. சின்மயத்தைப் போற்றிச் சிவராச யோகத்தில்
நன்மை பராபரத்தை நாடு

விளக்கவுரை :


2. அண்ட முடிமீதி லங்கிர விமதியைக்
கண்டுதரி சித்தல் கதி.   

விளக்கவுரை :

   
3. வலமிடமாய் நின்ற மதிரவியை மாறி
விலகா தடியினிற்பின் வீடு.   

விளக்கவுரை :
   
4. அறுபத்து நால்யோக மவ்வளவுந் தள்ளி
ஒருபொழுது முண்டுநிலை யோர்.   

விளக்கவுரை :
   
5. உலகமே மாயமென வுன்மனதிற் கண்டு
நலமாக நாதனடி நம்பு   

விளக்கவுரை :

காகபுசுண்டர் காவியம் 31 - 33 of 33 பாடல்கள்

     
31. வணங்கியவர் வாய்புதைந்து நின்றார் பின்னே
    மாதுகலி யாணியென வசனித் தார்கள்
வணங்கினார் தேவரொடு முனிவர் தாமும்
    மற்றுமுள்ள தேவர்களும் நவபா டாளும்
வணங்கினா ரட்டகசந் திகிரி யெட்டும்
    வாரிதியுஞ் சேடனுமா லயனு மூவர்
வணங்கினார் மிகவணங்கித் தொழுதா ரப்போ
    வாலையவள் மெய்ஞ்ஞானம் அருளீ வாளே.

விளக்கவுரை :
    
32. அருளீவாள் திருமணியை மாலை பூண்டாள்
    அரகரா சின்மயத்தி னீறு பூசிப்
பொருளீவா ளவரவர்க்கும் ஏவல் சொல்லிப்
    பொன்றாத பல்லுயிர்க்கைக் கிடங்கள் வேறாய்த்
தெருளீவாள் சிவயோகந் தெளிவ தற்குச்
    செயலுறுதி யாகவல்லோ தெரிய வேண்டித்
திருளீவாள் தாயான சிறிய வாலை
    சிவசிவா சூட்சம்பூ ரணமு முற்றே.

விளக்கவுரை :

    
33. பூருவத்தில் நடந்தகதை இதுதான் என்று
    புகன்றுவிட்டுப் புசுண்டருந்தம் பதிக்குச் சென்றார்;
காரணத்தி லேவகுத்தே னிந்த ஞானங்
    கம்பமணி வாலைகொலுக் கூட்டமப்பா
நாரணத்தில் நின்றிலங்கும் மவுன வாலை
    நாட்டினாள் சிவராச யோகங் கேளு
ஆரணத்தி பூரணத்தி யருள்மெய்ஞ் ஞானி
    ஆதிசத்தி வேதமுத்தி யருள் செய்வாளே.

விளக்கவுரை :

காகபுசுண்டர் காவியம் 26 - 30 of 33 பாடல்கள்

     
26. லீலைபொற் காணுமுகம் போலே காணும்
    நிலைபார்த்தால் புருடரைப்போற் றிருப்பிக் காணும்;
ஆலைபோற் சுழன்றாடுங் கம்பத் துள்ளே
    அரகரா சக்கரங்க ளாறுங் காணும்
வாலைபோற் காணுமையா பின்னே பார்த்தால்
    மகத்தான அண்டமது கோவை காணுஞ்   
சோலையா யண்டமதிற் சிவந்தான் வீசும்
    சிவத்திலே அரகரா பரமுங் காணே.

விளக்கவுரை :
    
27. பரத்திலே மணிபிறக்கும் மணியி னுள்ளே
    பரம்நிற்குஞ் சுடர்வீசும் இப்பாற் கேளும்;
நிரத்திலே சடமதனில் யகாரங் காணும்
    நிச்சயமாம் யகாரமதில் வகாரங் காணும்
வரத்திலே வகாரமதிற் சிகாரங் காணும்
    வரும்போலே சிகாரத்தில் மகாரம் காணும்
நரத்திலே மகாரத்தில் நகாரங் காணும்
    நன்றாமப் பூமியப்போ பிறந்த தன்றே.

விளக்கவுரை :

    
28. பிறந்ததையா இவ்வளவு மெங்கே யென்றால்
    பெண்ணொருத்தி தூணதிலே நின்ற கோலம்
சுறந்ததையா யிவ்வளவும் அந்த மாது
    சூட்சமதே அல்லாது வேறொன் றில்லை;
கறந்ததையா உலகமெல்லாங் காமப் பாலைக்
    காலடியிற் காக்கவைத்துச் சகல செந்தும்
இறந்ததையா இவ்வளவுஞ் செய்த மாது
    எங்கென்றா லுன்னிடத்தி லிருந்தாள் கன்னி.

விளக்கவுரை :
    
29. இடப்பாக மிருந்தவளு மிவளே மூலம்
    இருவருக்கும் நடுவான திவளே மூலம்
தொடக்காக நின்றவளு மிவளே மூலம்
    சூட்சமெல்லாங் கற்றுணர்ந்த திவளே மூலம்
அடக்காக அடக்கத்துக் கிவளே மூலம்
    ஐவருக்குங் குருமூல மாதி மூலம்
கடக்கோடி கற்பமதில் நின்ற மூலம்
    கன்னியிவள் சிறுவாலை கன்னி தானே.

விளக்கவுரை :

    
30. கன்னியிவ ளென்றுரைத்தார் புசுண்டமூர்த்தி
    கர்த்தரப்போ மனஞ்சற்றே கலங்கி னார்பின்
மண்ணுள்ள தேவர்களும் பிறப்பித் திந்த
    மார்க்கத்தி லிருப்பதுவோ மவுனப் பெண்ணே!
உன்னிதமா யுன்கருணை யெங்கே காண்போம்
    ஓகோகோ ஐவருந்தான் வணங்கினார்கள்   
கொன்னியவள் வாக்குரையாள் சிவமே கன்னி
     கொலுமுகத்தில் நால்வரும்போய் வணங்கி னாரே.   

விளக்கவுரை :

காகபுசுண்டர் காவியம் 21 - 25 of 33 பாடல்கள்

     
21. கவிழ்ந்துபோ மப்போது அடியே னங்கே
    கருத்துவைத்துத் தியானமொரு தியான முண்டு
தவழ்ந்துபோங் காலமப்போ நிறுத்து வேன்யான்
    சமையமதி லக்கினிபோல் தம்பங் காணுஞ்
சிவந்தவண்ணம் நீலவுருச் சுடாவிட் டேகும்;
    சிவ சிவா அக்கினிபோற் கொழுந்து வீசும்;
நவந்துஅத னருகேதான் சென்று நிற்பேன்;
    நகரமுத லஞ்செழுத்தும் வரக்காண் பேனே.

விளக்கவுரை :
    
22. காண்பேனே நாகரமது மகாரம் புக்கும்
    கருத்தான மகாரமது சிகாரம் புக்கும்
தேண்பேனே சிகாரமது வகாரம் புக்கும்
    சிவசிவா வகாரமது யகாரம் புக்கும்
கோண்பேனே யகாரமது சுடரிற் புக்கும்
    குருவான சுடரோடி மணியிற் புக்கும்   
நாண்பான மணியோடிப் பரத்திற் புக்கும்
    நற்பரந்தான் சிவம்புக்குஞ் சிவத்தைக் கேளே.

விளக்கவுரை :
    
23. கேளப்பா சிவமோடி அண்டம் பாயும்
    கிருபையா யண்டமது திரும்பிப் பாயும்
கோளப்பா அண்டமது கம்பத் தூண் தான்
    குருவான தசதீட்சை யொன்று மாச்சு
மீளப்பா தம்பமது விளங்கு மஞ் செய்கை
    மேலுமில்லை கீழுமில்லை யாதுங் காணேன்;
ஆளப்பா நரைத்தமா டேறு வோனே!
    அன்றளவோ வின்றளவோ அறிந்தி லேனே.

விளக்கவுரை :
    
24. அறிந்திலே னென்றுரைத்த புசுண்ட மூர்த்தி!
    அரகரா உன்போல முனியார் காணேன்;
தெரிந்திலே னென்றுரைத்தார் மனங்கே ளாது
    சிவனயந்து கேட்கவும்நீ யொளிக்க வேண்டா;
பொருந்திலேன் பூருவத்தில் நடந்த செய்கை
    பூரணத்தா லுள்ளபடி புகழ்ந்து சொல்லும்
பரிந்திலேன் மிகப்பரிந்து கேட்டே னையா!
    பழமுனியே கிழமுனியே பயன்செய் வாயே.

