காகபுசுண்டர் காவியம் 31 - 33 of 33 பாடல்கள்

காகபுசுண்டர் காவியம் 31 - 33 of 33 பாடல்கள்

     
31. வணங்கியவர் வாய்புதைந்து நின்றார் பின்னே
    மாதுகலி யாணியென வசனித் தார்கள்
வணங்கினார் தேவரொடு முனிவர் தாமும்
    மற்றுமுள்ள தேவர்களும் நவபா டாளும்
வணங்கினா ரட்டகசந் திகிரி யெட்டும்
    வாரிதியுஞ் சேடனுமா லயனு மூவர்
வணங்கினார் மிகவணங்கித் தொழுதா ரப்போ
    வாலையவள் மெய்ஞ்ஞானம் அருளீ வாளே.

விளக்கவுரை :
    
32. அருளீவாள் திருமணியை மாலை பூண்டாள்
    அரகரா சின்மயத்தி னீறு பூசிப்
பொருளீவா ளவரவர்க்கும் ஏவல் சொல்லிப்
    பொன்றாத பல்லுயிர்க்கைக் கிடங்கள் வேறாய்த்
தெருளீவாள் சிவயோகந் தெளிவ தற்குச்
    செயலுறுதி யாகவல்லோ தெரிய வேண்டித்
திருளீவாள் தாயான சிறிய வாலை
    சிவசிவா சூட்சம்பூ ரணமு முற்றே.

விளக்கவுரை :

    
33. பூருவத்தில் நடந்தகதை இதுதான் என்று
    புகன்றுவிட்டுப் புசுண்டருந்தம் பதிக்குச் சென்றார்;
காரணத்தி லேவகுத்தே னிந்த ஞானங்
    கம்பமணி வாலைகொலுக் கூட்டமப்பா
நாரணத்தில் நின்றிலங்கும் மவுன வாலை
    நாட்டினாள் சிவராச யோகங் கேளு
ஆரணத்தி பூரணத்தி யருள்மெய்ஞ் ஞானி
    ஆதிசத்தி வேதமுத்தி யருள் செய்வாளே.

விளக்கவுரை :

காகபுசுண்டர் சித்தர், காகபுசுண்டர் காவியம், kakapusundar, kakapusundar kaviyam, siththarkal