விளக்கவுரை :
    
25. பழமுனிவ னென்றுரைத்தீர் கடவு ளாரே!
    பருந்தீபதம்பத்தைப் பலுக்கக் கேளும்;
குழுவுடனே தம்பமதில் யானும் போவேன்
    கோகோகோ சக்கரமும் புரண்டு போகும்;
தழும்பணியச் சாகரங்க ளெங்குந் தானாய்ச்
    சத்தசா கரம்புரண்டே யெங்கும் பாழாய்
அழகுடைய மாதொருத்தி தம்பத் துள்ளாய்
    அரகரா கண்ணாடி லீலை தானே.

விளக்கவுரை :

காகபுசுண்டர் காவியம் 16 - 20 of 33 பாடல்கள்

     
16. செப்புமென்ற புசுண்ட முனி முகத்தை நோக்கிச்
    சிவன் மகிழ்ந்தே ஏது மொழி செப்பு வார்கேள்;
கொப்புமென்ற யுகமாறிப் பிறழுங் காலம்
    குரு நமசி வாயமெங்கே பரந்தா னெங்கே?
அப்பு மெந்தப் பஞ்சகணத் தேவ ரெங்கே?
    அயன்மாலும் சிவன்மூவ ரடக்க மெங்கே?
ஒப்புமிந்த யுகமாறிப் பிறந்த தெங்கே?
    ஓகோகோ முனிநாதா வுரைசெய் வீரே!

விளக்கவுரை :
    
17. உரையென்றீ ருந்தமக்குப் புத்தி போச்சு;
    உம்மோடே சேர்ந்தவர்க்கும் மதிகள் போச்சு
பரையென்றால் பரைநாடி நிலைக்க மாட்டீர்;
    பரமசிவன் தானமென்னும் பேரும் பெற்றீர்;
இரையென்றால் வாய்திறந்து பட்சி போல
    எல்லோரு மப்படியே இறந்திட் டார்கள்;
நிறையென்ற வார்த்தைகளைச் சொன்னே னானால்
    நிசங்கொள்ள தந்தரங்கள் நிசங்கொள் ளாதே?

விளக்கவுரை :
    
18. கொள்ளாமற் போவதுண்டோ மவுன யோகி;
    கோடியிலே உனைப்போல ரிடியோ காணேன்;
உள்ளாக ரிடியொருவ ரில்லா விட்டால்
    யுகவார்த்தை யாருரைப்பார் யானுங் காணேன்;
விள்ளாமற் றீராது முனிவனே! கேள்;
    மெஞ்ஞான பரம்புகுந்த அருள் மெய்ஞ் ஞானி;   
தள்ளாமற் சபையிலுள்ளோர் ரெல்லார் கேட்கச்
     சாற்றிடாய் முனிநாதா! சாற்றிடாயே?

விளக்கவுரை :

    
19. சாற்றுகிறே னுள்ளபடி யுகங்கள் தோறும்
    தமக்குவந்து சொல்லுவதே தவமாய்ப் போச்சு;
மாற்றுகிறேன் கணத்தின்முன் னுரைத்துப் போனேன்;
    வாதாட்ட மெனதாச்சே இனியென் சொல்வேன்?
சேற்றிலே நாட்டியதோர் கம்பம் போலத்
    திரும்பினது போலாச்சு யுகங்கள் தோறும்;
ஆற்றுகிறா னந்தமது ஆகும் போது
    அரகரா அந்நேரம் நடக்கை கேளே.

விளக்கவுரை :
    
20. கேளப்பா நடந்தகதை சிவமே யுண்மை
    கொடியாகச் சக்கரங்கள் திரும்பும் போது
பாளப்பா தசநாதம் மவுனம் பாயும்;
    பரமான மவுனமது பரத்திற் சாடும்;
ஏளப்பா அடுக்குகளும் இடிந்து வீழும்
    இருந்தசதா சிவமோடி மணியில் மீளும்
கேளப்பா இதுகேளா யெவருஞ் செல்வார்
    ஓகோகோ அண்டமெல்லாங் கவிழ்ந்து போமே.   

விளக்கவுரை :

காகபுசுண்டர் காவியம் 11 - 15 of 33 பாடல்கள்

     
11. காகமென்ற வேடமதாய் விருட்ச மீதிற்
    காத்திருந்தார் வசிட்டரவர் கண்டார் நாதர்
ஏகமதா யெட்டான வசிட்ட ரே! நீர்
    எங்குவந்தீர்? வாரும் என்றே இடமு மீயத்
தாகமுடன் ஈசரும்மை யழைக்கச் சொன்னார்.
    சங்கதியைத் தங்களிடஞ் சாற்ற வந்தேன்!
பாகமுடன் எட்டான விவரந் தன்னைப்
    பத்துமெய்ஞ் ஞானபொரு ளருள்பெற் றோரே.

விளக்கவுரை :
    
12. பெற்றோரே யென்றுரைத்தீர் வசிட்ட ரே! நீர்
    பிறந்திறந்தே எட்டாங்காற் பிறந்து வந்தீர்!
சத்தான சத்துகளு மடங்கும் காலம்
    சக்கரமுந் திரும்பிவிட்டாற் சமயம் வேறாம்
சித்தான பஞ்சவர்க ளொடுங்கும் போது
    சேரவே ரிஷிமுனிவர் சித்த ரோடு
முத்தாகப் பஞ்செழுத்தி லொடுக்க மாவார்
    முத்துமணிக் கொடியீன்றாள் முளைத்திட் டீரே.   

விளக்கவுரை :
    
13. முளைத்திட்டீ ரித்தோடெட் டுவிசை வந்தீர்
    முறையிட்டீ ரிவ்வண்ணம் பெருமை பெற்றீர்!
களைத்திட்டுப் போகாதீர் சொல்லக் கேளும்;
    கண்டமதில் விடம்பூண்டார்க் கலுவ லென்ன?
கிளைத்திட்டுப் போனக்கால் மறந்து போவார்
    கிளர்நான்கு யுகந்தோறு மிந்தச் செய்கை
பிழைத்திட்டுப் போவமென்றா லங்கே போவோம்
    பேய்பிடித்தோர் வார்த்தைசொல்ல நீர்வந் தீரே.

விளக்கவுரை :
    
14. வந்தீரே வசிட்டரே! இன்னங் கேளும்;
    வளமைதான் சொல்லிவந்தேன் வேடம் நீங்கி
இந்தமா மரக்கொம்பி லிருந்தே னிப்போ
    திதுவேளை யெவ்வளவோ சனமோ காணும்
அந்தமோ ஆதியோ இரண்டுங் காணார்
    அவர்களெல்லாம் ரிஷியோகி சித்த ரானார்   
சந்தேக முமக்குரைக்கப் போகா தையா!
     சாமிக்கே சொல்லுமையா இதோவந் தேனே.

விளக்கவுரை :
    
15. வந்தேனே யென்றுரைத்த வாறு கொண்டு
    வசிட்டருமே வாயுலர்ந்து காலும் பின்னி
இந்தேனே முனிநாதா! சரணங் காப்பீர்
    என்றுசிவன் சபைநாடி முனிவர் வந்தார்.
மைந்தனையே யீன்றருளுங் கடவுள் நாதா!
    மாமுனிவன் வாயெடுக்கப் புசுண்டர் சொல்வார்;
சிந்தனைசெய் ஈச்சரனே வந்தேனையா
    சிவசிவா இன்னதென்று செப்பி டீரே?

விளக்கவுரை :

காகபுசுண்டர் காவியம் 6 - 10 of 33 பாடல்கள்

     
6. அறிவார்கள் ரிஷிசித்தர் முனிவோ ரையா!
    அரகரா! அதுக்குக்கோ ளாறென் றக்கால்
பொறியாகப் புசுண்டமுனி சொல்வா ரையா!
    போயழைக்கக் கோளாறி வசிட்ட ராகும்
நெறியாக இவ்வகைநா னறிவே னையா!
    நிலைத்தமொழி புசுண்டரலால் மற்றோர் சொல்லார்;   
புரிவாரு மிவ்வளவென் றுரைத்தார் மாயர்
     பொருள் ஞானக் கடவுளப்பா மகிழ்ச்சி பூண்டார்.

விளக்கவுரை :
    
7. மகிழ்ச்சியுடன் மார்க்கண்டா வாராய் கண்ணே!
    வரலாறு நீயெவ்வா றறிவாய் சொல்வாய்;
சுகட்சியுடன் கருதிப்பார் யுகங்கள் தோறும்
    சூட்சமிந்த மாலோன்றன் வயிற்றிற் சேர்வான்
அகட்சியுடன் ஆலிலைமே லிருப்பா ரையா!
    அப்போதே இவரிடத்தி லெல்லா ஞானம்
இகழ்ச்சியுட னிவற்குப்பின் எவரோ காணேன்
    இவ்வார்த்தை நானறியே னவரைக் கேளீர்.

விளக்கவுரை :
    
8. கேளுமென்றான் மார்க்கண்டன் சிவன்தா னப்போ
    கிருபையுட னிவ்வளவுமறிவா யோடா?
ஆளுகின்ற ஈசனுநா மறியோ மிந்த
    அருமைதனை நீயறிந்தா யருமைப் பிள்ளாய்!
காளகண்டர் மாயோனைச் சொல்வீ ரென்றார்
    கருவேது நீயறிந்த வாறு மேது!
பாளுகின்ற முப்பாழுந் தாண்டி நின்ற
    பரஞான சின்மயமுன் பகர்ந்தி டீரே.

விளக்கவுரை :
    
9. பரமான பரமகயி லாச வாசா!
    பார்த்திருப்போ மாலிலைமேற் பள்ளி யாகித்
தரமான புசுண்டமுனி யந்த வேள
    சக்கரத்தைப் புரளவொட்டார் தவத்தி னாலே
தூரமாக எவ்வாறோ திரும்பப் போவார்
    சூட்சமதை நாமறிவோம் பின்னே தோதான்
வரமான வரமளித்த சூரன் வாழ்வே
    வசிட்டர்போ யழைத்துவரத் தகுமென் றாரே.

விளக்கவுரை :


10. தகுமென்ற வார்த்தைதனை யறிந்தே யீசர்
    தவமான வசிட்டரே புசுண்டர் சாகை
அகமகிழ அங்கேகி அவர்க்கு ரைத்தே
    அவரையிங்குச் சபைக்கழைத்து வருவா யென்ன
செகமான செகமுழுது மாண்ட சோதி
    திருவடிக்கே நமஸ்கரித்துத் திரும்பி னார்பின்   
உகமானந் தனையறிந்தும் அரனார் சொன்ன
     உளவுகண்டார் புசுண்டரெனுங் காகந் தானே.

விளக்கவுரை :

காகபுசுண்டர் காவியம் 1 - 5 of 33 பாடல்கள்


காப்பு

கணபதியே அடியாகி அகில மாகிக்
    காரணத்தின் குருவாகிக் காட்சி யாகிக்
குணபதியே கொங்கைமின்னாள் வெள்ளை ஞானக்
    குருநிலையாய் அருள் விளங்கும் கொம்பே ஞானக்
கனவினிலும் நினைவினிலும் ஒளியாய் நின்ற
    காரணத்தின் வடிவாகிக் கருத்துள் ளாகிப்
பணியரவம் பூண்ட சிவ வாசி நேர்மை
    பாடுகின்றேன் காவியந்தா னெண்ணிப் பாரே.

விளக்கவுரை :

நூல்


1. எண்ணியெண்ணிக் காவியத்தை எடுத்துப் பாராய்;
    எந்நேரங் காமசிந்தை யிதுவே நோக்கும்
பண்ணிபன்றி பலகுட்டி போட்டா லென்ன
    பதியானைக் குட்டியொரு குட்டி யாமோ?
சண்ணியுண்ணி யிந்நூலை நன்றாய்ப் பாரு
    சக்கரமும் மக்கரமும் நன்றாய்த் தோணும்;
தண்ணி தண்ணி யென்றலைந்தால் தாகம் போமோ?
    சாத்திரத்தி லேபுகட்டித் தள்ளி யேறே.

விளக்கவுரை :
   
2. புகட்டினாள் தசதீட்சை மகிமை தன்னைப்
    பூரிப்பா லெனக்களித்தே அகண்டந் தோறும்
சகட்டினாள் சகலசித்து மாடச் சொன்னாள்
    சந்திரபுட் கரணிதனில் தானஞ் சொன்னாள்
பகட்டினா ளுலகமெல்லாம் முக்கோணத்திற்
    பரஞான சிவபோதம் பண்பாய்ச் சொன்னான்   
அகட்டினா லைவர்களை யீன்றா ளம்மன்
    அந்தருமை சொல்லவினி அடியாள் கேளே.

விளக்கவுரை :
    
3. கேளப்பா ஈசனொரு காலந் தன்னிற்
    கிருபையுடன் சபை கூடியிருக்கும் போது
வாளப்பா மாலயர் தம் முகத்தை நோக்கி,
    வந்தவா றெவ்வகையோ சென்ற தேதோ
கோளப்பா செயகால லயந்தா னெங்கே?
    குரு நமசி வாயமெங்கே? நீங்க ளெங்கே?
ஆளப்பா ஐவர்களு மொடுக்க மெங்கே?
    அறுத்தெனக்கு இன்னவகை யுரைசெய் வீரே.

விளக்கவுரை :
    
4. இன்னவகை ஈசரவர் கேட்கும் போதில்
    எல்லோரும் வாய்மூடி யிருந்தா ரப்போ
சொன்னவகை தனையறிந்து மார்க்கண் டேயன்
    சொல்லுவான் குழந்தையவன் கலக லென்ன
அன்னைதனை முகம்பார்த்து மாலை நோக்கி
    அரிகரி! ஈசர்மொழிக் குரைநீர் சொல்வீர்;
பின்னைவகை யாருரைப்பார் மாயை மூர்த்தி
    பேசாம லிருந்துவிட்டால் மொழிவா ரெங்கே?

விளக்கவுரை :

    
5. எங்கென்று மார்க்கண்ட னெடுத்துச் சொல்ல
    என்ன சொல்வா ரேகவெளிச் சிவனை நோக்கிக்
கங்கைதனைப் பூண்டானே! கடவு ளோனே!
    காரணமே! பூரணமே! கண்ணே! மின்னே!
சங்கையினி யேதறிவேன் மகுடச் சோதி
    சந்திரனைப் பூண்டிருந்து தவம்பெற் றோனே!
மங்கையிடப் பாகம்வைத்த மகுடத் தோனே!
    மாமுனிகள் ரிஷிசித்தர் அறிவார் காணே.

விளக்கவுரை :

காகபுசுண்டர் உபநிடதம் 26 - 31 of 31 பாடல்கள்

     
26. பார்ப்பதற்கு நீண்டதுவாம் குறுகி வட்டம்
    பரிதிமதி யுதயமெனப் பளிங்கா காசம்
தாப்பதற்கு மூன்றுசுழி பின்னாய் நிற்கும்
    சாக்கிரத்தி னடையாளந் தாக்கிப் பாரு;
சேர்ப்பதற்குச் சுழுமுனையென் றிதற்கு நாமம்;
    திரிகோணக் குண்டலியே சிவசொ ரூபம்;
காப்பதற்கு நடுநாடி யூடே சென்று
    கால்நிறுத்திப் பிடரிவழிக் கண்ணைப் பாரே.

விளக்கவுரை :
    
27. கண்ணான பிடரிமுது கோடு ரந்த்ரம்
    கால்கூட்டிப் பார்த்தாலே தலைமே லாகும்;   
விண்ணான பெருவெளிக்கு ளீன மானால்
    விமோசனமாம் நிராலம்ப மெனத்தான் சொல்லும்;
ஒண்ணான யோகமல்லோ இந்த நிட்டை
    உபதேசம் பெற்றவர்க்கே உண்மை யாகும்;
அண்ணாந்து பார்த்திருந்தால் வருமோ ஞானம்?
    அசபாமந் திரத்யானம் அறைகின் றேனே;

விளக்கவுரை :

    
28. அறைகின்றேன் அசபையெனும் பிராணான் மாவை
    அகண்டபரா பரத்தினுள்ளே ஐக்யஞ் செய்யக்
குறைவில்லை ஓங்கார மூல வட்டக்
    குண்டலியாய் நின்றிடத்திற் குணாதீ தந்தான்
நிறைகின்றேன் நாசிகா ரந்த்ர வாயு
    நீக்காம லேகமாய் நிர்ண யித்துப்
பறைகின்றே னட்சரசா தனமுந் தள்ளிப்
    பந்தமற்ற மாமோட்சப் பதிபெற் றேனே.

விளக்கவுரை :
    
29. புதிபுருவத் தடிமுனைக்கீழ் அண்ணாக் கென்னும்
    பவள நிறம் போன்றிருக்குந் திரிகோ ணந்தான்
துதிபெறுசிங் குவையுபத்த சுகந்தி யாகச்
    சுபாவசா தனையினால் மவுன மாச்சு;
விதிவிகிதப் பிராரத்வ கர்மம் போச்சு;
    விடயபோ கத்தினிச்சை விட்டுப்போச்சு;
மதியெனுமோர் வாயுவது அமிர்த மாச்சு;
    வத்துவதே காரணமா மகிமை யாச்சே.

விளக்கவுரை :

    
30. மகிமையென்று யோகசா தனையி னாலே
    மகாகாச நிருவிகற்ப வாழ்க்கை யாச்சே;
அகமகமென் றாணவத்தை நீக்க லாச்சே;
    அத்துவிதப் பிரமசித்தா னந்த காரம்
சகளாதீ தங்கடந்து களாதீ தத்தில்
    சாதித்தேன் தன்மனமாய்ச் சார்ந்து போச்சு;
பகலிருளில் லாதவெளிக் கப்பா லாச்சு;
    பந்தமற்ற மாமோட்சப் பதம்பெற்ற றேனே.

விளக்கவுரை :

    
31. பெற்றதனைச் சொல்லிவிட்டேன் வடநூல் பாடை
    பிரிந்து முப்பத் தொன்றினிலே பிரம ஞானம்   
தத்துவத்தைச் சொல்லிவைத்தேன் யோகி யானால்
    சாதனைசெய் வானறிவான் சைதன் யத்தில்
முத்தியடை வானதிலே நிருத்தஞ் செய்வான்
    மும்மூட்சுத் துவமறிந்த மூர்த்தி யாவான்
நித்யமெனு முபநிடதப் பொருள்தான் சொல்லும்
    நிலவரத்தால் யோகநிட்டை நிறைந்து முற்றே.

விளக்கவுரை :

காகபுசுண்டர் உபநிடதம் 21 - 25 of 31 பாடல்கள்

     
21. பேர்கொண்டேன் சொரூபசித்தி யனேகம் பெற்றேன்
    பெரியோர்கள் தங்களுக்குப் பிரிய னானேன்
வேர்கண்டே னாயிரத்தெட் டண்ட கூட
    வீதியெல்லா மோர்நொடிக்குள் விரைந்து சென்றேன்
தார் கண்டேன் பிருதிவியின் கூறு கண்டேன்;
    சாத்திரவே தங்கள்வெகு சாயுங் கண்டேன்;
ஊர்கண்டேன் மூவர்பிறப் பேழுங் கண்டேன்;
    ஓகோகோ இவையெல்லாம் யோகத் தாட்டே.

விளக்கவுரை :

    
22. யோகத்தின் சாலம்ப நிராலம் பந்தான்
    உரைத்தாரே பெரியோர்க ளிரண்டா மென்றே;
ஆகமத்தின் படியாலே சாலம் பந்தான்
    அநித்யமல்ல நித்தியமென் றறைய லாகும்;
சோகத்தைப் போக்கிவிடும் நிராலம் பந்தான்;
    சூன்யவபிப் பிராயமதே சொரூப முத்தி;
மோகசித்த விருத்திகளைச் சுத்தம் பண்ணி
    மம்மூட்சு பிரமைக்ய மோட்ச மென்னே.

விளக்கவுரை :

    
23. மோட்சசாம் ராச்யத்தில் மனஞ்செல் லாத
    மூடர்களுக் கபரோட்சம் மொழிய லாகா;   
சூட்சமறிந் தாலவனுக் கனுசந் தானம்
    சொரூபலட்ச ணந்தெரியச் சொல்ல லாகும்;
தாட்சியில்லை சாதனைத் துட்ட யத்தில்
    சட்சேந்த்ரி யாநாதா தீத மாகும்;
மூச்சுலயப் படுவதல்லோ பிரம நிட்டை
    மூலவிந்து களாதீத மொழிய லாமே.

விளக்கவுரை :

    
24. மொழிவதிலே அகாரமெனும் பிரண வத்தின்
    மோனபிரா ணாதியதே நாத மாச்சு;
தெளியுமிந்த ஓங்காரத் தொனிவி டாமற்
    சிற்ககனத் தேலயமாய்ச் சேர்க்க வேணும்;
ஒளிதானே நிராலம்பம் நிர்வி சேடம்
    உத்கிருட்ட பரமபத வுபகா ரத்தான்
வெளியோடே வெளிசேர்ந்தால் வந்து வாச்சு
    விரோதசத் ராதியெலாம் விருத்த மாச்சே.

விளக்கவுரை :
    
25. விருத்தமா மனாதிபிரா ரத்வ கர்மம்;
    விடயாதிப்ர சஞ்சவீட் டுமங்க ளெல்லாம்
ஒறுத்தவனே யோகியென்பா னவனா ரூடன்
    உலகமெலாந் தானவ துண்மை யாகும்;
நிறுத்தவென்றால் நாசிகாக் கிரக வான்மா
    நிலைபுருவ மத்தியிலே நிட்ட னாகிக்
கருத்தழிந்து நின்றவிடம் சாட்சாத் காரம்
    கண்மூக்கு மத்தியிலே கண்டு பாரே.

விளக்கவுரை :

காகபுசுண்டர் உபநிடதம் 16 - 20 of 31 பாடல்கள்

     
16. அரிதில்லை பிரமவியா கிருத சீவன்
    ஐக்கியமெனுஞ் சந்த்யானம் அப்ய சித்துச்
சுருதிகயிற் றால்மனமாம் யானை தன்னை
    சுருக்கிட்டுச் சிக்கெனவே துறையிற் கட்டிக்
குருவுரைத்த சிரவணத்தின் படியே நின்றால்
    குதியாகு பிரபஞ்ச கோட்டிற் றானும்
திரிவதில்லை திரிந்தாலும் மதமி ராது;
    சீவவை ராக்யமெனுந் திறமி தானே.

விளக்கவுரை :
    
17. திரமென்ன ஹம்சோகம் மந்த்ரா தீதம்
    திருசியசூன் யாதிகளே தியான மாகும்;
சரமென்ன சாக்ரசத்தாம் வித்தை சூன்யம்
    சாதனையே சமாதியெனத் தானே போகும்;
வரமென்ன விபரீத விர்த்தி மார்க்கம்
    வாசனையே சாதனமாய் வகுத்துக் காட்டும்;
அரமென்ன இதையறிந்தால் யோகி யாவான்
    அஞ்ஞான மவனிடத்தி லணுகா தென்னே.

விளக்கவுரை :

    
18. என்னவே அஞ்ஞானி உலகா சாரத்
    திச்சையினாற் றர்மாத்த வியாபா ரங்கள்
முன்னமே செய்ததன்பின் மரண மானால்
    மோட்சமதற் கனுபவத்தின் மொழிகேட் பீரேல்
வின்னமதா யாங்கார பஞ்ச பூத
    விடயவுபா திகளாலே மேவிக் கொண்டு
தன்னிமைய இலிங்கசரீ ரத்தோ டொத்துச்
    சதாகாலம் போக்குவரத் தாகுந் தானே.

விளக்கவுரை :
    
19. தானிந்தப் படியாகச் சீவ ரெல்லாஞ்
    சகசபிரா ரத்வவசத் தாகி னார்கள்;   
ஏனிந்தக் கூரபிமா னத்திலே னாலே
    இத்தியாதி குணங்களெல்லாம் வியாபிக் கும்பார்
வானிந்து போன்மெலிந்து வளர்ந்து போகும்
    வர்த்திக்கு மஞ்ஞானம் மாற்ற வேண்டி
நானிந்தப் பிரமவுபா சனையைப் பற்றி
    நாட்டம்வைத்தே வித்தையெல்லாம் நாச மாச்சே.

விளக்கவுரை :

    
20. ஆச்சப்பா எத்தனையோ கோடி காலம்
    அந்தந்தப் பிரளயத்துக் கதுவாய் நின்றேன்;
மூச்சப்பா வோடவில்லை பிரமா தீத
    முத்திபெற்றேன் பிரமாண்ட முடிவிற் சென்றேன்;
கூச்சப்பா வற்றபிர்ம சாட்சாத் காரம்
    குழிபாத மாகியகோ சரமாய் நின்றேன்;
பேச்சப்பா சராசரங்க ளுதிக்கும் போது
    பின்னுமந்தப் புசுண்டனெனப் பேர்கொண்டேனே.

விளக்கவுரை :

காகபுசுண்டர் உபநிடதம் 11 - 15 of 31 பாடல்கள்

     
11. விட்டுப்போம் சமுசார வியாபா ரங்கள்
    விடயசுக இச்சைவைத்தால் விவேகம் போச்சு;   
தொட்டுவிட லாகாது ஞான மார்க்கந்
    துரிய நிலை நன்றாகத் தோன்று மட்டும்
எட்டுகின்ற பரியந்தம் சுருதி வாக்கியத்
    தெண்ணமெனுந் தியானத்தா லெய்தும் முத்தி;
தட்டுகின்ற சீவத்வம் தனக்கில் லாமற்
    சமாதியுற்றால் நாமதுவே சாட்சாத் காரம்.

விளக்கவுரை :
    
12. சாட்சாதி பிரமத்தால் பூர்வ கர்மம்
    தத்வாதி வாசனைகள் தாமே போகும்;
சூட்சாதி பிராந்தியெனும் மாயா சத்தி
    தொடராமற் சேர்வதுவே சொரூப ஞானம்;
தீட்சையினாற் பிரமாண்டம் பிண்டாண் டங்கள்
    சிருட்டி முதல் யாவற்றுந் தெரியும் நன்றாய்;
காட்சியென்ன ஏகவத்து வொன்றல் லாமற்
    காண்பதெல்லாம் வியர்த்தமெனக் கண்டு கொள்ளே.

விளக்கவுரை :
    
13. கண்டு பார் மூடமெனும் அஞ்ஞா னிக்குக்
    காணாது சீவான்மா பரமான் மாவும்;
தொண்டுபட்டுக் குருமுகத்தில் விசேட மாகச்
    சுருதியெனும் வேதாந்தம் அப்பிய சித்தே
உண்டுமனு பவஞானங் கிர்த்யா கிர்த்யம்
    யோகிதனக்கு ஏதேனுந் தேவை யில்லை;
விண்டுசொல்வோம் நதிகடக்க வோட மல்லால்
    விடயத்தாற் சாதனங்கள் வீணா மென்றே.

விளக்கவுரை :
    
14. வீணல்லோ சாதனப்ர யோச னங்கள்
    மெய்ஞ்ஞான அபரோட்சம் வந்த போது?
வீணல்லோ வேதபா டத்தி னிச்சை
    வியோமபரி பூரணத்தில் மேவி நின்றால்?
வீணல்லோ இருட்டறையிற் பொருளைக் காண
    விளக்கதனை மறந்தவன்கை விடுதல் போலும்
வீணல்லோ தியானதா ரணைக ளெல்லாம்?
    மெய்பிரகா சிக்கும்வரை வேணுந் தானே.

விளக்கவுரை :

    
15. வேணுமென்றா லெள்ளுக்கு ளெண்ணெய் போலும்
    வித்தினிடத் தடங்கிநின்ற விருட்சம் போலும்   
காணுகின்ற பூவிலுறை வாசம் போலும்
    கன்றாவின் பாலிலுள்ள நெய்யைப் போலும்
தோணுமயில் முட்டையின்மேல் வன்னம் போலும்
    தூலமதிற் சூட்சுமந்தான் துலங்கி நிற்கும்;
ஆணவத்தாற் சாதனத்தை மறந்தாயானால்
    அபரோட்ச ஞானமுத்தி யரிது தானே.

விளக்கவுரை :

காகபுசுண்டர் உபநிடதம் 6 - 10 of 31 பாடல்கள்

     
6. சத்தியுடன் ரசோகுணந்தான் நேத்ரத் தானம்
    தனிப்போக மிதனோடே சார்ந்த ஆன்மா
வெற்றிபெறும் சீவாத்மா அகார மாச்சு
    விவகார சீவனிதை விராட்டென் பார்கள்;
வித்தையெனு மவித்தையிலே பிரதி விம்பம்
    விலாசமிந்தத் தூலசூக்க விருத்தி யாச்சு;
தத்வமசி வாக்குச்சோ தனையி னாலே
    தான்கடந்து சூட்சுமத்திற் சார்ந்து கொள்ளே.

விளக்கவுரை :

    
7. கொள்ளடா ஞானேந்திரி யங்க ளைந்து
    கூடினவை கர்மேந்திரி யங்க ளைந்து   
தள்ளடா பிராணாதி வாயு வைந்து
    சார்வான மனம்புத்தி தானி ரண்டு
விள்ளடா பதினேழு தத்து வங்கள்
    விர்த்தியெனுஞ் சூட்சுமமாம் இரண் கர்ப்பத்
துள்ளடா அபிமானி சைதன்ய னாகுஞ்
    சொப்பனா வத்தையெனச் சொல்லும் நூலே.

விளக்கவுரை :
    
8. நூலான சாத்மிகமாம் அகங்கா ரத்துள்
    நுழைந்தவிச்சா சக்தியல்லோ நுணுக்க மாச்சு?
காலான கண்டமெனுந் தானத் துள்ளே
    கலந்திருக்கும் போகமல்லோ இச்சா போகம்?
நாலான ஆன்மாவே அந்த ரான்மா
    ஞானமிந்தப் படியறிந்தா லுகார மாச்சு;
தூலமெனுஞ் சூட்சுமத்தைக் கடந்து நின்று
    சொல்லுகிறேன் காரணத்தின் சுயம்பு தானே.

விளக்கவுரை :
    
9. தானல்யாகக் கிருதமெனுஞ் சரீரத் துக்குத்
    தானமதே இதயமா ஞான சத்தி
வானமதே அகங்காரம் வித்தை யாகில்
    வருஞ் சுழுத்தி யபிமானி பிராக்ஞ னாகும்
கோனிதற்கே ஆனந்த போக மாகும்
    கூடுகின்ற ஆன்மாவே பரமான் மாவாம்
கானிதற்குப் பரமான்மா சீவ னிந்தக்
    காரணமே மகாரமெனக் கண்டு கொள்ளே.

விளக்கவுரை :
    
10. கொள்ளுமந்தப் பொருள்தானே சத்து மல்ல
    கூறான அசத்துமல்ல கூர்மை யல்ல
உள்ளுநிரா மயமல்ல சர்வமய மல்ல
    உற்றுப்பார் மூன்றெழுத்தும் ஏக மாச்சு;
தள்ளுகின்ற பொருளல்ல தள்ளா தல்ல
    தான்பிரம ரகசியஞ்சந் தான முத்தி
விள்ளுமந்தப் படிதானே வேத பாடம்
    விசாரணையாற் சமாதிசெய்ய விட்டுப் போமே.

விளக்கவுரை :

காகபுசுண்டர் உபநிடதம் 1 - 5 of 31 பாடல்கள்


காப்பு

எண்சீர் விருத்தம்


ஆதியெனை யீன்ற குரு பாதங் காப்பு;
    அத்துவிதம் பிரணவத்தி னருளே காப்பு;
நீதியா மாரூட ஞானம் பெற்ற
    நிர்மலமாஞ் சித்தருடைப் பாதங் காப்பு;
சோதியெனப் பாடிவைத்தேன் முப்பத் தொன்றிற்
    துரியாதீ தப்பொருளைத் துலக்க மாகத்
தீதில்லாக் குணமுடைய பிள்ளை யானார்
    சீவேச ஐக்யமது தெரியுந் தானே.
   
விளக்கவுரை :
    
நூல்


1. தானென்ற குருவினுப தேசத் தாலே
    தனுகரண அவித்தை யெல்லாந் தவறுண்டேபோம்;
வானென்ற சுவானுபவ ஞான முண்டாம்;
    மவுனாதி யோகத்தின் வாழ்க்கை யெய்தும்;
நானென்ற பிரபஞ்ச வுற்பத் திக்கு
    நாதாநீ தக்யானம் நன்றா யெய்தும்;
கோனென்ற கொங்கணவர் தமக்குச் சொன்ன
    குறிப்பான யோகமிதைக் கூர்ந்து பாரே.

விளக்கவுரை :

2. பாருநீ பிரமநிலை யார்தான் சொல்வார்?
    பதமில்லை யாதெனினும் பவ்ய மில்லை
சேருமிந்தப் பிரமாணந் தானு ணர்ந்து
    தெரிவிக்கப் படாதருளிற் சிவசொ ரூபம்;
ஊருகீன்ற காலத்ர யங்க ளாலே
    உபாதிக்கப் பர தத்வ முற்பத் திக்கும்
சாருமிந்த வுபாதான காரணத்தின்
    சம்பந்த மில்லாத சாட்சிதானே.

விளக்கவுரை :

    
3. சாட்சிசத்தா யதீதகுணா தீத மாகிச்
    சட்சுமனத் தாலறியத் தகாது யாதும்   
சாட்சியதே யேதுசா தனமுந் தள்ளிச்
    சகலவந்தர் யாமித்வ சர்வ பூத
சாட்சியினை யிவ்வளவவ் வளவா மென்று
    தனைக்குணித்து நிர்ணயிக்கத் தகாது யோகம்
சாட்சியதே ஞாதுர்ஞான ஞேய ரூபஞ்
    சத்தாதி பிரமாதி தானே சொல்வாம்.

விளக்கவுரை :

    
4. சொல்லுமெனக் கேட்டுகந்த மாணாக் காவுன்
    தூலகா ரணப்பிரமந் துரியா தீதம்
அல்லுமல்ல பகலுமல்ல நிட்க ளங்கம்
    அம்சோகம் அசபாமந் திரத்தி யானம்
செல்லுமவ னேநானென் றபிமா னிக்குச்
    சித்திவிர்த்தி நிரோதகமாம் யோகத் தாலே
வெல்லறிஞர் பலபோக விர்த்தி யோகி
    விவேகதியா னாதிகளே மேலாம் பிர்மம்.

விளக்கவுரை :

    
5. பிர்மசுரோத் ராதிஞானேந் திரிய மைந்தும்
    பேசுதர்க்க வாக்காதியிந் திரிய மைந்தும்
கர்மமெனுஞ் சத்தாதி விடய மைந்தும்
    கரணாதி நான்குபிரா ணாதி யைந்தும்
வர்மமிவை யிருபத்து நான்குங் கூடி
    வருந்தூல சரீரவிராட் டெனவே சொல்லும்
தர்மவத்தைச் சாக்கிரபி மானி விசுவன்
    தனக்குவமை யாங்கிரியா சத்தி தானே.

விளக்கவுரை :

காகபுசுண்டர் ஞானம் 76 - 79 of 79 பாடல்கள்


76. பூசையடா செய்துமிகப் பதனம் பண்ணு
    புத்திரனே பேய்ப்பீர்க்குத் தயிலம் வாங்கி
ஆசைபுல்லா மணக்கதுவு மதுபோல் வாங்கி
    அப்பனே கேசரியின் நெய்யுஞ் சேர்த்தே
ஓசையுடன் தேவாங்கு பித்துஞ் சேர்த்தே
    உத்தமனே தலைப்பிண்டந் தயிலஞ் சேர்த்துப்
பாசையடா பேசாம லரைத்து மைந்தா!
    பாலகனே சவாதோடு புனுகு சேரே.

விளக்கவுரை :
    
77. சேரடா அணுப்போலே புருவத் திட்டுத்
    தீர்க்கமுடன் நீ தானுஞ் செல்லும் போதில்
ஆரடா வுன்னைத்தான் ஆர்தான் காண்பார்?
    அண்டமெனும் பிரமத்தி னருளி னாலே
நேரடா திகைப்பூண்டு கொண்டு வந்து
    நிச்சயமாய் முன்சொன்ன தயிலம் விட்டு
வீரடா அரைத்தபின்பு புருவத் திட்டால்
    வேசையர்கள் வெகுபேர்கள் மயங்கு வாரே.

விளக்கவுரை :
    
78. வாரான தில்லைப்பால் கருந்து ளசியும்
    வவ்வாலின் பித்துடனே மந்திப் பித்துஞ்
சீராக முன்சொன்ன கருவை விட்டுத்
    திடமாக அரைத்திடுவாய் சாம மொன்று
நேராக அரைத்ததையு மெடுத்து மைந்தா
    நிச்சயமாய்ப் புருவத்தி லிட்டுப் பார்க்க
வீராகப் பாதாளம் பிளந்தே யோடும்
    வேதாந்த சாரணையை விரும்பிப் பாரே.

விளக்கவுரை :
    
79. பாரடா பரப்பிரமத் தூடே சென்று
    பரிதிமதி அக்கினியும் மூன்று மொன்றாய்
நேரடா ஆதியுந்தான் எதிரி தன்னை
    நிச்சயமாய்ப் பார்த்திடவே நீறிப் போவான்.
கூரடா கோடானு கோடி சித்துக்
    குறித்திடவே ஆகுமடா பிரமத் தாலே
வீரடா இந்நூலைக் கொடுத் திடாதே
    வெற்றியுடன் எண்பதுமே விளங்க முற்றே.

விளக்கவுரை :

காகபுசுண்டர் ஞானம் 71 - 75 of 79 பாடல்கள்

     
71. பாரடா வாணியுந்தா னிருந்த வீடு
    பாலகனே சொல்லுகிறேன் பண்பாய்க் கேளாய்;
ஆரடா அண்ணாக்கின் கொடியி னூடே
    அண்டத்தைப் பற்றியடா விழுது போலே
நேரடா நரம்பது தான் பொருந்தி நிற்கும்
    நிலையான அக்கினியின் மத்தி தன்னில்
வீரடா அதுவழியே அருள்தான் பாய்ந்து
    விண்ணுலகில் வேணதமிழ் சொல்லு வாளே.

விளக்கவுரை :

72. சொல்லுவா ளனந்தமறை வேத மெல்லாம்
    சுருதியடா முடிந்தெழுந்த பிரமத் தாலே
வெல்லுவார் தனையறிந்த பெரியோ ரெல்லாம்
    வீறாண்மை பேசார்கள் மவுன மாகி
அல்லுபக லற்றதொரு பிரமந் தன்னை
    ஆரறிவா ருலகத்தி லையா பாரு
சொல்லடங்கு மிடந்தனையுங் கண்டு தேறிச்
    சூத்திரமாய்க் கல்லுப்பு வாங்கு வாங்கு.

விளக்கவுரை :
    
73. வாங்கியே அண்டத்தில் மூளை சேர்த்து
    வளமாக வப்பிலையும் பிசறு மைந்தா!
தாங்கியே திருகுகள்ளிக் குள்ளே வைத்துத்
    தமர்வாயைத் தான்மூடிச் சாபந் தீர்த்தே
ஓங்கியே திங்களுந்தான் மூன்று சென்றால்
    உத்தமனே கள்ளியைத்தான் தரித்துக்கொண்டு
சாங்கமினிச் செய்யாமற் சீலை மண்ணுஞ்
    சத்தியமாய்ச் செய்தபின்னே உலர்த்திப் பாரே.

விளக்கவுரை :
    
74. பாரப்பா வுலர்ந்த தன்பின் எடுத்து மைந்தா!
    பக்தியுடன் கசபுடத்திற் போட்டுப் பாராய்
ஆரப்பா ஆறவைத்தே யெடுக்கும் போதில்
    அருணனிறம் போலிருக்குஞ் செந்தூ ரந்தான்
நேரப்பா அணுப்போலே சரக்குக் கெல்லாம்
    நிச்சயமாய்ப் பூசியுந்தான் புடத்திற் போடு
வீரப்பா நீருமடா நவலோ கந்தான்
    வேதையென்ற வித்தையெல்லாங் கைக்குள் ளாச்சே.

விளக்கவுரை :
    
75. ஆச்சடா வுடம்பிலுள்ள வியாதி யெல்லாம்
    அணுப்போல வுண்டிடவே பறந்து போகும்;
வாச்சடா தேகசித்தி யதிக மாச்சு
    வத்துடனே கூடியுந்தான் வாழ லாச்சு;
மூச்சுடா தலைப்பிண்டங் கொடியு மாவும்
    முத்தியடா வாங்கியபின் தயிலம் வாங்கி
ஏச்சடா தரியாமல் சூடன் சேர்த்தே
    இன்பமுடன் வத்துவையும் பூசை செய்யே.

விளக்கவுரை :

காகபுசுண்டர் ஞானம் 66 - 70 of 79 பாடல்கள்

     
66. காணப்பா சாதிகுலம் எங்கட் கில்லை;
    கருத்துடனே என்குலஞ்சுக் குலந்தான் மைந்தா!
தோணப்பா தோணாமற் சாதி பேதஞ்
    சொல்லுவான் சுருக்கமாய், சுருண்டு போவான்;
வீணப்பா பிரமத்தில் ஆதி காலம்
    வீரமுடன் பிறந்ததடா உயிர்க ளெல்லாம்;
நானப்பா அப்படியே உதித்தேன் முன்னே;
    நன்றாக வுதித்தவிடம் நாடி னேனே.

விளக்கவுரை :
    
67. நாடியே யுதித்தவிடம் அறியாத் தோஷம்
    நடுவாக வந்தவிடம் பாரத் தோஷம்
கூடியே பிறந்தவிடங் காணாத் தோஷம்
    குருபரனை நிந்தனைகள் செய்த தோஷம்
வாடியே வத்தோடே சேராத் தோஷம்
    வம்பரோ டிணங்கியே திரிந்த தோஷம்
கூடியே வுறவற்றே யிருந்த தோஷம்
    கும்பியுங்கற் சிப்பியையும் அறியான் பாவி.

விளக்கவுரை :

68. அறியாத பாவிக்கு ஞான மேது?
    ஆறுமுகன் சொன்னதொரு நூலைப் பாரு;
பரிபாஷை யாகவுந்தான் சொல்ல வில்லை;
    பராக்கிரமம் என்னுடைய நூலைப் பாரு;
விரிவாகச் சித்தர்சொன்ன நூலை யெல்லாம்
    வீணாக மறைப்பாகச் சொன்னா ரையா!
குறியான அண்டமதை யொளித்தே விட்டார்
    கூறினார் வெவ்வேறாய்க் குற்றந் தானே.

விளக்கவுரை :
    
69. குற்றமது வையாமல் அண்டத் தேகிக்
    கூறாத மந்திரத்தின் குறியைப் பார்த்துச்
சித்தமொன்றாய் அந்திசந்தி யுச்சிக் காலம்
    தேவனுக்குப் பூசைசெய்து தெளிவு பெற்றுக்
குற்றமது வையாமல் மனமன் பாலே
    குருபரனை நோக்கியடா தவமே செய்து
பற்றாசை வைத்துமிகப் பார்க்கும் போது
    பராபரையுங் கைவசமே யாகு வாளே.

விளக்கவுரை :
    
70. ஆகுவா ளந்திசந்தி யுச்சி யென்றால்
    அப்பனே ரவிமதியுஞ் சுடர்மூன் றாகும்
ஏகுவாய் மூன்றுமொன்றாய்ப் பின்ன லாகி
    இருந்திடமே பிரமாண்ட நிலைய தாகும்;
போகுமே நீ செய்த காமமெல் லாம்
    புவனைதிரி சூலிகையுடைக் கிருபை யாலே;
வாகுமே வழியோடே சேர்த்தா யானால்
    வாணியுந்தான் நாவில்நடஞ் செய்வாள் பாரே.

விளக்கவுரை :

காகபுசுண்டர் ஞானம் 61 - 65 of 79 பாடல்கள்

     
61. தானென்ற பலரூப மதிகங் காணுந்
    தன்னுடைய தேவதைபோற் பின்னும் காட்டும்
ஊனென்ற பெண்ணைப்போ லுன்னைக் கூடி
    உத்தமனே சையோகஞ் செய்தாற் போலே
தேனென்று மயக்கி வைக்குஞ் சுழுத்தி யாலே
    தித்திப்புப் போலேதான் ருசியைக் காட்டும்
கோனென்ற குருவருளைப் பணிந்து கொண்டு
    குறிப்பறிந்து பூரணத்தின் நிலையைப் பாரே.

விளக்கவுரை :

    
62. நிலையாத சமுத்திரமே சுழுத்தி யாச்சு;
    நின்றிலங்கும் வாசியைத்தான் வெளியிற் சேரு
தலையான அக்கினியப் படியே சேரு;
    சத்தியமாய் ரவிமதியைக் கூடச் சேர்த்து
மலையாமல் ஏகபரா பரனே யென்று
    மனமடங்கி அண்டவுச்சி தன்னைப் பார்க்க
அலையாது மனந்தானும் பரத்திற் சென்று
    ஆகாய வீதிவழி யாட்டும் பாரே.

விளக்கவுரை :

    
63. ஆட்டுமடா ஆசையற்று ரோச மற்றே
    அன்னை சுற்றந் தன்னைமறந்தே அகண்ட மேவும்
பூட்டுமடா நவத்துவா ரங்கள் தம்மைப்
    பொறிகளைந்துஞ் சேருமடா புனித மாகக்
காட்டிலென்ன நாட்டிலென்ன மவுனங் கண்டால்
    காமதேனு கற்பகமும் உனக்கே சித்தி
வீட்டிலே தீபம் வைத்தாற் பிரகா சிக்கும்
    வெளியேறி னாற்றீபம் விழலாய்ப் போமே.

விளக்கவுரை :

64. போமடா புத்திசித்தம் என்ற தாகிப்
    புசுண்டனென்று பேரெடுத்துப் புவனந் தன்னில்
ஆமடா வடசாளி மைந்த னென்றும்
    அருமையாங் கன்னியுடை மைந்த னென்றும்
நாமடா ஐந்துபேர் தம்மி லேதான்
    நாட்டமுடன் முன் பிறந்தேன் நான்தான் மைந்தா!
வாமடா சாண்முழத்திற் காட்சி பார்க்க
    வத்துவுந்தான் ஈச்சரனா ரென்பார் பாரே.

விளக்கவுரை :
    
65. பாரப்பா என் குலந்தான் சொல்லக் கேளு;
    பார்தனிலே பிரமனுடை விந்து வாலே;
ஆரப்பா பிறந்துவிட்டோம் ஐந்து பேரும்;
    ஆகாய அண்டமதை யடுத்தே சென்றேன்;
நேரப்பா வெகுகோடி காலம் வாழ்ந்தேன்
    நிட்டையிலே மனந்தவறா திருந்து கொண்டேன்;
வீரப்பா பேசுவோர் லோகத் தோர்கள்
    விட்டடைந் தொட்டவிடம் விரும்பிக் காணே.

விளக்கவுரை :

காகபுசுண்டர் ஞானம் 56 - 60 of 79 பாடல்கள்


56. ஆச்சென்ற அபுரூப மான போதே
    அட்டமா சித்திவகை யெட்டு மாடும்;
மூச்சொன்றி யடங்கிப்போம் பிரமத் தூடே
    முன்னணியும் பின்னணியு மொன்றாய்ப் போகும்;
காச்சென்று காச்சிவிடு மவுனங் கண்டு
    கலைமாறி நின்றிடமே கனக பீடம்
நீச்சென்று மில்லையடா வுன்னைக் கண்டால்
    நிலைத்ததடா சமாதியென்ற மார்க்கந் தானே.

விளக்கவுரை :
    
57. மார்க்கமுடன் தவசுநிலை யறியா மற்றான்
    மனந்தளர்ந்து திரிவார்கள் லோகத் துள்ளே
ஏக்கமுடன் முப்பதுக்குள் மவுனங் கண்டே
    இளவயசா யிருப்பார்கள் பெரியோர் மைந்தா!
காக்கவே சற்குருவின் பாதங் கண்டு
    கருணையுடன் அவர் பதத்தை வணங்கிப் போற்றித்
தீர்க்கமுடன் பிரமத்தில் மனந்தான் செல்லச்
    சீவனுக்குச் சீவனா யிருக்கலாமே.

விளக்கவுரை :
    
58. இருக்கலாஞ் செடிபூடு கற்ப மில்லை
    ஏகாந்த மானதொரு பிரமந் தன்னில்
உருக்கியே மனமடங்கிப் பார்க்கும் போதே
    உத்தமனே காயமது வுறுதி யாச்சு;
மருக்கியே திரியாமல் மதம்பே சாமல்
    வண்டரோ டிணங்கியடா மருவி டாமல்
குருக்கியே கோளரிடஞ் சேர்ந்தி டாமற்
    குருபாதங் கண்டுமிகப் பணிந்து பாரே.

விளக்கவுரை :
    
59. பாரென்று சொல்லிய மெய்ஞ்ஞான மூர்த்தி!
    பரத்தினுடை அடிமுடியும் பகுந்து சொல்லும்
சீரென்று சொப்பனங்க ளதிக மாகத்
    திடப்படவே காணுமிடந் தீர்க்கஞ் சொல்லும்
காரென்று மணம்பிறந்த இடந்தான் சொல்லும்
    கதிர்மதியுஞ் சுற்றிவரு மார்க்கஞ் சொல்லும்
வீரென்றே உயிர் பிறந்த இடந்தான் சொல்லும்
    வெற்றிபெற இந்தவகை விளம்பு வாயே.

விளக்கவுரை :

60. வாயாலே சொல்லுகிறேன் மகனே கேளு;
    மகத்தான பிரமத்தின் பாதந் தன்னில்
ஓயாமல் முன்சொன்ன நரம்பு பின்னி
    உத்தமனே ரவிமதியுஞ் சுற்றி யாடும்;
மாயாமல் வாசியுந்தான் நடுவே நின்று
    மார்க்கமுடன் சுழுத்தியிடம் மனந்தான் சென்றால்
காயான சுழுத்தியென் றிதற்கு நாமம்
    கண்டுபார் கண்டுகொள்ளப் போதந் தானே.

விளக்கவுரை :

காகபுசுண்டர் ஞானம் 51 - 55 of 79 பாடல்கள்

     
51. மத்தியமாம் வானதிலே வளர்ந்த லிங்கம்
    மகாமேரு வுச்சியிலே வளர்ந்த லிங்கம்
சக்தியும் ஆவியுடையு மான லிங்கம்
    சஞ்சாரச் சமாதியிலே நிறைந்த லிங்கம்
புத்தியால் மனமொன்றாய்ப் புகழ்ந்த லிங்கம்
    பூவருந் தன்னில்தான் முளைத்த லிங்கம்
எத்திசையும் புகழ்ந்திடவே வந்த லிங்கம்
    ஏகபர மானதொரு லிங்கந் தானே.   

விளக்கவுரை :


52. தானென்ற சிறுவீட்டுக் குள்ளே சென்று
    தலைமாறிப் போனதொரு வாசி யைத்தான்
கோனென்ற பிரமத்தி லடக்க மாகக்
    குறித்திடுவாய் மனமடங்கிக் கூர்ந்து பார்க்க
வானொன்றிப் போகுமடா பாணம் பாணம்
    மைந்தனே! உண்டிடவே பசிதான் தீரும்;
தேனென்ற சட்டை களுங் கழன்று போகும்
    தேனுக்குந் தேவனா யிருக்க லாமே.

விளக்கவுரை :
    
53. இருக்கலாம் எந்தெந்த யுகங்க ளுக்கும்
    ஏகாந்த மானதொரு பிரமந் தன்னில்
பெருக்கவே மனமடங்கி மவுனம் பெற்றும்
    பேராசை யாகவுந்தான் பிரமத் துள்ளே
குருக்களைப்போல் அரசனைப்போ லிந்திர னைப்போல்
    குணமான மூவரைப் போற்பிரமத் தூடே
திருக்கெடுத்தே யெந்தெந்த அவதா ரங்கள்
    செய்திடலாம் நிலையறிந்த பெரியோர் தானே.

விளக்கவுரை :
    
54. தானவனே யென்குருவே புசுண்ட நாதா
    தாரணியிலே சீவசெந்தாம் அகண்ட மெல்லாம்
தோணவே மும்மூர்த்தி யிவர்கள் தாமுந்
    துடியாகப் பிரமத்தி லடங்கு மென்றீர்
கோனவனே பின்னுந்தா னகண்ட மெல்லாங்
    குறிப்புடனே படைக்கும்வகைக் குறியுஞ் சொன்னீர்
தானவனே மதுவுண்ணச் சொன்னீ ரையா
    சத்தியமா யதன் விவரஞ் சாற்று வீரே.

விளக்கவுரை :
    
55. சாற்றுகிறே னென்மகனே வாசி நாதா!
    சத்தியமா யண்டத்திற் செல்லும் போது
போற்றுகிற அக்கினியும் பிரவே சித்துப்
    புலன்களைந்துஞ் சேர்ந்ததனாற் போத மாகும்;
மாற்றிலையும் அதிகமடா வுன்றன் தேகம்
    மைந்தனே! அபுரூப மாகு மப்பா!
வாற்றியே நிழற்சாய்கை யற்றுப் போனால்
    வலுத்ததடா காயசித்தி யாச்சுப் பாரே.

விளக்கவுரை :

காகபுசுண்டர் ஞானம் 46 - 50 of 79 பாடல்கள்

     
46. பாரப்பா திருமாலுங் கமலந் தன்னில்
    பல்லாயிரங் கோடி அண்ட வுயிர்க ளெல்லாம்
நேரப்பா அழைத்துமுக் குணத்தைக் காட்டி
    நிலையான சமுத்திரங்கள் பூமி தானும்
சேரப்பா ரவியோடு திங்கள் தானுஞ்
    சிறந்தெழுந்த மலைகாடு சீவ செந்து
விரப்பா நவக்கிரகம் நட்சத் ரங்கள்
    வெற்றியுடன் நால்வேதம் வகுத்த வாறே.

விளக்கவுரை :
    
47. வாறான தெய்வமென்றும் பூத மென்றும்
    வையகத்தில் வானமென்றும் பூமி யென்றும்
கூறான மாமேரு கிரிக ளென்றும்
    கோவிலென்றுந் தீர்த்தமென்றுங் குளமுண டாக்கி
நேராகப் பிரமமே சாட்சி யாக
    நிலைத்தெங்கும் உயிர்தோறும் நிறைந்தா ரையா!
வீராகத் திரியாமல் மவுனம் பார்த்து
    வெற்றிபெற இன்னமுந்தான் உரைக்கக் கேளே;   

விளக்கவுரை :

48. கேளப்பா இப்படியே பிரள யந்தான்
    கிருபையுடன் ஏழுலட்சங் கோடி யானால்
ஆளப்பா அரியயனும் சீவ செந்தும்
    அகண்டமென்ற பிரமத்தி லடங்கு வார்கள்;
நாளப்பா நானுமந்தப் படியே செல்வேன்;
    நலமாக இன்னமுந்தான் அகண்ட மானால்
வாளப்பா காகமென்ற ரூப மானேன்
    வடவரையின் கூடுதொத்தி யிருந்தேன் பாரே.

விளக்கவுரை :
    
49. பாரடா இப்படியே யுகங்கள் தோறும்
    பார்தனில்நா னிருந்தேன்எத் தனையோ கோடி
ஆரடா என்னைப்போல் அறிவா ருண்டோ?
    ஆதியென்ற சித்திக்கும் ஆதி யானேன்
வீரடா விமலரிடஞ் செல்லும் போது
    வெற்றியுட னெனையெடுத்து முத்த மிட்டார்;
காரடா கைலையின்மே லிருக்கச் சொன்னார்!
    காகமென்ற ரூபமா யிருந்தேன் பாரே.

விளக்கவுரை :

    
50. காகமென்ற ரூபமா யிருந்து கொண்டு
    காரணங்கள் அத்தனையும் கருவாய்ப் பார்த்து
வேகமுடன் வெளியோட்ட நிலையாய்ப் பார்க்க
    வெகுதூரம் சுற்றியின்னம் விவரங் காணேன்;
மோகமுடன் பரந்தமனம் அணுவ தாக்கி
    மூர்க்கமுடன் பரவெளியை மனவெளி தாக்க
நாகரீக மாகவுந்தா னண்ட மேவி
    நடுவணைய முச்சிநடு மத்தி தானே.

விளக்கவுரை :

Powered by Blogger.